”காக்கை தமிழர் சிறப்பிதழ்” தந்திருக்கிறோம்
தன்னடக்கமே தேவை இல்லை என்றுதான் தோன்றுகிறது
கொஞ்சம் திமிரோடு எங்களை நாங்களே தட்டிக்கொடுத்துக் கொள்கிறோம்
இந்த இதழில் வந்துள்ள ஒவ்வொரு படைப்பையும் சின்னக் குறிப்புகளோடு அறிமுகம் செய்ய ஆசையாக இருக்கிறது
எனக்கென்று சில ஆசான்கள் உண்டு
Su Po Agathiyalingam தோழர் அவர்களுள் மிக முக்கியமானவர்
எத்தனை கொடுத்திருக்கிறார்
எத்தனை எடுத்திருக்கிறேன்
ஒரே ஒரு உறுத்தல் எனக்குண்டு. ஒருபோதும் காக்கைக்காக நான் அவரிடம் எதையும் கேட்காத குற்றம் அது
”அறம்”, ”ஒழுக்கம்”, “பழக்கம்”, “பண்பாடு” - எதுவெனக் கேட்பின்
எத்தனை இருக்கு எடுப்பதற்கு
அன்றைய அறம் இன்றைக்கு அப்படி அல்ல. அறம் மாறிக்கொண்டிருக்கிறது
அன்றைய ஒழுக்கம் இன்றைக்கு கேள்விக்கு உள்ளாகிறது. எனவே ஒழுக்கத்தின் கூறுகள் நிலைத்தவை அல்ல
ஊருக்கு ஊர் பழக்கம் மாறுகிறது. காலத்திற்கு காலம் மாறுகிறது. ஆக, பழக்கத்திற்கான லட்சணங்களும் நிலைத்தவை அல்ல
வழக்கமும் அப்படியே
எல்லாம் மாறுகிறபோது சனாதனம் மட்டும் மாறவே மாறாதது என்பது அயோக்கியத்தனம் என்று நிறுவுகிற கட்டுரை இது
சனாதனத்தை எதிர்ப்பவர்கள் மூவேந்தர்களைக் கொண்டாடுவது தவறல்லவா என்ற தோழரின் ஆதங்கம் தோழமை ஆதங்கம்தான்
வாசித்துவிட்டு சொல்லுங்கள்
எல்லாப் புகழும் முத்தையா தோழருக்கு என்ற இன்னொன்றும் இருக்கிறது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்