Sunday, February 14, 2021

தேசத்தைக் காத்தல் செய்வோம்

 





வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளின் ரசிகன் நான்

தோழர் கருப்பு அன்பரசன் முகநூல் பக்கத்தில் இருந்து இந்தப் படத்தை எடுத்தேன்

நெகிழ்ந்து போனேன்

ராணுவத்தில் பணியாற்றும் தனது மகனை போராட்டக் களத்தில் இருக்கும் விவசாயத் தந்தை சென்று சந்தித்த

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த தருணமதுஅந்நியர்களிமிருந்து தேசத்தைக் காக்கிற பணியில் இருக்கும் மகன்

உள்ளூர் கார்பரேட்டுகளிடமிருந்து

தேசத்தின் உயிர்த் தொழிலான விவசாயத்தைக் காக்கிற பணியில் இருக்கும் தந்தை

எகிப்தில் மக்கள் போராட்டத்தின்போது

போராட்டக் களத்தில் இருக்கும் தனது தாயை

அவர்களை அடித்து விரட்ட வேண்டிய பணியில் இருந்த மகன் சந்திக்கிறான்

வாழ்த்துகிறான்

ஆனால் அவர்களை அடித்து விரட்ட வேண்டியது தனது பணி என்கிறான் வேதனையோடு

தாய் சொல்கிறார்

போடா மகனே

நீ போய் உன் வேலையைப் பார்

நான் என் வேலையைப் பார்க்கப் போகிறேன்

நமது தந்தை மகனிடம் என்ன சொல்லிப் பிரிந்திருப்பார்?

நீ முகாம் போ

நான் களம் போகிறேன்

தேசத்தைக் காத்தல் செய்வோம்


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...