Wednesday, February 3, 2021

கவிதை 14

 விற்றுக்கொண்டே இருக்கிறோமென்பது

எம் மீதான உங்கள் குற்றச்சாட்டு
கடலை காடுகளை நதிகளை நீரை
மணலை மலைகளை எண்ணெயை
ஆகாசத்தை விமானத்தை வங்கியை
இன்சூரன்சை
ஏ இந்தாப்பா கைவலிக்கிறது
சுருக்கமா சொல்கிறேன்
அனைத்தையும் விற்பதற்காகத்தானே
வாக்குகளை வாங்கினோம்
ஈன விலைக்கு விற்கிறோமென்பது
அடுத்தக் குற்றச்சாட்டு
எமக்கு வாக்களித்த மக்கள் ஆசையற்றவர்கள்
மலிவாகத்தான் கொடுத்தனர் தம் வாக்குகளை
நாங்களும் மலிவாகவே விற்கிறோம்
பாரம் குறைவதென்பது ஜென் சுகம் தெரியுமா
குறைத்திருக்கிறோம்
விற்பதற்கு இனி ஏதுமில்லை என்ற ஏளனம் ஆகாது
அனைத்தையும் அவர்களுக்கு விற்ற எங்களுக்கு
அவர்களை விற்கவும் தெரியும்

01.02.2021 அன்று நிதிநிலை அறிக்கை வாசித்து முடிக்கப்பட்டபோது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...