Sunday, February 14, 2021

கவிதை 16

 அக்காப் பாப்பாவும்

தங்கச்சிப் பாப்பாவும்
படுக்கை அறைச் சுவரில்
வரைய ஆரம்பித்தார்கள்
அக்காப் பாப்பா மரமொன்று வரைய
தங்கச்சிப் பாப்பா மரம்போன்ற ஒன்றை வரைந்தாள்
மரம் போன்றதன் கிளை போன்றதன் மேல்
பறவை போன்ற ஒன்றையும்
வரைந்து வைத்தவள்
மரம் போன்றதில் பறவை போல ஒன்றிருப்பதால்
மரம் போன்றதே மரமென்றும்
அக்கா வரைந்தது மரமே ஆயினும்
பறவை போன்றேனும் ஒன்றில்லாத காரணத்தால்
அது மரம் இல்லை என்றும் சாதிக்கிறாள்
தங்கச்சிப் பாப்பா

2 comments:

  1. தங்கச்சிப் பாப்பா சொல்வதை நான் ஏற்கிறேன்.
    அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...