வாழ்த்துக்கள் மாண்பமை மோடி அவர்களே.
நீங்கள் வந்துவிடக்கூடாது என்று இறுதிவரை என்னளவில் மிகக் கடுமையான பிரச்சாரம் செய்தவன்தான். ஆனாலும் உங்களது வெற்றியையும் எனது தோல்வியையும் மனதார ஏற்றுக் கொண்டவன்.
தேநீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு சாமானிய மனிதனாலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டின் பிரதமராக முடியும் என்பதை இந்த உலகிற்கு மூர்க்கமும் உரத்துமான ஒரு குரலில் புரிய வைத்திருக்கிறீர்கள்.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்த போதிலும், முன்பைவிட உங்களுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் வந்து போராட நேரலாம் என்பதை உணர்ந்திருந்தும் இந்த சாமானியன் அதற்காக மிகுந்த மரியாதையோடு வாழ்த்துகிறேன்.
நிறைய சொல்ல வேண்டும். ஆனால் நான் சம்பந்தப் பட்ட துறை சார்ந்து ஒன்றை மட்டும் இப்போது சொல்ல விரும்புகிறேன்.
சகல மாச்சரியங்களையும் அந்தப் பக்கம் தள்ளிவிட்டு தேநீர் விற்றவர் எங்கள் பிரதமர் என்பதில் திமிரோடு கூடிய பெருமையோடு கேட்கிறேன்,
இது நியாயம் என்பதை நீங்களும் திமிறோடும் பெருமையோடுமே உண்மையிலுமே உணர்கிறீர்கள் என்றால்,
மாடு மேய்ப்பவனுக்கெல்லாம் கல்வியா என்று கேட்பவர்களும் உங்களோடு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அப்புறப் படுத்துங்கள். குடிசைக்கொரு கல்வி கோமானுக்கொரு கல்வி என்பதில் கறாராக இருப்பவர்களை உங்களிடமிருந்து விலக்குங்கள்.
இதை நீங்கள் செய்யத் தவறினால் என்னைப் போல ஒரு சாமானிய மனிதர் பிரதமர் ஆகியிருக்கிறார் என்ற எனது திமிரும் பெருமிதமும் அசிங்கப் பட்டுப் போகும்.
கொசுறாக ஒன்று,
உலகில் எங்கே இந்து பாதிக்கப் பட்டாலும் தலையிட்டு சரி செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளீர்கள். முதலில் அதை செய்யுங்கள்.
பிரதமர் அவர்களே அன்புமணி மட்டும் அல்ல இளவரசனும் இந்துதான் என்பதையும், பல இடங்களில் கொத்துக் கொத்தாக ஊர்விலக்கம் செய்யப் பட்டுள்ள தலித்துகளும் இந்துக்கள்தான் என்பதையும் உணருங்கள்.
இந்தச் சாமனியனின் எதிர்பார்ப்பு நீங்கள் எல்லா இந்துக்களையும் சமமாக ஏற்று பாவிக்க வேண்டும் என்பதே. இதைச் செய்யத் தொடங்கினாலே சிறுபான்மையினரையும் என் போன்ற நாத்திகர்களையும் இந்தியனாக ஏற்கும் பக்குவம் உங்களுக்கு பையப் பைய வந்துவிடும்.
கூப்பிய கரங்களோடு உங்களை அணுகி வாஞ்சையோடு உங்கள் கரம் பற்றுவதா அல்லது உயர்த்திய கரங்களோடு களம் இறங்குவதா என்பதை உங்களது செயல்களே தீர்மானிக்கும்.,
இந்த சாமானியன் சொன்னதையும் கொஞ்சம் மனதில் கொள்ளுங்கள்.
மீண்டும் உங்களுக்கு என் அன்பும் வணக்கமும் வாழ்த்துக்களும்.
நீங்கள் வந்துவிடக்கூடாது என்று இறுதிவரை என்னளவில் மிகக் கடுமையான பிரச்சாரம் செய்தவன்தான். ஆனாலும் உங்களது வெற்றியையும் எனது தோல்வியையும் மனதார ஏற்றுக் கொண்டவன்.
தேநீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு சாமானிய மனிதனாலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டின் பிரதமராக முடியும் என்பதை இந்த உலகிற்கு மூர்க்கமும் உரத்துமான ஒரு குரலில் புரிய வைத்திருக்கிறீர்கள்.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்த போதிலும், முன்பைவிட உங்களுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் வந்து போராட நேரலாம் என்பதை உணர்ந்திருந்தும் இந்த சாமானியன் அதற்காக மிகுந்த மரியாதையோடு வாழ்த்துகிறேன்.
நிறைய சொல்ல வேண்டும். ஆனால் நான் சம்பந்தப் பட்ட துறை சார்ந்து ஒன்றை மட்டும் இப்போது சொல்ல விரும்புகிறேன்.
சகல மாச்சரியங்களையும் அந்தப் பக்கம் தள்ளிவிட்டு தேநீர் விற்றவர் எங்கள் பிரதமர் என்பதில் திமிரோடு கூடிய பெருமையோடு கேட்கிறேன்,
இது நியாயம் என்பதை நீங்களும் திமிறோடும் பெருமையோடுமே உண்மையிலுமே உணர்கிறீர்கள் என்றால்,
மாடு மேய்ப்பவனுக்கெல்லாம் கல்வியா என்று கேட்பவர்களும் உங்களோடு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அப்புறப் படுத்துங்கள். குடிசைக்கொரு கல்வி கோமானுக்கொரு கல்வி என்பதில் கறாராக இருப்பவர்களை உங்களிடமிருந்து விலக்குங்கள்.
இதை நீங்கள் செய்யத் தவறினால் என்னைப் போல ஒரு சாமானிய மனிதர் பிரதமர் ஆகியிருக்கிறார் என்ற எனது திமிரும் பெருமிதமும் அசிங்கப் பட்டுப் போகும்.
கொசுறாக ஒன்று,
உலகில் எங்கே இந்து பாதிக்கப் பட்டாலும் தலையிட்டு சரி செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளீர்கள். முதலில் அதை செய்யுங்கள்.
பிரதமர் அவர்களே அன்புமணி மட்டும் அல்ல இளவரசனும் இந்துதான் என்பதையும், பல இடங்களில் கொத்துக் கொத்தாக ஊர்விலக்கம் செய்யப் பட்டுள்ள தலித்துகளும் இந்துக்கள்தான் என்பதையும் உணருங்கள்.
இந்தச் சாமனியனின் எதிர்பார்ப்பு நீங்கள் எல்லா இந்துக்களையும் சமமாக ஏற்று பாவிக்க வேண்டும் என்பதே. இதைச் செய்யத் தொடங்கினாலே சிறுபான்மையினரையும் என் போன்ற நாத்திகர்களையும் இந்தியனாக ஏற்கும் பக்குவம் உங்களுக்கு பையப் பைய வந்துவிடும்.
கூப்பிய கரங்களோடு உங்களை அணுகி வாஞ்சையோடு உங்கள் கரம் பற்றுவதா அல்லது உயர்த்திய கரங்களோடு களம் இறங்குவதா என்பதை உங்களது செயல்களே தீர்மானிக்கும்.,
இந்த சாமானியன் சொன்னதையும் கொஞ்சம் மனதில் கொள்ளுங்கள்.
மீண்டும் உங்களுக்கு என் அன்பும் வணக்கமும் வாழ்த்துக்களும்.
முகநூல் இணைப்பு
https://www.facebook.com/eraaedwin/posts/711426362232210
போகத் போகத் தெரியும் ,இந்த (தாமரைப் )பூவின் வாசம் புரியும் !
ReplyDeleteத ம 2
நல்லது செய்தால் கரம் குலுக்குவோம். இல்லையேல் கரம் உயர்த்தியபடி களத்திற்கு வருவோம்
Deleteநல்லது நடந்தால் நல்லது
ReplyDeleteதம 3
ஆமாம் தோழர்
Deleteஆவலுடன் காத்திருக்கிறோம் உயர்ந்த கரமா கூப்பிய கரமா எது மோதியின் தேர்வு எனப் பார்க்க...
ReplyDelete