Tuesday, May 13, 2014

4

போகிற பாதையோரம்
தட்டுப் பட்டது
கூராயிருந்ததால்
பிரச்சினையெழவில்லை
அதை
சாமி என்றேற்பதில்

நீண்ட தேடலில்
சாமி ஏதுமற்ற குளக்கரை மரமொன்று கிடைக்க
பிரச்சினையில்லை
கழுவி நடுவதிலும்

”யார் வேணாலும் ஒன்னு மண்ணாப் பொழங்க
சாராயக் கடையா?
சாமி இடம்
சுத்த பத்தம் வேணும்”

“சுத்தி வளைக்காத
நாங்க கும்பிடக்கூடாது
அதானே?”

அவனுக்கு ரெண்டு இவனுக்கு ரெண்டென
அணிபிரிய
எவனோ ஒருவன்
எட்டி உதைத்ததில்

சாமியாகவேண்டியதை கல்லாக்கிப்
போயிருந்தது
சாதி

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...