Thursday, March 6, 2014

16 வல்லமை


தமிழ்த் தரவுகள் அனைத்தையும் முடிந்தவரை திரட்டிச் சேர்ப்பது. இயன்றவரை கலப்படமில்லாத தமிழில் புழங்குவது என்கிற உயரிய, நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியப் படுகிற நோக்கங்களோடு நடத்தப் படுகிற ஒரு இணைய இதழ் ”வல்லமை”.

ஒருநாள் அதன் நிர்வாக ஆசிரியர் திருமதி பவளசங்கரி அவர்கள் இதழுக்கு எனது படைப்புகளைக் கேட்டபோதுதான் இப்படி ஒரு இணைய இதழ் வந்துகொண்டிருப்பது தெரிய வந்தது. உடனே உள்நுழைந்தேன். தங்களது நோக்கங்களைப் பிரகடனப் படுத்தும் போது எந்த வித ஆரவாரமுமின்றி “ முடிந்தவரை திரட்டிச் சேர்ப்பது”    ”இயன்றவரை கலப்பின்றி புழங்குவது” என்று சொல்லக்கூடிய நடைமுறை நேர்மை என்னை ஈர்த்தது. இது கடந்து இதில் இன்னும் பாலரது படைப்புகளையும் பார்க்க இயலும் என்பது இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஈர்த்தது.

இங்கிலாந்திலிருந்து திரு சக்தி தாசன் அவர்கள் தொடர்ந்து கடித வடிவத்தில் எழுதி வருகிறார். ஒவ்வொரு கடித்தத்திலும் இந்த மண்ணின் மீதான அவரது அக்கறையும் அதை காப்பதற்கான அவரது அரசியல் 
நிலைபாட்டையும் காண முடிகிறது.

இப்பொழுது இங்கிலாந்து சந்தித்து வரும் சூறாவளி, வெள்ளம், வரலாறு காணாத பனி இவற்றின் காரணமாக இங்கிலாந்து மக்கள் அனுபவிக்கும் துயர் இவை பற்றி அவரது 97 வது கடிதம் விவரிக்கிறது என்பதோடு இருந்திருப்பின் இதை ஒரு சாதாரண செய்திப் பதிவாக விட்டு விடலாம்.  அது கடந்து அதற்கான காரணங்களைத் தேடிப் பயணித்து வியர்த்து, குளிர் உறைந்து மூச்சடக்கி பந்தி வைப்பதுதான் சக்திதாசன் அவர்களது கடிதத்தைப் பற்றி பேச வைக்கிறது. ஏறத்தாழ 250 ஆண்டுகளாக இது போன்ற ஒரு இயற்கை சீர்கேட்டை இங்கிலாந்து பார்த்ததில்லை என்று கூறும் சக்திதாசன் “ polar vortex” என்கிற ஒருவிதமான இயற்கை மாறுதலே இதற்குக் காரணம் என்கிறார். இயற்கையோடு இயைந்து வாழாமல் அதை தன் இஷ்டத்திற்கு தாறுமாறாய் பயன்படுத்துவதே இத்தகைய கொடூரமான கேடுகளைக் கொண்டுவரும் மாறுதல்களுக்குக் காரணம் என்பதை வெகு பூடகமாக புரிய வைக்கிறார். நோய் முதல் நாடும் அவரது ஆளுமை அவரை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது.

இமயமலையின் பனிப் படிமங்களின் மேல் ரிஃப்லக்டர் மாதிரி ஒரு படிமம் இருக்குமாம். அதுதான்  ஒளியையும் வெப்பத்தையும் பனிப் படிமத்தைத் தாக்கிவிடாமல் திரும்ப ஒளிரச் செய்து பாதுக்காக்கிறது என்று வாசித்திருக்கிறேன். இமயமலையையும் இப்போது தாறுமாறாகத்தானே நாம் பயன்படுத்தி வருகிறோம். அதன் விளைவாக அந்த ரிஃப்லக்டர் போன்ற படிமம் மாசுபட்டு அதன் விளைவாக வெப்பம் பனிப் படலத்தை வெகுவாகத் தாக்கத் தொடங்கி உள்ளதாகவும் எங்கோ வாசித்தேன். இந்தப் பனி படலம் வெப்பப் படுமானல் வெகு வேகமாக உருகத் தொடங்கும். அது பேரதிக இடர்பாடுகளை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

இப்படியாக அந்த மண்ணில் நடந்த இயற்கை இடர்பாடு குறித்த ஒரு கடிதம் அது மாதிரி நமது பூமியில் நடப்பதற்கு வாய்ப்புள்ள ஒரு இடர்பாடு குறித்து நம்மை எச்சரிக்கிறது. இதுதான் கடித இலக்கியம். பொதுவாகவே மின்னனு உபயோகம் பெருகிவரும் சூழலில் கடிதங்கள் அருகிப் போயுள்ளன. அத்தகைய சூழலில் வல்லமை மாதிரி இணைய இதழ்கள் கடித இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அதுவும் ஒரு மனிதனின் 97 கடிதங்களை இதுவரை பதிவேற்றியிருப்பது கடிதங்களின் மேலும் கடித இலக்கியத்தின் மேலும் அக்கறை கொண்டோர் யாவரும் பாராட்டவேண்டிய ஒரு விஷயம்.

பவள சங்கரி எழுதும் இதழின் தலையங்கங்கள் கவனத்திற்குரியவை. 24.01.2014 அன்று அவர் எழுதிய தலையங்கம் குவிக்கப்பட்ட கவனத்திற்குரியது. குழந்தைகள் என்றால் ஆண் குழந்தைகள் மட்டும்தானா? என்கிற ஒரு வினாவை மிக நேர்த்தியானதொரு பூடக மொழியில் பேசுகிறது அது. கடந்த 20 ஆண்டுகளில் ஏறத்தாழ ஒரு கோடி பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்கிற ஒரு செய்தியை பவள சங்கரி தரும் போது உண்மையிலுமே அதிர்ந்து போகிறோம். கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறியும் சோதனைக்கு கடுமையான தண்டனை என்று சொல்லப்பாட்டு எல்லா மருத்துவ மனைகளிலும் ஸ்கேன் நிலையங்களும் விளம்பரித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இப்படி என்றால் இத்தகையதொரு கடுமையான சட்டம் இல்லை என்றால் இந்த எண்ணிக்கை எங்கு போய் நின்றிருக்கும்?

ஆண் பெண் விகிதாச்சாரம் இயற்கைக்கு மாறாக வேறுபட்டால் அது சமூகத்தில் பல்வேறு விதமான கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அக்கையோடு சொல்லும் வலையாக இருக்கிறது வல்லமை.

பேராசிரியர் இ. அண்ணாஅமலை அவர்களது மொழியியல் மற்றும் ஒலியியல் சார்ந்த பதிவுகள் மிகவும் நுட்பமானவை. ஆங்கிலத்தை unphonetic language என்று சொல்வோம்.44 ஒலி வடிவங்களை எழுத்தில் வார்க்க வெறும் 26 எழுத்துக்களே இருப்பதுதான் இதற்கு காரணம். ஆனால் தமிழில் எந்த ஒரு ஒலிக்கும் அதற்கான எழுத்து இருப்பதாகவே நினைத்து வந்தோம். ஆனாலும் ஜ, ஷ, கங்கைக்கு வரும் க ஒலி போன்ற ஒலிகளின் தேவை தமிழில் இருப்பதாகவே உணர்ந்தோம். ஆனால் எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் வேறு வேறு மொழிகளா என்கிற அவரது ஆய்வு மொழி குறித்த அக்கறை கொண்ட அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்கப் பட வேண்டியதாகும்.

பெண்ணியம், மொழி, கல்வி, ஆன்மீகம், உலகமயம், சாதி, வரலாறு அரசியல், குழந்தைகள் என அத்தனை விஷயங்களையும் அலசும் ஒரு வலை வல்லமை.

அவசியம் பாருங்கள்,

11 comments:

  1. நானும் போய்ப் பார்த்தேன்.. கலப்படம் இல்லாத மொழியில்ன்னு சும்மா நகைச்சுவைக்குத் தானே..? ஆங்கிலக் கலப்படம் இல்லன்னா சங்கதக் கலப்படம்.. இது போல திண்ணைன்னு தளம் இயங்கி வருது.. புதுசு இல்ல! தமிழ்ல உருப்படியா இருந்தது கீற்று ஒண்ணு தான்.. அதுவும் மொடங்கிப் போய் கிடக்குது!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர். எதுவாயினும் பெயரோடு வாருங்கள் தோழர்

      Delete
  2. நல்ல பதிவு அவசியம் பார்க்கிறேன் வல்லமையை.நன்றி

    ReplyDelete
  3. அறிமுகம் செய்தமைக்கு நன்றி தோழர்
    அவசியம் பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. 'வல்லமை'க்கு வல்லமை சேர்க்கும் தங்கள் முயற்சி வாழ்க !

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றிங்க ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  6. வல்லமை தள அறிமுகம் அருமை...
    நன்றி..

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...