Sunday, September 2, 2012

அம்மாவின் ஞானம்

அம்மா
அப்பா
அப்பாயி
அண்ணன்கள்
அண்ணிகள்
குழந்தைகள்
அப்புறம் நான்

கொஞ்சம் பெரிசுதான்
விடுங்கள்

குடும்ப அட்டையில்
 கடைசிப்பக்க விளிம்புவரை
பெயர்கள் நீண்டாலும்

கழிவறை ஒன்றுதான்
ஆனாலும்

நகராட்சிக் கழிவறை
வரிசைதான் காலையில்

எழுப்பொலி வைத்துப் போனதுண்டு
நிம்மதியாய்க் கழிக்க

எழுப்பொலி
எல்லா அறைகளிலும் ஒலிக்க
புரிந்தது

வதந்திபோல் பரவியது
நுணுக்கம்

பற்கள் கடித்து
கால்கள் நெருக்கி

அவசர அவஸ்தையில்
கண்கள் செருக

கழிவறை வாளியில்
நீர் விழும் சத்தம்

ஏ. ஆர். ரஹ்மானாவது
இளையராஜாவாவது

வலிக்கும் அவஸ்தை
இடம் கிடைத்த நிம்மதி

தாள் போடும் வேளை
சிணுங்கியது தொலைபேசி

“கொஞ்சம்
யாருன்னு பாரேன்”

குபுக்கென கொப்பளித்தது
அம்மாவின் ஞானம்

“எந்தக் கடங்காரனோ
ஆமா
இப்ப நீ
எந்த ஊர்ல இருக்கிறதா
சொல்லித் தொலைய?”

38 comments:

  1. Replies
    1. Intha varigal emmai silirkka vaithathu, ungal padaipukku en nanrigal!

      Delete
    2. மிக்க நன்றி தோழர்

      Delete
  2. வணக்கம் தோழர். கவிதை அருமை.. சொந்த அனுபவம் அல்லவா?

    ReplyDelete
  3. கவிதையின் இறுதி வரிகளை வாசிக்கையில் "எத்தன்" திரைப்படம் என் நினைவில் வந்தது! :)

    அருமை!

    ReplyDelete
  4. கவிதையும் அருமை , சொல்லிய விதமும் அருமை. எல்லா அலைபேசி அழைப்புகளும் கடண்கொடுத்தவரிடம்மிருந்து வரும் என்று நினைக்காதீர்கள் சார். உங்கள்மேல் அதீத அன்புவைத்துள்ள என்னைபோன்றவர்களிடமிருந்தும் வரும் சார்.

    ReplyDelete
  5. நகர்புற வாழ்வின் அவலங்களையும் எதார்த்த வாழ்வின் உண்மையையும்
    வறுமையின் கோரத்தையும் கேமரா இல்லாமல் வார்த்தைகளாலேயே படம்பிடிக்குது உந்தன் கவிதைகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கழிவறை வாளியில்
    நீர் விழும் சத்தம்

    ஏ. ஆர். ரஹ்மானாவது
    இளையராஜாவாவது

    நல்ல வரி .மிகச் சிறந்த படைப்பு தோழர்

    ReplyDelete
  7. //இப்ப நீ
    எந்த ஊர்ல இருக்கிறதா
    சொல்லித் தொலைய?”//

    அருமை தோழர்! எதார்த்தம்....!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா எவ்வளவு நாளாச்சு தோழரோடு பேசி

      Delete
  8. ம்ம்.... நல்லாத் தான் எழுதுறீங்க....

    ReplyDelete
  9. ஆனா மருத்துவமனை கட்டுரை பற்றி நிறைய சொல்ல வேண்டி இருக்கு... இரண்டொரு நாளில் எழுதுறேன் எட்வின்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கமும் நன்றியும் ப்ரியா,
      ப்ரியா அவசியம் நிறைய எழுத வேண்டும்.தவத்தோடு இரு கையேந்தி

      ReplyDelete

      Delete
  10. ஆரம்பம் கூட்டுக்குடும்பம் பற்றிச் சொல்கிறீர்களென வாசித்து வந்த நான் கடைசிப் பந்தி வாசித்ததும் குபுக்கென சிரித்துவிட்டேன்......!

    ReplyDelete
  11. இந்த அவஸ்தையை நன்கு அனுபவித்த என் அலுவலக நண்பர் ஒருவர் வீடு வாங்கினால் அல்லது கட்டினால் இரு கழிப்ப றைகளுடன் இருக்க வேண்டும் என்று கனவு கண்டு வந்தார்.
    ச. வீரமணி

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நல்லா இருக்கு தோழர்.
      மிக்க நன்றி தோழர்

      Delete
  12. நல்ல வரிகள் சார்... நன்றி...

    ReplyDelete
  13. புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் பொய் சொல்லப் பழகுவதும் ஞானம்தான்...ஆனால் அதை விடவும் தாயின் புரிதலே ஞானமாகப் படுகிறது.

    ReplyDelete
  14. எதார்த்தமான நிகழ்வு ,.படிப்பவர் பெரும்பலோர் வீட்டில் நிகழ்வது .... சொல்லும் தோணி அழகு .....உங்களால் மட்டும் சொல்லகூ டிய யதார்த்தம் ....

    ReplyDelete
  15. முகநூலில் இருக்கிறேன் என்று சொல்லவேண்டியது தான் ......ஹ ஹா ஹா ....அருமையான உண்மையை வெளிச்சம் காட்டும் கவி ...

    ReplyDelete
    Replies
    1. அப்படிக்கூட சொல்லலாம்ல்
      போல இருக்கே

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. வதந்திபோல் பரவியது
    நுணுக்கம்

    பற்கள் கடித்து
    கால்கள் நெருக்கி

    அவசர அவஸ்தையில்
    கண்கள் செருக

    கழிவறை வாளியில்
    நீர் விழும் சத்தம்..............மிக அவஸ்தையான ஒவ்வொரு காலையினதும் உணர்சிகள் .

    ReplyDelete
  18. ம்ம்ம்.....எதார்த்தம் சார்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...