Saturday, March 6, 2010

சீந்துவாரற்று...


சங்கடப் படுத்தும்
பரிவான பார்வைகள்
.
திண்ணைக்கு வந்துவிட்ட
என் கட்டில்
.
புரிகிறது
செத்துக் கொண்டிருக்கிறேன்
.
அநேகமாக
நாளை
.
தப்பினால்
நாளை மறு நாள்
.
தொடங்கி விட்டது
பிரிவினை கூட
.
நல்லததுதான்
இருக்கும்போதே
பிரித்துக் கொள்வதும்
.
பார்த்து
பார்த்து
சேர்த்தது
.
அடித்துக் கொள்ளாமல்
.
அவனவன் விரும்பியதை
அவனவன் எடுக்க
.
சீந்துவாரற்று
அநாதையாய்
ஏக்கத்தோடு பார்க்கும்
என் புத்தகங்கள்
.
நன்றி : "இளைஞர் முழக்கம்"

4 comments:

  1. அண்ணன்..

    நேர்த்தியாக வந்திருக்கிறது.

    தலைப்பையும் சேர்த்து பதிவிடுங்கள்..

    ReplyDelete
  2. அருமை..எட்வின் ஐயா.....

    ReplyDelete
  3. /// மிக்க நன்றி தோழர்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...