Friday, March 5, 2010

அப்பா வண்டு


கிடந்தது
சுவரோரமாய்
ஒரு கரு வண்டு
.
"எப்பப்பா போகும்
இது
அவுங்க வீட்டுக்கு?"
.
எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்
.
"எழுந்ததும் போகும்"
சமாளிப்பேன்
இப்படித்தான்
.
விடவில்லை
.
"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"
.
"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா
.
"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேனாலும் போகலாம்
வீட்டுக்கு"
.
நன்றி : "இளைஞர் முழக்கம்" & "யுகமாயினி"

27 comments:

  1. வருக எட்வின்.. வாழ்த்துக்கள்.
    உங்கள் கவிதைகளையும் கட்டுரைகளையும் எதிர்ப்பார்கிறேன்
    தோழமையுடன்
    எஸ்.ஜி.ரமேஷ்ப்பாபு

    ReplyDelete
  2. ///அப்பா வண்டுன்னா சரி
    எப்ப வேனாலும் போகலாம்
    வீட்டுக்கு///

    சின்ன மகள் ரொம்ம்ம்ம்ம்பவே புத்திசாலி போல:)

    வலையுலகுக்கு நல்வரவு எட்வின்

    ReplyDelete
  3. அந்தக் கடைசி வரிகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான அடக்குமுறையின் தாக்கம் தெரிகிறது,.. அருமை சார் :)

    ReplyDelete
  4. ஆண்களுக்கு சிரிப்பு வரும் இதை படிக்கும்போது. ஆனால் வர வேண்டியது குற்ற உணர்ச்சி .. அருமையான கவிதை.

    ReplyDelete
  5. அருமை தோழர். அழகான கவிதை.

    ReplyDelete
  6. நீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்பதற்கு கவிதையின் கடைசி வரிகளே சாட்சி.
    அன்புடன்
    நாகூர் ரூமி

    ReplyDelete
  7. அப்பாவிடம் ஒரு பெண் எப்படி தன் எதிர்ப்பையும் சலிப்பையும் காண்பிக்க முடியும்.. அது மனைவிகளுக்கே உரித்தானது..:)


    அப்பாவை பெருமைப்படுத்தும் விதமாகவும்.. ஆதரிக்கும் விதமாகவும்தான் பேச வரும். அது அந்தக் கவிதையில் எதார்த்தமா வந்திருக்கு..:) வாழ்த்துக்கள்..:)

    ReplyDelete
  8. கமல்ராஜ் ருவியேMay 21, 2012 at 2:59 PM

    துளி அது தேன் துளி.... ஒரு குட்டு...மிக எளிமையான சாடல் .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. குழந்தையின் வஞ்சமில்லாத மனசு...எவ்வளவு அழ்காக சொல்கிறது பாருங்கள்..//யதார்த்தம்.//

    ReplyDelete
  10. பாராட்ட மட்டுமில்லாமல், யோசிக்கவும் வைத்தது...!

    ReplyDelete
  11. /// கமல்ராஜ் ருவியே said...
    துளி அது தேன் துளி.... ஒரு குட்டு...மிக எளிமையான சாடல் .. வாழ்த்துக்கள்///
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  12. /// S.M.KAVIN said...
    குழந்தையின் வஞ்சமில்லாத மனசு...எவ்வளவு அழ்காக சொல்கிறது பாருங்கள்..//யதார்த்தம்./////
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  13. ///S.M.KAVIN said...
    குழந்தையின் வஞ்சமில்லாத மனசு...எவ்வளவு அழ்காக சொல்கிறது பாருங்கள்..//யதார்த்தம்.////./
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  14. பிஞ்சு நெஞ்சிலே நாம் ஆணாதிக்க நஞ்சினை விதைதுள்ளோம்....

    ReplyDelete
  15. ///gypsy68 said...
    பிஞ்சு நெஞ்சிலே நாம் ஆணாதிக்க நஞ்சினை விதைதுள்ளோம்....///
    குழந்தை பார்ப்பதை சொல்கிறாள் அவ்வளாவுதான்

    ReplyDelete
  16. குழந்தைகளின் பார்வை யதார்த்தமானது
    ஆணாதிக்கமும் இல்லை பெண்ணியமும் இல்லை..அதில்

    ReplyDelete
  17. /// prabhakaran said...
    குழந்தைகளின் பார்வை யதார்த்தமானது
    ஆணாதிக்கமும் இல்லை பெண்ணியமும் இல்லை..அத

    எதார்த்தம்தான் தோழர்

    ReplyDelete
  18. அன்பரசன்May 21, 2012 at 4:59 PM

    அருமை...அருமை....
    என் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தக்கவிதையை பகிர்ந்து கொள்கிறேன் தோழர்....

    ReplyDelete
  19. அருமையான், எழிமையான கவிதை நன்பரே.எனது இளமைகாலத்தில் அந்த வண்டுகளே என்னை வளர்த்தவை.

    ReplyDelete
  20. ///எஸ்.ராஜாபாபு said...
    அருமையான், எழிமையான கவிதை நன்பரே.எனது இளமைகாலத்தில் அந்த வண்டுகளே என்னை வளர்த்தவை.///

    என்னையும் கூடத்தான் தோழர்

    ReplyDelete
  21. நல்ல கவிதை. பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்யவே முடியாது

    ReplyDelete
  22. /// நா சாத்தப்பன் said...
    நல்ல கவிதை. பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்யவே முடியாது///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  23. மிக எதார்த்தமாய்
    என் மகள் என்னோடு உரையாடியதாக நினைத்து கொண்டேன்

    ReplyDelete
  24. அருமை .. அருமை

    ReplyDelete
  25. /// நட்புடன் ஜமால் said...
    மிக எதார்த்தமாய்
    என் மகள் என்னோடு உரையாடியதாக நினைத்து கொண்டேன் ////

    மிக்க நன்றி ஜமால்

    ReplyDelete
  26. ///Srinivasan said...
    அருமை .. அருமை '''

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  27. ஒரு வாண்டு, வண்டின் மூலம் வண்ணம் பூசியிருக்கிறது, யதார்த்தத்திற்கு..! :)

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...