Tuesday, March 19, 2024

புத்தகத்திற்கு எதற்கு GST ?

 பொதுவாகவே புத்தகச் சந்தைகளை மாவட்டம் மாவட்டமாக சிறப்பாக நடத்துவதற்கு அரசு எடுக்கும் மெனக்கெடல்களைப் பார்க்கவும் மெச்சவுமே செய்கிறோம்

சர்வதேசப் புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்து சிறப்பாக நடத்துவதன் மூலம்
நமது ஞானத் திரட்சியை உலகத்திற்குக் கொடுக்கவும்
உலக ஞானத்தை நாம் தரிசித்து பயன்பெறவும்
அரசசின் மெனக்கெடல்களும் நாம் அறியாதது அல்ல
இந்தச் சூழலில், பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலுக்கான நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது
பதிப்பகத் தோழர்கள் சிலரோடு தொடர்பு கொண்டபோது
பதிப்புத் தொழிலையே இது தாறுமாறாகக் கிழித்துப்போடும் என்பது மாதிரி மிகுந்த வருத்தத்தோடும் கவலையோடும் கொஞ்சம் பதறவே செய்தார்கள்
தோழர்கள் பரிசல் சிவ. செந்தில்நாதன் அவர்களையும் Mohammed Sirajudeen அவர்களையும் தொடர்பு கொண்டபோது முன்னர் பேசிய தோழர்களின் கவலை உண்மையானது என்பது தெரிய வந்தது
மூன்று விஷயங்கள் தங்களை வெகுவாகப் பாதிப்பதாக அனைவரும் கூறுகிறார்கள்
1) அரசு கேட்கும் ஜி.எஸ்.டி எண்
2) சிறுதொழில் உரிம எண்
3) ஐ.எஸ்.பி.என் எண்
இதில் மூன்றாவதாக உள்ள சிக்கல் மேலே கொடுக்கப்பட்டுள்ள சிக்கல்களில் கொஞ்சம் பாதகம் குறைந்தது
எனவே அதை இப்போதைக்கு சன்னமாக ஒதுக்கி வைக்கலாம்
GST எண் இணைக்க வேண்டும் என அரசு கூறுகிறது.
புத்தகத்திற்கு எதற்கு GST என்று கேட்டுவிட்டு
தாள்தான் முதல் ப்ராடக்ட். அதற்கு GST கட்டுகிறோம். புத்தகம் புதிது என்று நாம் கொண்டாடினாலும் புத்தகம் என்பது செகண்ட் ப்ராடக்ட்தான். இரண்டாவது ப்ராடக்ட்டிற்கு GST இல்லை என்று முடிக்கிறார் தோழர் சிராஜ்
இந்தச் செயல் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே ஊக்குவிக்கும் ஒரு ஏற்பாடாகப் படுகிறது
Print on demand வசதி வந்தபிறகு பதிப்புத் தொழில் வெகுவாக ஜனநாயகப் பட்டிருக்கிறது
கிராமங்களில் இருக்கும் எழுதுபவர்கள்கூட இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 50 அல்லது நூறு பிரதிகளை வெளியிட்டு ஒரு விழா நடத்தி விடுகிறார்கள்
இவர்களில் பலர் மிகத் தேர்ந்த எழுத்தினையும் தரவும் செய்கிறார்கள்
இவர்கள் வாங்கும் தாளிற்கு GST கட்ட வேண்டும்
அட்டை போர்டிற்கு GST கட்ட வேண்டும்
அச்சகம் மை உள்ளிட்டவற்கு GST கட்டுகின்றன
இப்போது செகண்ட் ப்ராடக்ட்டான புத்தகத்திற்கு GST எனில் புத்தகத்தின் விலை ஏகத்திற்கும் எகிரும்
இது புத்தக விற்பனையை மிகவும் பாதிக்கும்
புதிய எழுத்தாளர்களுக்கு தங்கள் நூலை நூலகத்திற்கு கொண்டுபோக வேண்டுமெனில்
கார்பரேட் பதிப்பகங்களிடம் அவர்கள் கேட்கும் காசைக் கொட்டிக் கொடுத்து காத்திருக்க வேண்டியதுதான்
இல்லை எனில் அவர்களால் தங்களது நூல்களை நூலகத்திற்குள் கொண்டுபோக முடியாது
நல்ல புத்தகங்கள் நூலகங்களுக்குள் வரமுடியாத சூழலை இது உருவாக்கும்
பதிப்புத் தொழில் குடிசைத் தொழிலைவிட ஒருபடி கீழ் நிலையில்தான் இருக்கிறது
இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும்
புத்தகச் சந்தை முடிந்து மூட்டை கட்டும்போது திரும்பும் செலவிற்கு பல சிறிய பதிப்பகங்கள் கடன்படும் நிலை உள்ளது
பதிப்புத் தொழில் உயிர்ப்புத் தொழில்
நூலகங்களைக் கட்டுகிறீர்கள்
மெச்சுகிறோம்
ஆனால் நூலகங்களைக் கட்டுவது மட்டும் போதாது
நல்ல நூல்களை அங்கு கொண்டு சேர்த்து குவிக்க வேண்டும்
அதற்கு இந்த நெறிமுறை ஒத்து வராது
காசிருக்கிறவர்களின் குப்பைகள் உள்ளே நுழைந்து விடும்
அரசு இந்த நெறிமுறைகளைத் திருத்த வேண்டும்
எல்லாவற்றிற்கும் முதலாவதாக
இந்த நெறிமுறைகளை வகுப்பதற்கு முன் அரசு அனைத்துவகை பதிப்பகங்களையும் அழைத்து ஆலோசித்துவிட வேண்டாமா

15.03.2024
All reactio

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...