Wednesday, January 8, 2020

சின்னியம்பாளையத்து தியாகிகள்

வரலாற்றில் அதிலும் குறிப்பாக இடதுசாரி தொழிற்சங்க வரலாற்றில் கோவை மாவட்டத்திற்கு பெரும் பங்கு உண்டு
செக்கிழுத்த செம்மல் வஉசி என்று பள்ளிக்கூடத்து பாடங்கள் சொல்லித் தரும்
இதைப் படித்ததும் அவர் ஏதோ ஒரு மரச்செக்கை இழுத்திருப்பார் என்றுதான் அதை சொல்லித்தரும் ஆசிரியர்களே நினைத்துக் கொண்டிருப்பார்கள்
ஆனால் அவர் இழுத்தது ஒரு கல் செக்கு என்று கேள்விபட்டபோது நான் அதிர்ந்து போனேன்
அந்தக் கல் செக்கு இன்னும் கோவை மத்திய சிறையில் இருப்பதாக அறிகிறேன்
ஆஷர்மில் அட்டூழியங்களை எதிர்த்து வீரத்துடனும் விவேகத்துடனும் போராடி உயிர்த்தியாகம் செய்து ஆஷர்மில் முதலாளிகளுக்கே கிட்டாத “ஆஷர்மில்” என்ற முன்னொட்டை தன் பெயரோடு பெற்றிருக்கும் ஆஷர்மில் பழனிசாமி வாழ்ந்த ஊர் ஒன்றுபட்டு இருந்த கோவை மாவட்டத்தில்தான் உள்ளது
இதற்கெல்லாம் கொஞ்சமும் குறைவுபடாத இன்னொரு தியாக வரலாறும் கோவைக்கு உண்டு
சின்னியம்பாளையத்தில் “ரங்க விலாஸ்” என்றொரு நூற்பாலை இருந்தது
மனிதத் தனத்தின் மிக சொற்பமான கூறுகளைக் கூட அங்கு காண முடியாது
அப்போதெல்லாம் ஆலைகளில் வேலை பார்ப்பதற்கு ஊழியர்களையும் அவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக ரவுடிகளையும் வேலைக்கு வைத்திருப்பார்கள்
இதற்கு ”ரெங்க விலாஸ்” ஆலையும் விதி விலக்கல்ல.
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரைக்கும் வேலை வாங்குவார்கள்.
என்ன கொடுமை என்றால் ஊழியர்களைக் காட்டிலும் ரவுடிகளை அதிக சம்பளத்தோடு முதலாளிகள் கவனித்துக் கொண்டார்கள்
ஊழியர்கள் எழுச்சி பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களது வேலை
இத்தைக்கு மத்தியிலும் ஒவ்வொரு ஆலையிலும் கம்யூனிஸ்டுகள் சங்கம் அமைத்தும் முதலாளித்துவத்தின் அயோக்கியத்தனத்திற்கு எதிராகவும் போராடிக் கொண்டிருந்தார்கள்
அந்த ரவுடிகள் அங்கு வேலை பார்க்கும் பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்பது ஆலைகளின் எழுதப்படாத விதி
அதை எதிர்ப்பதையும் அவர்களின் காமப் பிடியில் இருந்து பெண் ஊழியர்களைப் பாதுகாப்பதையும் செங்கொடி சங்கங்கள் தங்களது செயல்பாடாக வைத்திருந்தார்கள்
”ரெங்கவிலாஸ்” ஆலையில் வேலைபார்த்த பெண் ஊழியர்களை பொன்னான் என்ற ரவுடி சீண்டிக் கொண்டே இருக்கிறான்
அதைத் தட்டிக் கேட்ட ராஜி என்ற பெண் ஊழியரை வெளியே வைத்து பலாத்காரம் செய்து கொன்றுவிடுகிறான் பொன்னான்
அந்தப் பொன்னானை ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் என்ற நான்குபேரும் கொன்று போடுகிறார்கள்
அதற்காக அந்த நான்குபேரும் 1946 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம்நாள் அதிகாலை தூக்கில் இடப்பட்டனர்
இதுபோன்ற வரலாறுகளை இளம் தோழர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று படுகிறது
#சாமங்கவிய ஒரு மணி முப்பத்தி ஒன்பது நிமிடம்
08.01.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...