Sunday, July 29, 2018

26.07.2018

மாண்புமிகு பன்னீர்செல்வம் அவர்கள் மிகுந்த அதிகாரம் மிக்கவர். தனக்கிருக்கக்கூடிய அதிகாரத்தை தனக்காக எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நுட்பம் அறிந்தவர்.
ஆனானப்பட்ட நிர்மலா அம்மையாரையே தான் சொன்னதை செய்துதர வைக்கும் வித்தை தெரிந்தவர்.
கீழடியிலிருந்து திரு அமர்நாத் அவர்களை இடம் மாற்றம் செய்த சில நாட்களில் மாண்புமிகு நிர்மலா அவர்கள் கீழடி வருகிறார். அப்போது அங்கு கூடிய பொதுமக்கள் அவரை மறித்து ஒழுங்காகவும் நேர்மையாகவும் பணியாற்றிக் கொண்டிருந்த திரு அமர்நாத் அவர்களை ஏன் மாற்றினீர்கள் என்று கேட்டபொழுது வலது கையை வேகமாக நீட்டி எதிரே இருந்தவர்களை அறைந்துவிடுகிற மாதிரியானதொரு கோவத்தில் ,
“ஏன் அந்த ஆளு மட்டும்தான் வேலை பார்ப்பாரா?” என்று அவர் கத்திய தோற்றம் அவர் எவ்வளவு பயங்கரமானவர் என்பதைக் காட்டியது
குரங்கணி தீப்பிடித்தது. அங்கு சிக்கிக் கொண்ட குழந்தைகள் கருகிய போதுகூட ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலன்சை அனுப்ப மறுத்தவர்
மீனவர்கள் கடலில் செத்து மிதந்தபோது குற்றுயிராக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் காப்பாற்றுவதற்காக ராணுவ ஹெலிகாப்டர்களைத் தர மறுத்தவர்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்காக
பிரதமர் ஒரு இரங்கலைக்கூட சொல்லவில்லையே என்று சென்னை வந்த அவரிடம் வினவியபோது,
“அப்படியா, அவரிடம் கேட்டு சொல்கிறேன்” என்று கோவமும், பகடியும், ஆணவமும் ஒரு சேர கூறியவர்
அவர் இவ்வளவு ஆணவத்தோடு நடந்து கொண்டதற்கு காரணம் பாதிக்கபட்டவர்கள் தமிழ் பேசுகிறவர்கள் என்பது.
தன் தம்பி பாலமுருகனை மதுரையிலிருந்து சென்னை மருத்துவ மனைக்கு அழைத்துப்போக ராணுவ ஹெலிகாப்டர் அம்புலன்சை அனுப்ப வைத்து ஆனானப்பட்ட நிர்மலா அவர்களின் பதவிக்கே சிக்கலைக் கொண்டு வந்திருப்பவர்
அவரின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின்மீது விசாரனை ஆரம்பமாகிவிட்டது என்று முதல்வர் கூறியிருக்கிறார்
இந்தச் சூழலில் சக்தி வாய்ந்த நிர்மலா அவர்களையே தனக்காக சட்டத்திற்கு புறம்பான காரியத்தை செய்ய வைத்த பன்னீர் அவர்களின் முன் சாமானிய சாட்சிகளும் வழக்கறிஞர்களும் என்ன பாடு படுவார்கள்?
எனவே இந்த வழக்கு முடியும்வரை அவரை பதவி நீக்கம் செய்வதுதானே முறை.
*******************************
மரியாதைக்குரிய மாறன் சகோதரர்களை சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிராக CBI சென்னை உயர்நீதின்றத்தில் ‘மறுசீராய்வு மனு’வினை (REVITION PETITION) உயர்நீதிமன்றம் விசாரனைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. விசாரித்த நீதியரசர் திரு ஜெயச்சந்திரன் அவர்கள் ஒரு இடத்தில்,
“the special court had discharged all seven accused from the case though maran brothers and mr.kannan had not filed discharge petitions at all. nevertheless the trio had participated in the hearing on the discharge plea of the other accused and therefore the lower court came to the conclusion that all of them were entitled to the benefit " (THE HINDU 26.07.2018)
என்கிறார்.. இதைத் தமிழ்ப்படுத்தினால்
”மாறன் சகோதரர்களும் திரு கண்ணன் அவர்களும் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று முறையிடாத போதும் மற்றவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி தொடுத்த முறையீட்டின் மீதான விசாரனையில் இவர்களும் வந்து அமர்ந்திருந்ததால் அவர்களையும் சேர்த்து விடுவித்திருக்கிறது”
ரெண்டு விஷயம்
1) விடுவியுங்கள் என்று மனுவே தராதவரையும் நீதிமன்றத்திற்கு வந்தார்கள் என்பதற்காகவே விடுவித்த சிறப்பு நீதி மன்றத்தின் பெருந்தன்மை
2) எதற்கும் கவனமாக இருங்கள் நீதியரசர் அவர்களே
***********************************
”பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் இலக்கு. அதற்காக மாநில கட்சியின் பிரதமர் வேட்பாளாரையும் ஏற்போம்” என்று கூறியிருக்கிறார் திரு ராகுல்
அதை தேர்தலுக்குப் பிறகு பார்க்கலாம் ராகுல்.
ஆனால் இதுதான் சரியான பார்வை. தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகள் கூடி யார் பிரதமர் என்பதை முடிவெடுங்கள்.
ஒற்றுமையாய் ஒன்றாய் ஒரு செயல்திட்ட முன்வரைவோடு தேர்தலை எதிர் கொள்ளுங்கள். தேர்தலுக்குப் பின் அதை செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்
என் வாழ்த்துக்களும் வணக்கமும் ராகுல்.
#சாமங்கவிய 42 நிமிடங்கள் இருக்கும்போது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...