Thursday, September 18, 2014

குட்டிப் பதிவு 9

பிரதமர் மோடி அவர்கள் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்தியில் பேச இருப்பதைக் குறித்து நண்பர்கள் கொதித்தெழுந்து விமர்சித்து வருகிறார்கள்.
எனக்கென்னவோ இது அவசியமற்றது என்றேபடுகிறது.
இன்னும் சொல்லப் போனால் மோடி அவர்கள் தனது தாய் மொழி குஜராத்தி எனும் பட்சத்தில் குஜராத்தியில் பேசுவதுதான் சரியாக இருக்கும்.
மொழிபெயர்ப்பு வசதிகள் விரிந்து கிடக்கும் காலத்தில் அவரவரும் தத்தமது தாய் மொழியில் பேசுவதும் அதை கேட்பவர்களின் தாய்மொழிகளில் பெயர்க்கப்பட்டு வழங்கப் படுவதும் அவசியம்.
இது சாத்தியமானதே.
நமது ஆசை இதுதான். தமிழகத்து உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமிழில் மட்டுமே பேசுவது என்று கட்சி பேதமின்றி முடிவெடுத்து செயல் படுத்த வேண்டும்.
இதற்கு சபாநாயகரின் அனுமதியை வாங்க வேண்டும் என்ற விதியை அல்லது நடைமுறையை நீக்கக் கோரி போராட வேண்டும்.

2 comments:

  1. நல்ல கருத்து! ஆனால் செயல்படுத்த விடமாட்டார்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அய்யா. மிக்க நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...