லேபில்

Saturday, September 20, 2014

குட்டிப் பதிவு 10

கவி தகுர் என்ற தனது நூலில் க.ந.சு சொல்லும் ஒரு சம்பவத்தை சொல்லத் தோன்றுகிறது.
கலைகளின் காவலர், மெத்தப் படிப்பவர் என்ற பிம்பத்தோடு உள்ள ஒரு வழக்குறைஞர் வீட்டிற்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பத்துப் பதினைந்து முறை சென்றிருக்கிறார்.
அவரது மேஜைமீது தகுரின் ( தாகூரை தகுர் என்றுதான் க.ந.சு அவர்களும் அழைக்கிறார் ) புத்தகம் ஒன்று இருந்்திருக்கிறது.
புரட்டப் படாமலே இருந்திருக்கிறது அந்த நூல்.
தகுர் நூலை படிப்பவர் என்று காட்டிக் கொண்டால்தான் ஒரு மவுசு என்கிறார் க.ந.சு
மட்டுமல்ல அவ்வளவு உசத்தியானது தகுரின் மவுசு என்றும் சொல்கிறார் க.ந.சு
ஆக, அந்தக் காலமும் மவுசுகளாலேயே தீர்மானிக்கப் பட்டிருக்கிறது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023