Friday, September 5, 2014

கவிதை 17

புரிகிறது
விரல் பிடித்து விலை பேசியிருக்கிறீர்கள்
தாமிரமோ தங்கமோ எதையோ எடுக்க
எவனுக்கோ சத்தியம் செய்திருக்கிறீர்கள்
இந்தியிலோ, தமிழிலோ, ஆப்பிரிக்க மொழிகளில் ஏதோ ஒன்றிலோ
வேறு ஏதோ ஒரு மொழியிலோ
வனத்தை, மலைகளை யாருக்கோ தாரை வார்க்க
அப்புறப் படுத்த வேண்டுமெங்களை
நாக்கிலே தேன் தடவி எதையெதையோ சொல்கிறீர்கள் எங்களிடம்
வேண்டாம் துரைமார்களே உங்கள் ஊரும் சாமியும் படிப்பும் பணமும்
தரிசித்துவிட முடியும் எங்கள் சாமிகளை
ஒரு கூரிய கல்லிலோ
கூடுகளாடர்ந்த ஒரு மரத்திலோ எங்களால்
எங்களைவிட எளிமையானவர்கள் எங்கள் சாமிகள்
போக ஒரே மொழிதான்
எங்களுக்கும் எங்கள் சாமிகளூக்கும்
ஊருக்குள் வந்தால் என் பேரனும் என் மகனோட பேரனும்
வேற மொழியில் பேச
தன் மொழி பேச ஆளற்று செத்துப் போகும் எங்கள் சாமிகள்
எங்கள் வியர்வையின் ஈரம் ஒற்றி
தங்களை சுத்தம் செய்துகொள்ளும் மேகங்கள்
எங்களைத் தழுவ மறுதலிக்கும்
இசையறிவோ எழுத்தறிவோ இல்லாத எங்களுக்கு
எங்கள் அருவிகளின் பாடல் பிடிபடும்
உங்கள் உடையில் உங்கள் மொழியில் நாங்கள் வந்தால்
மிறண்டு ஓடிவிடும் குருவிகளூம் மைனாக்களூம்
முயல்களூம் மான்களும்
தங்கள் வாய்களை மூடிக் கொள்ளூம் அருவிகள் எங்களுக்கு
ஜீவித்திருக்க முடியாது எங்களால் இவைகளற்ற ஒரு நரகத்தில்
எல்லாமறிந்த நீங்களறியீர்கள்
எங்கள் நாய்களின் குருவிகளின் மொழி
வேண்டாமெங்களுக்கு உங்களின் காரும் படிப்பும் பணாமும் பதவிசும்
விட்டு விடுங்கள் எங்கள் அருவிகளோடும்
மரங்களோடும் மான்கள் மயில்களோடும் எங்களை
உங்களூக்குத் தெரியும்
நகர மாட்டோம் நாங்களென்பது
உறுமுவீர்கள்
படைகளை ஏவுவீர்கள்
தெரியும்
பறவைகளல்ல
ஒரு வேட்டுச் சத்தத்திற்கே பறந்து போக
வேறல்ல
இந்தக் காடென்பதும் நாங்களென்பதும்

நன்றி ; செம்மலர்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...