Thursday, December 16, 2010

ஏற்க இயலவில்லை ...

ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு என்கிறார்கள். எனில் இதில் எத்தனை ஆயிரம் கோடிகள் ஊழலாய் மாறியிருக்க வாய்ப்புண்டு என கணக்கிட்டுப் பார்க்கிறார்கள். எனில் யார் யாருக்கு எவ்வளவு கை மாறியிருக்கும் என ஊருக்கே கேட்கும்படி ரகசியமாய் கிசுகிசுக்கிறார்கள்.  இது குறித்து பாராளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழு விசாரனை நடத்த வேண்டும் என்கிறார்கள்.

அமைச்சர் மீது வழக்குப் போட அனுமதி கேட்டபோது எதுவுமே பேசாமல் மௌனம் காத்தமைக்காக பிரதமர் அலுவலகத்தை உச்சநீதி மன்றம் கண்டனித்துள்ளது. இன்னின்ன காரணங்களால் அனுமதிக்க இயலாது என்றாவது சொல்லியிருக்க வேண்டாமா என்று கேட்கிறார்கள் நீதியரசர்கள். அந்த மௌனத்தை உள்நோக்கம் கலந்த அலட்சியத்தின் உச்சம் என்றே அவர்கள் பார்க்கிறார்கள்.

தனது அறுபது ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் உச்சநீதி மன்றத்தின் அதிருப்தி இந்த அளவுக்கு முன்னெப்போதும் பிரதமர் அலுவலகத்தின் மீது விழுந்ததில்லை என்கிறார் அத்வானி. பிரதமர் ஒருவரிடம் உச்சநீதி மன்றம் கேள்வி கேட்பது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை என்கிறார்கள் யெச்சூரியும், பிருந்தா காரத்தும்.

இந்த விஷயத்தில் தான் சட்டத்திற்கு உட்பட்டும்,  பிரதமரின்  வழிகாட்டுதலின்  படியும்தான்  நடந்து  கொண்டுள்ளதாகவும், முடங்கிக் கிடக்கும் பாராளுமன்றம் சீராய் நடைபெற வேண்டும் என்பதற்காகவே தான் பதவி வில்கியுள்ளதாகவும், இதை செய்ததனால் தன் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச் சாட்டுகளைத் தான்  ஏற்பதாகக்  கொள்ளக் கூடாது என்றும் ராசா சொல்கிறார்.

ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடியை சாக்கிலே கட்டினால் எத்தனை லாரிகளுக்கு தேறும் என்பது குத்து மதிப்பாகக் கூட நமக்குத் தெரியாது. திரும்பிய திசையெங்கும், கண்னில் படுகிற யாவரும் இது பற்றியே பேசுகிறார்கள். போக இதை விட முக்கியமான விஷயம் குறித்து தேவையான அளவிற்கு விவாதம் தொடங்கப் படவேயில்லை என்று படுவதால் அது குறித்து பேசலாம் என்று படுகிறது.

எந்த தொலைக் காட்சி என்று சரியாய் நினைவில்லை. சுப.வீரபாண்டியன் அய்யாதான் தலைமை. அந்த நிகழ்ச்சியில் உச்சத்துக்கே ஏறி நின்று பேசினார் ராசா. " நிரம்பி வழியும் இந்த அவையில் வேண்டுமானால் ஜாதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனது கிராமத்தில் எனது ஜாதிதான் எனது முகவரி" என்கிற மாதிரி உணர்ச்சிப் பிழம்பாய் ராசா அவர்கள் வெடித்தபோது அதில் உள்ள நியாயம் சுட்டது. சத்தியமாய் சொல்கிறேன், பனித்த கண்களோடுதான் கை தட்டினேன். கலைஞரும், கனிமொழியும், ரஜினியும் கூட அதே மனநிலையில் இருந்ததையே தொலைக் காட்சியில் பார்க்க முடிந்தது.

ஸ்பெக்ட்ராம் விஷயம் கசியத் தொடங்கிய நாள் முதலே "ராசா ஒரு தலித் என்பதால் எப்படி வேண்டுமானாலும்  அபாண்டமாக பேசலாமா?" என்கிற  தொனியில்  தொடர்ந்து  பேசி  வருகிறார்  கலைஞர். நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாக நம்பப் படுகிறபெரும் இழப்பிற்கு பெருமளவு பொறுப்பு ராசாவுக்கு என்பது  குற்றச்சாட்டு. இது பொய்யென நிரூபிக்கப் படுமானால் அந்த நிமிடமே( அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் படுகிறது ) இப்போது உள்ள உசரத்தைவிட பல மடங்கு உசரத்திற்கு அவர் போய்விடுவார் என்பதும் மாறாக ருசுப்பிக்கப் படுமானால் அதன் விளைவுகள் என்ன என்பதும் எல்லோரும் அறிந்ததுதான்.

எதிர்வாதம் செய்வதற்கும்,  தன்னை நிரபராதி என மெய்ப்பித்துக் கொள்வதற்கும் சகல உரிமைகளையும்  சேர்த்தே  தந்துதான் இந்தக் குற்றச் சாட்டும் வைக்கப் படுகிறது.  " தலித் என்பதால் இத்தனை அபாண்டமா?" என்கிற மாதிரி வெதும்பும் கலைஞரின் மேலான பார்வைக்கு சில சந்தேகங்களை, தெளிவு பெறும் பொருட்டு வரிசைப் படுத்துகிறேன்.

திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகே, இன்னும் புரியும்படிக்கு  சொல்வதெனில் கலைஞர் அவர்கள் தண்டவாளத்தில் தலை வைத்துப் புரட்சித்த கல்லக்குடிக்கு மிக அருகே திண்ணியம் என்றொரு சின்ன கிராமம். அந்தக் கிராமத்தின் தலைவராய் செயல் படும் தலைவியின் கணவரிடம்  (அவர் ஓய்வு பெற்ர தலைமை ஆசிரியர் என்பதுதான் கொடுமயிலுங் கொடுமை ) தனது தங்கைக்கு தொகுப்பு வீடு ஒதுக்கித் தருமாறு ஒரு தொகையினத் தருகிறார் ஒருவர். அவர் ஒரு தலித். அநேகமாக அவர் அந்த ஊரின் தலையாரியாக இருக்கக் கூடும். வீடு ஒதுக்கப் படாதததல் கொடுத்த்ப் பணத்தைத் திரும்பக் கேட்கிறார். கிடைக்காது போகவே தண்டோரா போட்டு விஷயத்தை மக்களிடம் கொண்டு போகிறார்.

கொடுத்தப் பணத்தை திருப்பிக் கேட்டதற்காகத்தான் கலைஞர் அவர்களே திண்னியத்தில் ஒரு தலித் பீத் தண்ணீ குடிக்க நேர்ந்தது.

"தலித் என்பதால் ராசா மீது அபாண்டமாய் குற்றம் சுமத்துகிறீர்களே. நியாயமா?  என்று கொதிக்கும் கலைஞர் அவர்களே...

திண்ணியத்தில் ஒரு தலித் வாயில் ஆதிக்க சாதிகள் பீத் தண்ணியை ஊற்ரியபோது " தலித் என்பதால் பீத் தண்ணியை ஊற்றுவீர்களா பாவிகளே" என்று ஏன் கலைஞரே நீங்கள் குமுறவே இல்லை?

உத்தப்புரத்தில் தலித்துகளுக்கு நிழற்குடை அமைப்பதற்கு திரு. டி.கே.ரெங்கராஜன் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தொகை தருகிறார். ஆனால் அங்கே நிழற்குடை அமைத்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என சொல்லி அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மறுத்து விட்டார் என்ற சேதி எனக்கே தெரியும் போது உங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் சொல்ல இயலாது.

தலித்துகளுக்கு நிழற்குடை அமைத்துக் கொடுத்தால் என்ன மாதிரியான சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும்?. பச்சையாக சொல்வதெனில் அங்கே நிழற்குடை அமைத்தால் தலித்துகள் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்வார்கள். இது ஆதிக்க சாதிக் காரர்களை கொதிப் படையச் செய்யும். அதனால் அங்கு சட்டம் ஒழுங்கு கெடும் என்பதுதானே மாவட்ட ஆட்சித் தலைவரின் தயக்கம்.

தலித்துக்கள் என்றால் அவ்வளவு கேவலமா? அவர்கள் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்வதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வருமா?. வரட்டுமே.  அதை எதிர் கொள்ளத் துப்பில்லை  என்றால் எங்காவது ஓடி விடுங்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்த்து ஏன் கலைஞரே நீங்கள் கேட்க வில்லை?

உச்சமாக ஒன்றை சொல்லிவிட வேண்டும். எது எப்படியோ அதை விசாரனை தீர்மானிக்கட்டும். ஆனால் பெரம்பலூர் கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே பெரம்பலூருக்கு  அதிகம் செய்தவர் ராசா அவர்கள்.
பெரம்பலூர் தனித் தொகுதியிலிருந்து மாறி பொதுத் தொகுதியானவுடன்  நீங்கள் என்ன செய்தீர்கள்?  பெரம்பலூர்க் காரரான ராசாவை நீலகிரிக்கு அனுப்பினீர்கள். 

பொதுத் தொகுதியாய் மாறினாலும் ராசாதான் பெரம்பலூர் வேட்ப்பாளர் என்று ஏன் கலைஞரே நீங்கள் அறிவிக்க வில்லை.

பொதுத் தொகுதியில் தலித் ஒருவருக்கு கட்சிக்காரர்கள் வேலை பார்க்க மாட்டார்கள் என்று அஞ்சினீர்களா? அல்லது பொதுத் தொகுதியில் தலித் நிற்க்கக் கூடாது என்பதுதான் உங்கள் முடிவுமா? எனக்கென்னவோ அப்படித்தான் என்று தோன்றுகிறது கலைஞர் அவர்களே.

எனில், சேரியில் பிறந்த தலித்  சேரியில்தான் வாழ வேண்டும்,  தனித் தொகுதியில்தான் நிற்க வேண்டுமா கலைஞர் அவர்களே?

இதை, உங்களுக்குத் தனித் தொகுதி இருப்பதால் பொது தொகுதி கிடையாது என்றும்  கொள்ள  முடியுமே  கலைஞர் அவர்களே? 

ஆமாம் எனில் உங்களுக்கு சேரி இருப்பதால் பொதுத் தெரு கிடையாது என்றும் ஆகாதா கலைஞர் அவர்களே.

"ஒரு தலித் என்பதால் ராசாவின்  மீது அபாண்டமாக குற்றம் சுமத்தலாமா? என்ற உங்கள் கூற்றை ஏற்க இயலவில்லை , மன்னியுங்கள் கலைஞர் அவர்களே.

15 comments:

  1. வித்தியாசமான, நீறுபூத்த நெருப்பாய்க் கனன்றிருக்கும் கருத்துக்களை உள்ளடக்கிய பதிவு. நெத்தியடி!

    ReplyDelete
  2. நன்றி சேட்டை
    நலமா

    ReplyDelete
  3. இன்றைய சூழலுக்கு தேவையான கட்டுரை தான்.. ஆனால், எல்லா ஊழலும் போல இதுவும் கொஞ்ச நாளில் மறக்கப் படும், ஆட்சியாளர்களுக்கு சாதி ஒரு தற்காப்பு சாதனம் தானே? அது மாற அவர்கள் எப்போதுமே எதுவும் செய்வதில்லை... நெஞ்சுக்குள் உறுத்துவதை நீங்கள் சுருக்கென்று எழுதி விட்டீர்கள்,

    ReplyDelete
  4. நம்பிக்கையோடு இருப்போம் ப்ரியா

    ReplyDelete
  5. மனிதர்களைப் புரிந்துகொள்வதே இங்கு
    முடியாத
    காரியமாய் இருக்க
    நீங்கள்
    "மாண்புமிகு" மனிதர்களைப்
    புரிந்து கொள்ள
    முயல்கிறீர்கள்......

    ReplyDelete
  6. முதலில் நீண்ட நாட்கள் கழித்து தங்கள் பதிவைக் கண்ட மகிழ்ச்சியைக் கொண்டாடிக்கொள்கிறேன்.. பிறகு நிதானமாக கருத்து பதிகிறேன்..

    ReplyDelete
  7. யாரையும் புரிந்து கொள்ள முடியும் ப்ரியா. மிக்க நன்றி

    ReplyDelete
  8. யாரையும் புரிந்து கொள்ள முடியும் ப்ரியா. மிக்க நன்றி

    ReplyDelete
  9. மிக்க நன்றி பானு

    ReplyDelete
  10. பீத் தண்ணியை கலைஞரைக் குடிக்க வைத்தால்தான் உணர்வாரோ என்னவோ...

    ReplyDelete
  11. சந்தேகம் ஒன்று: பெம்மு இங்கு என்ன சொன்னார்?
    சந்தேகம் இரண்டு: அதை யார் எடுத்தது?

    ReplyDelete
  12. எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....

    இந்த விஞ்ஞான யுகத்திலும் அனைவர் கண்ணிலும் மண்ணைத் தூவும் கலைஞர் மெச்சப்படக்கூடியவர்தான்.

    ReplyDelete
  13. அவர இப்படி பாராட்டிக் கொண்டால்தான் உண்டு தோழர்

    ReplyDelete
  14. \\பாலகிருஷ்ணன் said...
    பீத் தண்ணியை கலைஞரைக் குடிக்க வைத்தால்தான் உணர்வாரோ என்னவோ...
    May 8, 2011 8:41 AM//

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை தோழர். மிக்க நன்றி.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...