Sunday, July 31, 2022

முதல் பட்டியலில் தமிழ்நாடும் இரண்டாவது பட்டியலில் தமிழும் இல்லை எனில்

 29.07.2022 அன்று நடந்த தேசியக் கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் ஒன்றிய உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்களது உரை சில அய்யங்களை நமக்கு எழுப்புகிறது

அவற்றின்மீது நமது உயர்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு பொன்முடி அவர்களும்
முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகிறோம்
தனது உரையினூடே
10 மாநிலங்கள் தங்களது மொழியில் பொறியியல் வகுப்புகளை நடத்த ஒத்துக் கொண்டுள்ளதாகவும்
ஆங்கிலம் தவிர 12 மொழிகளில் JEE மற்றும் NEET தேர்வுகள் நடத்தப்படுவதாகவும்
அவர் கூறியிருக்கிறார்
10 மாநிலங்கள் தங்களது மொழியில் பொறியியல் வகுப்புகளை நத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறுவது உண்மை எனில்
1) ஒப்புக்கொண்டுள்ளன என்றால் இதைக் கோரியது ஒன்றிய அரசு என்றும்
அந்தக் கோரிக்கையை 10 மாநிலங்கள் ஏற்றிருப்பதாகவும் பொருள்
இது உண்மையாக இருப்பின் அந்தப் பட்டியலில் தமிழ்நாடும் உள்ளதா?
இல்லை எனில் ஏன் இல்லை?
ஆங்கிலம் தவிர 12 மொழிகளில் NEET மற்றும் JEE தேர்வுகள் நடைபெறுவதாக அவர் சொல்வது உண்மை எனில் அவற்றுள் தமிழ் உள்ளதா?
முதல் பட்டியலில் தமிழ்நாடும்
இரண்டாவது பட்டியலில் தமிழும் இல்லை எனில்
அவை சார்ந்து அமைச்சரும் முதல்வரும் கவனம் செலுத்த வேண்டுகிறேன்
அமைச்சர் சொல்வது உண்மை இல்லை எனில் அதற்கு அமைச்சரும் முதல்வரும் எதிர்வினையாற்ற வேண்டுகிறேன்

முகநூல்
31.07.2022

இந்திவழிக் கல்வியை நோக்கியான நகர்வு இது

 


ஒருவர் சரியாகப் பேசினால்

பேசியது மாண்பமை அமித்சாவே ஆனாலும் பாராட்டிவிட வேண்டியதுதான்
அதே நேரத்தில் அதை பின்னணியில் உள்ள அரசியல் அய்யங்களையும் சேர்த்தே வைக்க வேண்டிய தேவையும் இருக்கிறது
அதை ஒட்டி சில கோரிக்கைகளையும் வைக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது
மூன்றையும் சேர்த்துதான் நாம் செய்து வருகிறோம்
செய்யவும் செய்வோம்
நேற்று அதாவது 29.07.2022 அன்று நடைபெற்ற தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 இன் இரண்டாம் ஆண்டு நிறைவுநாளில் இந்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா உரையாற்றிய செய்தியை 30.07.2022 நாளிட்ட THE HINDU தருகிறது
மிகச் சரியான தயாரிப்போடு கூடிய மிகச் சரியானதும் தேவையானதுமான உரை அது
இந்த நாட்டில் 95 சதவிகிதம் குழந்தைகள் தங்களாது தாய்மொழி வழியிலேயே கல்வி பயில்வதாலும்
தாய்மொழி வழியிலேயே ஒருவரது இயல்பான சிந்தனை இருக்கும் என்பதாலும்
பொறியியல், சட்டம், மருத்துவம் போன்றவற்றை தாய்மொழியிலேயே தருவதுதான் அவசியம் என்கிறார்
தாய்மொழி வழியில் ஆராய்ச்சிகள் நடக்காததால்தான் ஆராய்ச்சித் துறையில் இந்தியா இன்னும் போகவேண்டிய இடத்திற்கு போகவில்லை என்றும் ஆதங்கப்படுகிறார்
நாட்டின் 5 % விழுக்காடு ஆற்றலே கிடைக்கிறது என்றும் கூறுகிறார்
அதாவது,
தாய்மொழி வழியில் மருத்துவம், பொறியியல், சட்டம், ஆராய்ச்சி போன்றவை நடக்காததால் 5% விழுக்காடு மட்டுமே வெளி வருகிறது என்கிறார்
அதாவது,
தாய்மொழியில் படிக்காதவர்களான 95% மட்டுமே சட்டம்,ஆராய்ச்சி,மருத்துவம், மற்றும் பொறியியல் துறையில் படிக்கவும் பணியாற்றவும் செய்கிறார்கள் என்றும்
இவர்களால் எந்த முன்னேற்றமும் நாட்டிற்கு இல்லை என்றும்
தாய்மொழியில் படித்த 5% பேரால்தான் இந்தத் துறைகளில் வெளிச்சம் இருப்பதாகவும் அவர் சொல்வதாகத்தான் இதைக் கொள்ள முடியும்
இந்த விழுக்காட்டு அளவீட்டில் நமக்கு உடன்பாடு இல்லை
அமைச்சரிடம் நாம் கேட்க விரும்புவது
நீங்கள் குறிப்பிடும் இந்த விஷயத்தில் நீங்கள் இப்போது பேசியது மாதிரி தேசியக் கல்விக் கொள்கை உள்ளதா?
ஆம் எனில் திறந்த மனதோடு விவாதிப்போமா?
ஒருக்கால் இல்லை என்பதை நீங்கள் ஏற்பீர்கள் எனில் மாற்று என்ன?
எங்களைப் பொறுத்தவரை அந்த ஐந்து விழுக்காட்டினருக்காக வடிவமைக்கப் பட்டதே தேசியக் கல்விக் கொள்கை
அதே கூட்டத்தில் உரையாற்றியக் கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்ரா ப்ரதாபன் தேசியக் கல்விக் கொள்கை 2020 மெக்காலே திட்டத்திற்கு எதிராகக் கட்டமைக்கப் பட்டது என்பது
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரானது இது என்பத்தாகக் கொள்ள வைக்கிறது
உங்களது கட்சிக் கொள்கை ஒரே மொழி என்பதாக இருக்கிறது
கல்வி அமைச்சர் பேசுவது ஆங்கில வழிக் கல்விக்கு எதிரானது தேசியக் கல்விக் கொள்கை 2020 என்று கொள்ள வைக்கிறது
எனில்
இந்திவழிக் கல்வியை நோக்கியான நகர்வு இது என்றும் கொள்ள வைக்கிறது
அன்பிற்குரிய அமித் ஷா அவர்களே
எங்களது அய்யத்தைத் தெளிவுபடுத்துங்கள்

முகநூல்
30.01.2022

Friday, July 1, 2022

பார்த்தும் மிஸ் பண்ணிவிட்டேனே வெண்மணி தோழர்





 

எப்போதும் நெகிழ்ந்து உரையாடும் வெண்மணி வரதராஜன் தோழரை பார்க்க வேண்டும் என்று அப்படியொரு ஆசை நேற்று அரியலூர் புத்தகத் திருவிழாவில் சந்திக்கிறார் ஒரு யுகம் பழகிய நண்பரைப் போல பேசுகிறார் படங்களை அவர் அனுப்பியபோதுதான் அது அவரென்று தெரிகிறது பார்த்தும் மிஸ் பண்ணிவிட்டேனே தோழர்


முகநூல்

01.07.2022


அரியலூர் புத்தகத் திருவிழா 30.06.2022




 

முகநூல்

30.06.2022

Thursday, June 30, 2022

தீண்ட...

 தீண்ட

விரல்கள் தேவையில்லை

தீண்டாத

விரல்களும் தேவையில்லை


முகநூல்

30.06.2022

அழைப்பு 034


 


இன்று மாலை அரியலூர் புத்தகத் திருவிழாவில் உரையாற்ர அரியலூர் வருகிறேன்.


சந்திக்கலாம்



Wednesday, June 29, 2022

பிறகெப்படி கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி இதை ஒத்துக் கொள்ளும்

 


அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனம் எண்ணிக்கையில் எவ்வளவு அதிகமோ

அதைவிட எண்ணிக்கையில் அதிகமானது அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனத்திற்கு எதிரான போராட்டங்களின் எண்ணிக்கை
எண்ணிக்கை சற்றுக் குறைவாயினும் அமெரிக்க ஆதிக்க முயற்சிக்கு எதிரான வெற்றிகளின் எண்ணிக்கையும் கொள்ளத்தக்கனவாகவே உள்ளன
முதலாமது வெளித்தெரியுமளவிற்கு மற்றவை வெளித் தெரிவதில்லை
உலக ஊடக தர்மம் அப்படி
அமெரிக்காவின் திமிர்த் தலையில் நச்சென்று கிரீஸ் நீதிமன்றம் கொட்டிய ஒரு மகிழ்சம்பவத்தை 16.06.2022 நாளிட்ட தீக்கதிர் தந்திருக்கிறது
19.04.2022 அன்று கிரீசுக்கு சொந்தமான கடற்பகுதியில் ஈரானின் எண்ணெய்க் கப்பலொன்று எப்படியோ நுழைந்துவிட்டது
அந்தக் கப்பலில் ஒரு லட்சத்து பதினையாயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருந்தது
இந்தக் கப்பலை கிரீஸ் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது
அந்த 1,15,000 பீப்பாய்களாஇயும் அமெரிக்காவிற்கு அனுப்பப்போவதாக கிரீஸ் அறிவித்தது
ஈரான் கப்பல் அத்துமீறியே கிரீஸ் எல்லைக்குள் நுழைந்துவிட்டது என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம்
அதன்பொருட்டு கிரீஸ் அந்தக் கப்பலைக் கைப்பற்றியதைக்கூட நியாயம் இல்லை என்றுகூட நாம் சொல்லவில்லை
ஆனால்
அந்த எண்ணெய் முழுவதையும் அமெரிக்காவிற்கு அனுப்புவது என்ற முடிவை
எவ்வளவுதான் நியாயத்திற்கு சற்றும் சம்பந்தமே இல்லாதவராக இருந்தாலும்
மோடியேகூட ஒத்துக் கொள்ள மாட்டார்
பிறகெப்படி கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி இதை ஒத்துக் கொள்ளும்
மக்களைத் தெருவிற்குள் திரட்டியது அது
இந்தக் கோரிக்கையோடு சேர்த்து
ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான தனது ஈனத்தனமான நடவடிக்கைகளுக்கு தமது மண்ணை நரித்தனத்தோடு அமெரிக்க பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்து போராடினார்கள்
ஈரான் கிரீஸ் நீதிமன்றத்தை நாடியது
ஈரான் வசம் கப்பலை ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது
அந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய கிரீஸ் அரசாங்கத்திற்கு உரிமை இருந்த நிலையில்
மக்கள் தங்களது போராட்டத்திற்கான கோரிக்கைகளில் மேல்முறையீடு கூடாது என்பதையும் சேர்த்துக் கொண்டனர்
கிரீஸ் அரசாங்கம் பணிந்தது
கப்பலை திருப்பித் தருவது என்று முடிவெடுத்திருக்கிறது
கப்பல் கிரீசுக்குள் நுழைந்ததை,
கிரீஸ் அதைக் கைப்பற்றியதை,
எண்ணெய் பீப்பாக்களை அமெரிக்காவிற்கு வழங்க கிரீஸ் முடிவெடுத்ததை,
அதற்கு எதிராக மக்களை கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி திரட்டியதை
கிரீஸ் பணிந்ததை
ஊடகங்கள் சொல்லாது
நாம் உரத்து சொல்வோம்

#சாமங்கவிய இரண்டுமணி பதினைந்து நிமிடங்கள்
29.06.2022


Tuesday, June 28, 2022

நிச்சயம் இந்தியாவும் ஒருநாள் சிவக்கும்

 





சன்னஞ் சன்னமாய் உலகம் சிவந்து கொண்டிருக்கிறது

அதைப் பார்க்க நாங்கள் இல்லாமல் வேண்டுமானால் போகலாம்
ஆனால் நிச்சயம் இந்தியாவும் ஒருநாள் சிவக்கும்

திருச்சி மாநகராட்சிக்கு நமது கோரிக்கைகள்,

 


திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி அருகில் உள்ள பூங்கா இது

குழந்தைகளும் பெரியவர்களும் கணிசமாக வருகிறார்கள்
நடைபயிற்சியும் நடக்கிறது
அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது
சின்னச் சின்ன குறைகள்
சில இடங்களில் சன்னமோ சன்னமான புதர் எழுகிறது
சரி செய்யாவிட்டால் புதர் பெருக்கும்

பூச்சிகள் அண்டக்கூடும்



சறுக்குப் பலகைகள் பிடுங்கப்பட்டு சாத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்
குழந்தைகளின் குதூகலத்தை சறுக்கு விளையாட்டில்தான் காண முடியும்



குழந்தைகள் அமர்ந்து விளையாட ஸ்பிரிங்கின் மேல் பறவைகளோடு உள்ள இரண்டில் ஒன்றைக் காணோம்
எதிரெதிரே இரண்டு குழந்தைகள் அமர்ந்து விளையாடும்போதுதான் அந்த இடம் மலர்ந்து சிரிக்கும்
12 வயதுக் குழந்தைகளுக்கு மட்டுமே என்று அறிவிப்பு இருக்கிறது
ஆனால் 35 வயது யுவதிகளும் இளைஞர்களும் அதில் விளையாடுகிறார்கள்
இதனால் என்றாவது ஒருநாள் ஊஞ்சல் சங்கிலி அறுந்துபோக வாய்ப்பு உள்ளது
இது நடந்தால்,
ஊஞ்சலும் குழந்தைகளுக்கு இல்லாமல் போகும்





இறுதியாக உள்ள சின்ன அழகான குளத்தில் நீர் இருந்தால் அழகாக இருக்கும்
திருச்சி மாநகராட்சிக்கு நமது கோரிக்கைகள்,
சறுக்குப் பலகையை நிறுவுவது
அந்தப் பறவை பொம்மையை ஸ்ப்ரிங்கில் வைப்பது
ஊஞ்சலில் பெரியவர்கள் ஆடாமல் ஒரு காவலரைக் கொண்டு தடுப்பது
அந்தக் குளத்தில் நீரை நிரப்புவது
புதரை நீக்குவது
இதற்கான பட்ஜட் திருச்சி மாநகராட்சிக்கு ஒரு பொருட்டானதே இல்லை
இவற்றை திருச்சி மாநகர நிர்வாகம் கவனிக்க வேண்டும்

முகநூல்
28.06.2022

Monday, June 27, 2022

உங்களுக்குத் தெரிந்தவர்தான் சார்


 


பரியேறும் பெருமாளை நான்கைந்துமுறை பார்த்துவிட்டு
Kaakkai Cirakinile வில் நான்கு பக்கங்களுக்கு படம்குறித்து எழுதுகிறேன்

படாத பாடு பட்டு எப்படியோ மாரிசெல்வராஜின் நம்பரைப் பெற்று பேசுகிறேன்

அந்த உரையாடல் குறித்து ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் மாரி சொன்னதாக தோழர் முத்தையா கூறினார்

அந்த நீண்ட உரையாடலில் ஓரிடத்தில்

“அப்பறம் ஏன் இவனத் தடுக்கறீங்க? ன்னு கேட்பாரே கல்லூரி முதல்வர் அவர் யார் தோழர் என்று கேட்கிறேன்

உங்களுக்குத் தெரிந்தவர்தான் சார் என்கிறார்

ஒருமுறை தோழர் Karuppu Anbarasan அவர்களோடான உரையாடலில் ராமுவை சந்திக்க வேண்டும் என்று கூறினேன்

சந்திக்கலாம் என்றார்

இனி வாய்க்காது

இது மாதிரி தோழர்களை சந்திப்பதற்காகவாவது சொர்க்கம் என்று ஒன்று இருந்து தொலைத்திருக்கலாம்


முகநூல்

27.06.2022

இவன் என்பது ஒருநூறு கோடி



பத்தாது
மிதி
இன்னும் நாலு மிதி
நசுக்கு அவன் மூக்கை
ரத்தம் வரும்வரை
துப்பு அவன் மேல்
பக்கத்து ஊருக்கு பேசி
ஒரு வண்டி கெட்ட வார்த்தைகளை
கடன் வாங்கி
இறுக்கி நசுக்கு உன் வெறிதீறும் மட்டும்
அவன் குரல்வளையை
தூக்கிக் கிடாசு அவனை
உன் வண்டியில்
அடித்த கை வலிக்கும்
மிதித்த கால் வலிக்கும்
திட்டித் திட்டி வாய் வலிக்கும் உனக்கு
கொஞ்சம் வோய்வெடு
வேலையை
அடுத்த தோழனிடம் கை மாற்று
துவைத்து எடு
அவனை
சிறை எடுக்கும் வரை
வீடேகு
மதுகுடி
தூங்கித் தொலை
நாளையும் அழைக்கும்
களமுன்னை
நிற்பான் ஒருவன்
இவனினும் தெம்பாய்
இவனினும் தெளிவாய்
தெரிந்துகொள் நண்பா
ஒருமை அல்ல
இவன் என்பது
ஒருநூறு கோடி

முகநூல்
27.06.2022

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...