Saturday, May 7, 2022

குழந்தைங்க பள்ளிக்கு வர எந்த அளவிற்கும் குனிவோம்

 காலை பள்ளியில் தேர்வுப்பணிக்கான கூட்டங்கள் குறித்த பதற்றத்தில் இருந்தால்

அதைவிட பதற்றத்தோடு வருகிறார் தமிழாசிரியை ஜெயா
யாராச்சும் வந்து கூப்பிட்டால்தான் பள்ளிக்கு வருவதாக 10 A அனிதா சொல்லி இருக்கிறாள்
அதுதான் அவ்வளவு பதற்றம் அவருக்கு
அவரது பதற்றத்திற்கு இன்னும் இரண்டு காரணங்களும் இருந்தன
நேற்றைய கணக்கு சிறப்பு வகுப்பிற்கு வந்திருந்த அனிதா இன்றைய தனது வகுப்பிற்கு வரவில்லை
ஆகவே கணக்கில் தேர்ச்சி பெற்று தனது பாடத்தில் கோட்டை விட்டுவிடுவாளோ என்ற பயம் ஒரு காரணம்
B க்ளாசில் அனைத்துப் பிள்ளைகளும் வந்துவிட்டபோது தன் பிள்ளை மட்டும் வராத கோபம் இன்னொரு காரணம்
பிரச்சினை என்னவெனில்,
நேற்று அனிதாவின் தாயார் ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு அவளை அடித்திருக்கிறார்
அந்தக் கோவத்தை பள்ளியின்மீது காட்டியிருக்கிறாள் குழந்தை
சரி என்று இரண்டு குழந்தைகளை அனுப்பி வைத்தோம்
இவர்கள் போவதற்குள்,
பள்ளிக்கூடம் போவதற்கு இவ்வளவு அலும்பா என்று அவளது அம்மா இரண்டு போட கோவத்தின் உச்சத்திற்கே போய்விட்டாள் அனிதா
அழைக்கப் போன குழந்தைகளிடம் டீச்சர் வந்து கூப்பிட்டால்தான் வருவேன் என்று சொலிவிட்டாள்
வேறு வழி,
டீச்சர் அழைத்து வந்தார்
குழந்தைங்க பள்ளிக்கு வர எந்த அளவிற்கும் குனிவோம்

சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை

 முன்குறிப்பு:

இந்தக் கடிதம் எழுதி ஏழு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன. ஏனோ வைக்கவில்லை. அரசின் இரண்டாமாண்டு தொடங்கும் வேளையில் இதை வைப்பது சரி என்று படுகிறது.
சாஸ்த்ரா, லாக் அப் மரணங்கள், மின்தடை உள்ளிட்டு உரையாட இருக்கின்றன.
அவை குறித்தும் உரையாடுவோம்.
இப்போதைக்கு அந்தக் கடிதம்
*******************************************************
அன்பின் முதல்வருக்கு,
வணக்கம்.
நான் கண்ட இரண்டு சம்பவங்களும்
முதல்வராகப் பதவியேற்ற நாளில் நீங்கள் போட்ட கையெழுத்துகளில் ஒன்றும்
ஒன்றோடு ஒன்றைப் பொருத்திப் பார்க்குமாறும்
அது குறித்து தங்களுக்கு கடிதம் எழுதுமாறும் என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன
முதல் சம்பவம் மூன்று வருடங்களுக்கு முன்னர் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்தது
புதுக்கோட்டையில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சென்றுகொண்டிருக்கிறேன்
பேருந்தைப் பிடிப்பதற்குமுன் தேநீர் பருகத் தோன்றியதால் ஆவினுக்கு
செல்கிறேன்
ஆவினுக்கும் பெரியார் புத்தக நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் ஆண்களும் பெண்களுமாய் இருநூறிலிருந்து இருநூற்றி ஐம்பது பேர்
நின்று கொண்டிருக்கிறார்கள்
கைகளிலே தூக்குப்போனி
அவர்களது கலகலப்பான உரையாடல் என்னை அந்த இடத்திலேயே கட்டிப்போடுகிறது
அவர்கள் கொத்தனார்களும் சித்தாள்களும்
வரப்போகும் மேஸ்திரிகளுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்
மேஸ்திரிகள் வந்தால்தான் அவர்களில் எத்தனைபேருக்கு அன்று வேலை
கிடைக்கும் என்பது தெரியும்
தேநீரை முடித்துக் காசு கொடுப்பதற்குள் பத்துப் பதினைந்துபேர் அங்கே வருகிறார்கள்
அவர்கள் அனைவரும் மேஸ்திரிகள் என்பது புரிகிறது
அவர்கள் தலைக்கு பத்திலிருந்து பதினைந்துபேர் வரை தேர்ந்தெடுக்க மிச்சம் ஒரு இருபது அல்லது இருபத்தி ஐந்துபேர் சோகத்தோடு ஒதுங்குகிறார்கள்
இவர்களுக்கு அன்று வேலை இல்லை
இப்படித்தான்ஒவ்வொரு நாளும் சிலருக்கு வேலை கிடைக்காது என்கிறார்கள்
அதுவரை இருந்த கலகலப்பு மாறுகிறது
அந்தக் கலகலப்பான அரட்டையும் அதன்பிறகான இந்த சோகமும் அன்றாட வாடிக்கை என்கிறார் டீமாஸ்டர்
வேலை கிடைக்காத ஆண்கள் மிக சொற்பம்.
அவர்கள் தங்களது அல்லது தங்கள் நண்பர்களது இருசக்கர வாகனங்களில் புறப்படுகிறார்கள்
வேலை கிடைக்காத பெண்களில் சிலருக்கு கண்கள் கலங்கிவிட்டது அவர்கள் நகரப் பேருந்தில் வந்து திரும்ப வேண்டும். போக வர இருபது ரூபாயாவதும் அன்றைக்கு அவர்களுக்கு இழப்பு
அன்றில் இருந்து இன்றுவரை வேலை கிடைக்காது பேருந்துக்கு காசு செலவு செய்ய வேண்டிய அந்தப் பெண்களின் கண்ணீர் என்னை உலுக்கிக்கொண்டே இருக்கிறது முதல்வர் அவர்களே
மூன்று நாட்களுக்கு முன்னால் பெரம்பலூர் அய்யங்கார் பேக்கரி அருகே அதே மாதிரி ஒரு கூட்டத்தைக் கண்டேன்
ஏறத்தாழ அதே நடைமுறை
இங்கும் இருபது அல்லது இருபத்தி ஐந்து பேருக்கு வேலை இல்லை
ஆனால் அன்று திருச்சியில் கண்ட சோகம் இல்லை
வேலை கிடைத்த ஒரு பெண் வேலை கிடைக்காத தன் தோழியிடம் தனது சாப்பாட்டுக் கூடையைக் கொடுக்கிறார்
“இன்னைக்கு மோல்டு மலரு, சாப்பாடு தருவாங்க. எடுத்துட்டுப் போ”
இவரும் கை அசைத்து வழி அனுப்பிவிட்டு பேருந்திற்காக காத்திருக்கிறார் வேலை கிடைக்காத வருத்தம் தெரிகிறது. ஆனால் அன்று திருச்சியில்
அந்தப் பண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் சுவடுகளை இப்போது இவர்களிடத்திலே காணவில்லை
இதற்கு காரணம் முதல்வராகப் பதவியேற்ற அன்று
“இனி சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை”
என்று நீங்கள் போட்ட உத்தரவு
திருச்சியில் அந்தப் பெண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் தழும்புகளை உங்களது ஒற்றைக் கையெழுத்து துடைத்துப் போட்டிருக்கிறது
ஒருமுறை சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் ”லோட் மேன்கள்” என்று அழைக்கப்படும் மூட்டை தூக்கும் தோழர்கள் அன்றைய முதல்வர் கலைஞரை ஒரு கோரிக்கையோடு சந்திக்கிறார்கள்
தாங்கள் சுமக்கும் மூட்டை ஒன்றிற்கு பத்துப் பைசாவோ இருபது பைசாவோ கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை
அவர்களுக்கு “TIME SCALE” நிர்ணயித்து அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றுகிறார் கலைஞர்
அவர்களை நிரந்தரப்படுத்தி கலைஞர் அன்று போட்ட கையெழுத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல நிங்கள் போட்ட இந்தக் கையெழுத்து
இதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு வரும் என்று பொருளாதார மேதைகள் கணக்குப் போட்டு கதறுவார்கள்
அவர்கள் கதறட்டும்
இது இழப்பல்ல,
கூடுதல் செலவு,
அவ்வளவுதான் என்பதை நீங்கள் அறிவீர்கள்
அதை வருவாயைக் கூடுதலாக்குவதன் மூலம் சரிசெய்துவிடலாம் என்பதையும்
வருவாயை எப்படிக் கூட்டுவது என்பதையும் நீங்களும் அறிவீர்கள்
அதை அறிந்தவர்களை கூடவே வைத்திருக்கவும் செய்கிறீர்கள்
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு”
“இயற்றவும்
ஈட்டவும்
ஈட்டியதைக் காக்கவும்”
உங்களால் முடியும்
வல்லமையோடு வகுத்தலை செய்கிறீர்கள்
ஒன்று சொல்ல வேண்டும்,
ஆசிரியைகள் அரசியல் ஊழியர்கள், வசதிபடைத்தவர்கள் உள்ளிட்ட சிலரும் கட்டணமில்லா பேருந்தில் வருகிறார்கள்
இதுபோல் ஏராளம்
இவற்றைத் தடுக்கலாம்
தொடருங்கள்

Monday, May 2, 2022

குழந்தைங்க பள்ளிக்கு வர எந்த அளவிற்கும் குனிவோம்

காலை பள்ளியில் தேர்வுப்பணிக்கான கூட்டங்கள் குறித்த பதற்றத்தில் இருந்தால்
அதைவிட பதற்றத்தோடு வருகிறார் தமிழாசிரியை ஜெயா
யாராச்சும் வந்து கூப்பிட்டால்தான் பள்ளிக்கு வருவதாக 10 A அனிதா சொல்லி இருக்கிறாள்
அதுதான் அவ்வளவு பதற்றம் அவருக்கு
அவரது பதற்றத்திற்கு இன்னும் இரண்டு காரணங்களும் இருந்தன
நேற்றைய கணக்கு சிறப்பு வகுப்பிற்கு வந்திருந்த அனிதா இன்றைய தனது வகுப்பிற்கு வரவில்லை
ஆகவே கணக்கில் தேர்ச்சி பெற்று தனது பாடத்தில் கோட்டை விட்டுவிடுவாளோ என்ற பயம் ஒரு காரணம்
B க்ளாசில் அனைத்துப் பிள்ளைகளும் வந்துவிட்டபோது தன் பிள்ளை மட்டும் வராத கோபம் இன்னொரு காரணம்
பிரச்சினை என்னவெனில்,
நேற்று அனிதாவின் தாயார் ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு அவளை அடித்திருக்கிறார்
அந்தக் கோவத்தை பள்ளியின்மீது காட்டியிருக்கிறாள் குழந்தை
சரி என்று இரண்டு குழந்தைகளை அனுப்பி வைத்தோம்
இவர்கள் போவதற்குள்,
பள்ளிக்கூடம் போவதற்கு இவ்வளவு அலும்பா என்று அவளது அம்மா இரண்டு போட கோவத்தின் உச்சத்திற்கே போய்விட்டாள் அனிதா
அழைக்கப் போன குழந்தைகளிடம் டீச்சர் வந்து கூப்பிட்டால்தான் வருவேன் என்று சொலிவிட்டாள்
வேறு வழி,
டீச்சர் அழைத்து வந்தார்
குழந்தைங்க பள்ளிக்கு வர எந்த அளவிற்கும் குனிவோம்

Monday, April 4, 2022

ரசனை 033

 தோழர் காவனூர் சீனிவாசனது தீவிர வாசகன் நான்

நறுக்கு கவிதைகளில் அருக்கென்று ஒரு இடமுண்டு
இப்படியெல்லாம் எழுத இவரால்தான் முடியும்
"கால்மடக்கி‌
தரையில் படுத்திருக்கிறது‌
நாற்காலியின் நிழல்‌"

Friday, April 1, 2022

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தோழர்கள்


 


வாழ்த்துகள்,

சொல்லுங்க தோழர்களே செய்கிறோம்

அவ்வப்போது ஜூரியாகவும் செல்லலாம்

 தமிழ் இந்து வழங்கும் ‘அன்பாசிரியர்’ விருதிற்கான நேர்காணலுக்கான ஸ்பெஷல் ஜூரியாக அழைத்திருந்தார்கள்

நேர்காணலுக்கு வந்த ஒவ்வொரு தோழரும்
நாம் அறியாமலே நமக்குள் படிந்து கிடக்கும் “நாம்” எனும் அழுக்கை துடைத்து எறிந்தார்கள்
அகந்தை அண்டாமல் நம்மை காத்துக்கொள்ளவும்
என்னென்ன செய்யலாம் என்பதை போட்டியாளார்களிடம் கற்றுக்கொள்ளவும்
அவ்வப்போது ஜூரியாகவும் செல்லலாம்
மிக்க நன்றி Susithra Maheswaran

01.04.2022

Tuesday, March 1, 2022

அடித்து ஆடுங்கள் தோழர் ஸ்டாலின்

 

அன்பின் முதல்வருக்கு,

வணக்கம்.

நான் கண்ட இரண்டு சம்பவங்களும்

முதல்வராகப் பதவியேற்ற நாளில் நீங்கள் போட்ட கையெழுத்துகளில் ஒன்றும்

ஒன்றோடு ஒன்றைப் பொருத்திப் பார்க்குமாறும்

அது குறித்து தங்களுக்கு கடிதம் எழுதுமாறும் என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன

முதல் சம்பவம் மூன்று வருடங்களுக்கு முன்னர் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்தது

புதுக்கோட்டையில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சென்றுகொண்டிருக்கிறேன்

பேருந்தைப் பிடிப்பதற்குமுன் தேநீர் பருகத் தோன்றியதால் ஆவினுக்கு செல்கிறேன்

ஆவினுக்கும் பெரியார் புத்தக நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் ஆண்களும் பெண்களுமாய் இருநூறிலிருந்து இருநூற்றி ஐம்பது பேர்  நின்றுகொண்டிருக்கிறார்கள்

கைகளிலே தூக்குப்போனி

அவர்களது கலகலப்பான உரையாடல் என்னை அந்த இடத்திலேயே கட்டிப்போடுகிறது

அவர்கள் கொத்தனார்களும் சித்தாள்களும்

வரப்போகும் மேஸ்திரிகளுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்

மேஸ்திரிகள் வந்தால்தான் அவர்களில் எத்தனைபேருக்கு அன்று வேலை கிடைக்கும் என்பது தெரியும்

தேநீரை முடித்துக் காசு கொடுப்பதற்குள் பத்துப் பதினைந்துபேர் அங்கே வருகிறார்கள்

அவர்கள் அனைவரும் மேஸ்திரிகள் என்பது புரிகிறது

அவர்கள் தலைக்கு பத்திலிருந்து பதினைந்துபேர் வரை தேர்ந்தெடுக்க மிச்சம் ஒரு இருபது அல்லது இருபத்தி ஐந்துபேர் சோகத்தோடு ஒதுங்குகிறார்கள்

இவர்களுக்கு அன்று வேலை இல்லை

இப்படித்தான்ஒவ்வொரு நாளும் சிலருக்கு வேலை கிடைக்காது என்கிறார்கள்

அதுவரை இருந்த கலகலப்பு மாறுகிறது

அந்தக் கலகலப்பான அரட்டையும் அதன்பிறகான இந்த சோகமும் அன்றாட வாடிக்கை என்கிறார் டீமாஸ்டர்

வேலை கிடைக்காத ஆண்கள் மிக சொற்பம்.

அவர்கள் தங்களது அல்லது தங்கள் நண்பர்களது இருசக்கர வாகனங்களில் புறப்படுகிறார்கள்

வேலை கிடைக்காத பெண்களில் சிலருக்கு கண்கள் கலங்கிவிட்டது

அவர்கள் நகரப் பேருந்தில் வந்து திரும்ப வேண்டும். போக வர இருபது ரூபாயாவதும் அன்றைக்கு அவர்களுக்கு இழப்பு

அன்றில் இருந்து இன்றுவரை வேலை கிடைக்காது பேருந்துக்கு காசு செலவு செய்ய வேண்டிய அந்தப் பெண்களின் கண்ணீர் என்னை உலுக்கிக்கொண்டே இருக்கிறது முதல்வர் அவர்களே

மூன்று நாட்களுக்கு முன்னால் பெரம்பலூர் அய்யங்கார் பேக்கரி அருகே அதே மாதிரி ஒரு கூட்டத்தைக் கண்டேன்

ஏறத்தாழ அதே நடைமுறை

இங்கும் இருபது அல்லது இருபத்தி ஐந்து பேருக்கு வேலை இல்லை

ஆனால் அன்று திருச்சியில் கண்ட சோகம் இல்லை

வேலை கிடைத்த ஒரு பெண் வேலை கிடைக்காத தன் தோழியிடம் தனது சாப்பாட்டுக் கூடையைக் கொடுக்கிறார்

இன்னைக்கு மோல்டு மலரு, சாப்பாடு தருவாங்க. எடுத்துட்டுப் போ

இவரும் கை அசைத்து வழி அனுப்பிவிட்டு பேருந்திற்காக காத்திருக்கிறார்

வேலை கிடைக்காத வருத்தம் தெரிகிறது. ஆனால் அன்று திருச்சியில் அந்தப் பண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் சுவடுகளை இப்போது இவர்களிடத்திலே காணவில்லை

இதற்கு காரணம் முதல்வராகப் பதவியேற்ற அன்று

இனி சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லைஎன்று நீங்கள் போட்ட உத்தரவு

திருச்சியில் அந்தப் பெண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் தழும்புகளை உங்களது ஒற்றைக் கையெழுத்து துடைத்துப் போட்டிருக்கிறது

ஒருமுறை சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில்லோட் மேன்கள்என்று அழைக்கப்படும் மூட்டை தூக்கும் தோழர்கள் அன்றைய முதல்வர் கலைஞரை ஒரு கோரிக்கையோடு சந்திக்கிறார்கள்

தாங்கள் சுமக்கும் மூட்டை ஒன்றிற்கு பத்துப் பைசாவோ இருபது பைசாவோ கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை

அவர்களுக்கு “TIME SCALE” நிர்ணயித்து அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றுகிறார் கலைஞர்

அவர்களை நிரந்தரப்படுத்தி கலைஞர் அன்று போட்ட கையெழுத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல நிங்கள் போட்ட இந்தக் கையெழுத்து

இதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு வரும் என்று பொருளாதார மேதைகள் கணக்குப் போட்டு கதறுவார்கள்

அவர்கள் கதறட்டும்

இது இழப்பல்ல,

கூடுதல் செலவு,

அவ்வளவுதான் என்பதை நீங்கள் அறிவீர்கள்

அதை வருவாயைக் கூடுதலாக்குவதன் மூலம் சரிசெய்துவிடலாம் என்பதையும்

வருவாயை எப்படிக் கூட்டுவது என்பதையும் நீங்களும் அறிவீர்கள்

அதை அறிந்தவர்களை கூடவே வைத்திருக்கவும் செய்கிறீர்கள்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த                                                             வகுத்தலும் வல்லது அரசு

இயற்றவும்                                                                                                                          ஈட்டவும்                                                                                                                          ஈட்டியதைக் காக்கவும்”                                                                 

உங்களால் முடியும்

வல்லமையோடு வகுத்தலை செய்கிறீர்கள்

ஒன்று சொல்ல வேண்டும்,

எங்கள் பள்ளியின் ஆசிரியைகள் சிலரும் கட்டணமில்லா பேருந்தில் வருகிறார்கள்

இதுபோல் ஏராளம்

இவற்றைத் தடுக்கலாம்

தொடருங்கள்

வாழ்த்துகள்

அன்புடன்,

இரா.எட்வின்.

  

 

 

 

Tuesday, January 4, 2022

ஆன்லைன் சூதாட்டக் காவுகள்

 ஆன்லைன் சூதாட்டத்திற்கு கல்லூரிக் குழந்தைகள் தொடங்கி பள்ளிக்கூடத்து சிறு குழந்தைகள் வரைக்கும் அடிமையாகிப் போயிருக்கிறார்கள்

சமயபுரத்து கோயில் வாசலில் கண்ணடக்கம் விற்றுப் பிழைக்கும் ஏழைத்தாய்மார்களின் பிள்ளைகள்கூட இதில் சரிந்துபோனதைக் கண்டு உடைந்துபோனவன் நான்
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி ஒரு வெளிநாட்டு வங்கியில் வேலைபார்க்கும் ஒரு அதிகாரியின் குடும்பத்தையே காவு வாங்கியதை ஒட்டிய ஒரு விவாதத்தை சன் தொலைக்காட்சியின் இன்றைய
( 03.01.2022) ”கேள்விக் களம்” கொடுத்தது
ஆன்லைன் ரம்மி விளையாட்டு எவ்வளவு மோசமானது என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான்.
மணிகண்டன் என்பவர் ஒரு அயல்நாட்டு தனியார் வங்கியில் கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தவர்
மனவி இரண்டு குழந்தைகள் என்று அழகான குடும்பம்
ஏதோ ஒரு புள்ளியில் ஆன்லைன் ரம்மியில் கரைகிறார் மணிகண்டன்
ஆன்லைன் ரம்மியை நடத்தும் நிறுவனங்கள் நம்மை விளையாடிக்கொண்டே இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள் என்கிறார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு சிவபாலன்
நாம் விளையாடிக் கொண்டே இருப்பதற்கு அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதையும் அவர் புரிகிற மொழியில் விளக்கினார்
இருவர் விளையாட ஆரம்பிப்பதாகக் கொள்வோம்
தொடர்ந்து நாம் தோற்றுக் கொண்டே இருக்கிறோம் எனில் காசு தீர்ந்ததும் நாம் நகர்ந்து விடுவோம்
கமிஷன் நிறுவனதிற்குப் போகும் ஜெயித்த தொகை ஜெயித்தவனுக்குப் போகும்
நானும் நீங்களும் ஆளுக்கு 10000 ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து உட்காருகிறோம்
500 ரூபாய் பந்தயம்
எனில்,
நான் ஐநூறு ரூபாயை கட்டுவேன்
நீங்கள் ஐநூறு ரூபாயைக் கட்டுவீர்கள்
நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள்
அநாம் கட்டிய ஆயிரத்தில் 800 உங்களுக்கு வந்துவிடும்
மிச்சம் 200 ரூபாய் நிறுவனத்திற்கு கமிஷனாகப் போகும்
ஆக,
ஆளுக்கு 10000 ரூபாயோடு அதாவது 20,000 ரூபாயோடு உட்கார்ந்தோம்
முதலாவது ஆட்ட முடிவில் வென்ற உங்களிடம் 10,300 இருக்கும்
தோற்ற என்னிடம் 9,500 இருக்கும்
நிறுவனத்தின் கையில் 200 ரூபாய் போயிருக்கும்
இரண்டாவது ஆட்டத்தில் நான் வெற்றி பெறுவதாக வைத்துக் கொள்வோம்
இப்போது என்னிடம் 9,800 ரூபாயும் உங்களிடம் 9,800 ரூபாயும் இருக்கும்
நிறுவனத்திடம் 400 ரூபாய் இருக்கும்
ஆட்டம் விறுவிறுப்பாய் நகர்கிறது
40 முறை ஆடுகிறோம்
ஆளுக்கு இருபதுமுறை வெற்றி பெறுகிறோம் என்றால்
80 x 200 = 16,000 ரூபாய் நிறுவனத்திற்கான கமிஷன்
40 ஆட்டம் நான், 40 ஆட்டம் நீங்கள் சமமாக வெற்ரி பெற்றிருப்போம்
நான் கொண்டு வந்த 10,000 ரூபாயில் 2,000 என்னிடம் இருக்கும்
நீங்கள் கொண்டுவந்த 10,000 ரூபாயில் 2,000 உங்களிடம் இருக்கும்
விளையாடியது நாம்
சமாமாக வென்றிருக்கிறோம்
நாம் விளையாட விளையாட அவன் எவ்வளவு சம்பாரிக்கிறான் பாருங்கள்
நமக்குள் ஒரு போதை வருகிறது
விளையாடாமல் இருக்க முடியவில்லை
கையில் இருப்பதை எல்லாம் இழந்து
ஒருகோடி ரூபாய் கடன் வாங்கி
அதை வைத்து விளையாடி
தோற்றெல்லாம் இல்லை
விளையாடியதலாயே அனைத்தையும் இழந்து
கடனை அடைக்க முடியாமல்
மனைவியையும் பிள்ளைகளையும் கொன்று
தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் மணிகண்டன்
அரசு இதிலிருந்து இளைஞர்களை மீட்பதற்கு யோசிக்க வேண்டும்
#சாமங்கவிந்து 50 நிமிடங்கள்
04.01.2022

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...