மாதா மாதம் யாரேனும் ஒரு கூர்கா வீடுவீடாக வந்து பணம் வாங்கிப் போகிறார்கள்
எல்லோரும் இருபது ரூபாய்க்கு குறையாது தருகிறார்கள்
கூர்காக்களின் துயர்மிகு வாழ்க்கை குறித்து தெரிந்துகொண்டபிறகு விட்டு 50 ரூபாய்க்கு குறைவாகத் தருவதில்லை
இப்போது நான்தான் பெரும்பாலும்
வந்ததும் தண்ணீர் தருகிறேன்
முடிந்ததைத் தருகிறேன்
இந்தமுறை வந்தவரிடம்
நலமா கேட்டேன்
நலமென்றார்
சாரி நேப்பாளி தெரியாதென்றேன்
எதுக்கு எனக்குதான் தமிழ் தெரியுமே என்றார்
எப்படி தமிழென்றதும்
பொழைக்கப்போற இடத்து பாஷையை தானா கத்துப்போமென்றார்
இவ்வளவுதான் மொழி
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்