Monday, March 6, 2023

மூன்று வாரங்கள்... மூன்று நூல்கள்

 கடந்த மூன்று வாரங்களில்

“இவ்வளவுதான்” என்ற எனது இரண்டாவது கவிதை நூல் வேரல் பதிப்பகத்தின் மூலம் வந்திருக்கிறது
இந்த நூல் இவ்வளவு அழகாக வந்திருப்பதற்கு தோழர் அம்பிகா குமரன்தான் காரணம்
கிட்டத்தட்ட 100 கவிதைகளை அவருக்கு அனுப்பியதோடு என் வேலை முடிந்துவிட்டது
அதை இவ்வளவு செறிவாக எடிட் செய்து கொடுத்தது அவர்தான்
மட்டுமல்ல
அட்டைப்படத்திற்காக அவர் வைத்துள்ள இரண்டு கவிதைகளையும் சலித்து எடுத்து வைத்திருக்கிறார்
பேசப்படுகிற அட்டைப்படத்திற்கு உரியவர் தோழர் Lark Bhaskaran
திண்டுக்கல் Vetrimozhi Veliyeetagam வெளியிட்ட “நான் ஏன் உங்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை? என்ற புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு வந்திருக்கிறது
மட்டும் அல்ல,
200 நூல்கள் விற்றிருக்கின்றன
அடுத்ததாக
வானம் வெளியீடான “7B னா சும்மாவா?” வின் மூன்றாம் பதிப்பு வந்திருக்கிறது
எடுத்த எடுப்பிலேயே 650 பிரதிகளை ஒரு பள்ளிக் குழந்தைகளுக்காக வாங்கியிருக்கிறோம்
இந்த நூலைப் படித்துப் பார்த்த தோழர் அறச்செல்வன் மே மாதம் 22ஆம் நாள்
தனது வீட்டின் திறப்புவிழாவிற்கு வருபவர்களுக்கு கொடுப்பதற்காக 750 பிரதிகள் கேட்டிருக்கிறார்
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...