Wednesday, March 6, 2019

அய்யா பயந்துட்டார் தெரியுமா?”

மேல்நிலை முதலாமாண்டு குழந்தைகளுக்கு இறுதித் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. நான்கு அறைகள்.
ஒருபக்கம் மேல்நிலைப் பொதுத் தேர்விற்கான பறக்கும் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்று நண்பர்கள் அதற்கான வழிகாட்டுதல் கூட்டத்திற்காக சென்றுவிட்டனர்.
தமது தந்தை இறந்துவிட்டதால் ஒரு நண்பர் விடுப்பில் இருக்கிறார்.
இந்தநிலையில் இன்னும் ஆறு ஆசிரியர்களை தேர்வறைக் கண்காணிப்பிற்கான வழிகாட்டுதல் கூட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு வந்துவிட்டது.
எப்படி பள்ளியை, திருப்புதல் தேர்வை, நடத்துவதென்று புரியவில்லை.
இதுமாதிரி சூழ்நிலையில் திரு நரசிம்மராவ் அவர்களேகூட வெடித்துவிடக்கூடும்.
இறுகிய முகத்தோடு ஏற்பாடுகளை செய்வதற்காக அறையைவிட்டு வெளியே வருகிறேன். ஒரு அறையை செல்வம் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவனிடம் செய்தியை சொல்லலாம் என்று அறக்குப் போகிறேன். உள்ளே நுழைகிறபோது சிரித்துக் கொண்டே, “இது என்ன எழுதி இருக்குன்னு பாருங்க சார்”.
அவள்தான் வகுப்பில் முதல் குழந்தை.
“என்ன அபி எழுதி இருக்க?”
பேப்பரைப் பிரித்துக் காட்டுகிறாள்.
“என் சாவுக்கு எங்க அய்யாதான் காரணம்” என்று கொட்டை எழுத்தில் எழுதி இருக்கிறாள். அதிர்ந்துபோய் நிற்கிறேன். அவளோ கெக்கபிக்க என்று சிரிக்கிறாள்.
ஒன்றும் இல்லை,
“தண்ணீர் தொட்டி சென்று நீர் அருந்திவர அனுமதி கேட்டிருக்கிறாள். “பேசாம எழுது பாப்பா” என்று மறுத்திருக்கிறான். அவனது செல்லம் அவள். சிரித்துக் கொண்டே ”உடலைனா தாகத்திலேயே செத்துவிடுவேன்” என்று மிரட்டி இருக்கிறாள். “செய்” என்று சிரித்துக் கொண்டே சொல்லி இருக்கிறான்.
இப்படி எழுதிவிட்டு,
“நான் எழுதி வச்சுட்டேன். தாகத்துல செத்துட்டேன்னா HM சார் உங்களப் புடிச்சு போலீஸ்ல கொடுத்துடுவார்”
அந்த நேரம் பார்த்து குறுக்க போயிருக்கேன்.
“அய்யாவ புடிச்சு போலீஸ்ல கொடுப்பீங்கதானே?”
”நீயாச்சு உங்க அய்யாவாச்சு. ஆள விடுங்க புள்ளைங்களா” என்றாவாறு போன வேலையை மறந்தவானாக திரும்பிவிட்டேன்.
மதியம் ரவுண்ட்ஸ் போகும்போது அவளைப் பார்க்கிறேன்.
“என்னமோ சவடால் எல்லாம் விட்ட. கொஞ்சம்கூட வெக்கம் மானமே இல்லாம உக்காந்துருக்க”
“நீங்கதானே அன்னிக்கு ப்ரேயர்ல ‘மானம் கருதக் கெடும்’னு சொன்னீங்க. போக அய்யா பயந்துட்டார் தெரியுமா?”
”எனக்கா?”
“உங்களுக்கு வர்ஷினியே பயப்பட மாட்டா. எங்க அய்யா பயப்படுவாராக்கும். அவர் போலீசுக்கு பயந்துட்டு என்ன தண்ணி குடிக்க அனுப்பிட்டாரு தெரியுமா?”
சிரித்தபடியே நகர்கிறேன்.
இடைவேளையில் அறைக்கு வந்த செல்வத்திடம் “பயந்துட்டியாம்ல, சொன்னா”
“நானா?, ரவி தண்ணி கேட்டான். அனுப்பிட்டேன். பாவமா பார்த்தா. தொலையறானு அனுப்பிட்டேன். பயந்துட்டேன்னு சொன்னாளா? நாளைக்கு வச்சுக்கிறேன்”
சிரித்தேன்.
எங்க பள்ளி இப்படித்தான்.
ஊருல எங்க….?
#சாமங்கவிய 18 நிமிடங்கள்
28.02.2019

2 comments:

  1. செம ஜாலி பள்ளியாக இருக்கிறதே!! அருமையாக இருக்கு சார்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க சார்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...