Wednesday, April 25, 2018

இதில் “பிறப்பு” இல்லவே இல்லையா?

நேற்றைக்கு ஒரு மகத்தான, சோர்ந்து கிடந்த உள்ளங்களை உசுப்பிவிடுகிற மாதிரியான ஒரு பேரணி சென்னையில் நடந்திருக்கிறது.உண்மைய சொன்னால் சென்னை குலுங்கி இருக்கிறது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்றத்தின் ஆனையைத் திரும்பப் பெறவேண்டும் என்கிற கோரிக்கைக்கான பேரணி அது.


நிறையபேரின் வயிற்றெரிச்சலை அது சம்பாதித்திருக்கிறது. எந்தவிதமான முகமூடியையும் அணிவதற்குள்ளாகவே அவரை அறியாமலேயே மருத்துவரிடம் இருந்து வரும் எரிச்சலோடான எதிர்வினையை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
பலபேரின் மௌனம்தான் இதைவிடவும் எதைவிடவும் மோசமானதாய் எனக்குத் தெரிகிறது.
இது இடைச்சாதி அரசியலின் கோரமுகம். பார்ப்பணீயத் தளைகளில் இருந்து இடைச்சாதியின் முழுமையான விடுதலைக்கு தலித் விடுதலை என்பது மறுக்க இயலாத நிபந்தனை.
அதுகுறித்து பேசும்போது அங்கும் உள்ளடுக்குப் பிரச்சினைகள் இல்லையா? என்று கேட்கிறார்கள். இருக்கிறதுதான். ஆனால் நமக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அங்கும் உள்ளடக்குப் பிரச்சினை இல்லையா என்ற கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்.
1) அந்த உள்ளடுக்குப் பிரச்சினையும் தீர வேண்டும் என்பதாலா?
2) அங்க அடுக்குப் பிரச்சினை இருக்குள்ள அப்ப இங்கயும் இருக்கும் என்கிறீர்களா?
அடுக்குகளே இல்லாத ஒரு சமூகம்தான் தீர்வு.
முதலில் தலித் விடுதலையை சாத்தியமாக்குங்கள். தலித்துகளின் உள்ளடுக்கு தீர்வதற்கும் உதவுங்கள்.
விடுத்து,
தலித் பேரணியால் நான் ஒரே இடத்தில் முக்கால் மணிநேரம் ந்ற்க வேண்டியதாய் போனது என்று என்று நடிகை ஒருவர் புலம்ப, பார்த்தீர்களா பார்த்தீர்களா பொதுமக்களை எவ்வளவு இம்சை செய்கிறார்கள் என்று சிலர் கிளம்பி விட்டனர்.
இந்த முனகல்களை Hராஜா, குருமூர்த்தி, நாராயணன் போன்றவர்கள் ஊதிப் பெரிதாக்க முயல்வார்கள்.
நமக்கிருக்கும் கேள்வி,
எங்கள் பேரணி பொதுமக்களை இம்சித்தது என்று சொன்னால்
நாங்கள் பொதுமக்கள் இல்லையா?
உங்கள் பிள்ளைகள் ஏசி காரிலே பள்ளிக்கு போகும்போது பலநேரம் படிக்கட்டுகளே இல்லாத அரசுப்பேருதுக்காக எம் பிள்ளைகள் காத்துக் கிடக்கிறார்களே
உண்மையை சொல்லுங்கள்,
இதற்கு உங்கள் உழைப்பு மட்டும்தான் காரணமா?
எனில், நாங்கள் உழைக்கவே இல்லையா?
நெஞ்சைத் தொட்டு நினைத்துப் பாருங்கள் இதில் “பிறப்பு” இல்லவே இல்லையா?
உங்களுக்கு முக்கால் மணிநேரம் பாதிப்பு. எங்களுக்கு அடிப்படை உரிமைகளே இல்லாத நிலை
எங்களையும் பொதுமக்களாக ஏற்கும்வரை குறித்து வையுங்கள் இது தொடக்கம்தான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...