இந்த இரண்டு கவிதைகளும் வேறு வேறு நாட்களில் வேறு வேறு நபர்களால் எழுதப் பட்டவை. ஆனால் இரண்டிற்கும் ஏதோ தொடர்பிருப்பதாகவே படுகிறது
"பள்ளத்தில் கிடக்கும்
வானத்தின் மீது
எச்சில் உமிழ்கிறார்கள்"
சாலையில் பள்ளம், தேங்கிய மழைநீர், மழைநீரில் தெரியும் வானம். சாலையை செப்பனிட வக்கற்ற வர்க்கத்தை துப்பாமல் பள்ளத்தில் கிடக்கும் வானத்தைப் துப்பும் கயவாளித்தனம்
பள்ளத்தில் கிடந்தால் வாகனமும் துப்பப்படும்
இவை கடந்து அழகியலாக பார்த்தால் ஜென்த்தனம்
" மூன்றாம் பிறைக்கு
பாப்பா வைத்த பெயர்
கொஞ்சூண்டு நிலா"
அய்யோ அய்யோ "கொஞ்சூண்டு நிலா" எத்தனை அழகு
பாப்பா, கொஞ்சூண்டு நிலா அற்புதம்.
மகள் வைத்த பெயரென்று போட்டிருந்தாலும் அழகு கெட்டிருக்கும்
புகழுக்கும் பெரியநாயகிக்கும் என் கடனில் பாதியை எழுதி வைத்துவிடலாமென்றிருக்கிறேன்
வாழ்த்துக்கள் புகழ்
வாழ்த்துக்கள் பெரியநாயகி