Thursday, October 2, 2014
Thursday, September 25, 2014
கவிதை 20
பொம்மைக்காக ஏந்தப்பட்ட
குழந்தையின் கைகளில் பணக்கட்டும்
பணத்திற்காக ஏந்தப்பட்ட
மனிதனின் கைகளில் பொம்மையும் விழ
கடாசி எறிந்துவிட்டு
கடந்து போயினர் இருவரும்
கடவுளை சபித்தபடியே
தன்னைத் தானே
இருள்
சபித்துக் கொண்டது அறியாமல்
குழந்தையின் கைகளில் பணக்கட்டும்
பணத்திற்காக ஏந்தப்பட்ட
மனிதனின் கைகளில் பொம்மையும் விழ
கடாசி எறிந்துவிட்டு
கடந்து போயினர் இருவரும்
கடவுளை சபித்தபடியே
தன்னைத் தானே
இருள்
சபித்துக் கொண்டது அறியாமல்
Saturday, September 20, 2014
குட்டிப் பதிவு 10
கவி தகுர் என்ற தனது நூலில் க.ந.சு சொல்லும் ஒரு சம்பவத்தை சொல்லத் தோன்றுகிறது.
கலைகளின் காவலர், மெத்தப் படிப்பவர் என்ற பிம்பத்தோடு உள்ள ஒரு வழக்குறைஞர் வீட்டிற்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பத்துப் பதினைந்து முறை சென்றிருக்கிறார்.
அவரது மேஜைமீது தகுரின் ( தாகூரை தகுர் என்றுதான் க.ந.சு அவர்களும் அழைக்கிறார் ) புத்தகம் ஒன்று இருந்்திருக்கிறது.
புரட்டப் படாமலே இருந்திருக்கிறது அந்த நூல்.
தகுர் நூலை படிப்பவர் என்று காட்டிக் கொண்டால்தான் ஒரு மவுசு என்கிறார் க.ந.சு
மட்டுமல்ல அவ்வளவு உசத்தியானது தகுரின் மவுசு என்றும் சொல்கிறார் க.ந.சு
ஆக, அந்தக் காலமும் மவுசுகளாலேயே தீர்மானிக்கப் பட்டிருக்கிறது
Thursday, September 18, 2014
குட்டிப் பதிவு 9
பிரதமர் மோடி அவர்கள் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்தியில் பேச இருப்பதைக் குறித்து நண்பர்கள் கொதித்தெழுந்து விமர்சித்து வருகிறார்கள்.
எனக்கென்னவோ இது அவசியமற்றது என்றேபடுகிறது.
இன்னும் சொல்லப் போனால் மோடி அவர்கள் தனது தாய் மொழி குஜராத்தி எனும் பட்சத்தில் குஜராத்தியில் பேசுவதுதான் சரியாக இருக்கும்.
மொழிபெயர்ப்பு வசதிகள் விரிந்து கிடக்கும் காலத்தில் அவரவரும் தத்தமது தாய் மொழியில் பேசுவதும் அதை கேட்பவர்களின் தாய்மொழிகளில் பெயர்க்கப்பட்டு வழங்கப் படுவதும் அவசியம்.
இது சாத்தியமானதே.
நமது ஆசை இதுதான். தமிழகத்து உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமிழில் மட்டுமே பேசுவது என்று கட்சி பேதமின்றி முடிவெடுத்து செயல் படுத்த வேண்டும்.
இதற்கு சபாநாயகரின் அனுமதியை வாங்க வேண்டும் என்ற விதியை அல்லது நடைமுறையை நீக்கக் கோரி போராட வேண்டும்.
Sunday, September 7, 2014
கவிதை 19
எறும்பு மட்டும் கடித்து
எழுப்பியிருக்காவிட்டால்
சாப்பிட்டிருக்கக் கூடும் அவன்
தொடங்கிய கனவிலாவ
எழுப்பியிருக்காவிட்டால்
சாப்பிட்டிருக்கக் கூடும் அவன்
தொடங்கிய கனவிலாவ
Saturday, September 6, 2014
கவிதை 18
தலைக்குமேல்
தலைக் குப்புறக் கவிழ்ந்து
நனைத்துவிட்டுப் போனது
காற்றில் பறந்த
குழந்தை வரைந்த
தண்ணீர் வாளி
தலைக் குப்புறக் கவிழ்ந்து
நனைத்துவிட்டுப் போனது
காற்றில் பறந்த
குழந்தை வரைந்த
தண்ணீர் வாளி
Friday, September 5, 2014
கவிதை 17
புரிகிறது
விரல் பிடித்து விலை பேசியிருக்கிறீர்கள்
தாமிரமோ தங்கமோ எதையோ எடுக்க
எவனுக்கோ சத்தியம் செய்திருக்கிறீர்கள்
இந்தியிலோ, தமிழிலோ, ஆப்பிரிக்க மொழிகளில் ஏதோ ஒன்றிலோ
வேறு ஏதோ ஒரு மொழியிலோ
வனத்தை, மலைகளை யாருக்கோ தாரை வார்க்க
அப்புறப் படுத்த வேண்டுமெங்களை
நாக்கிலே தேன் தடவி எதையெதையோ சொல்கிறீர்கள் எங்களிடம்
வேண்டாம் துரைமார்களே உங்கள் ஊரும் சாமியும் படிப்பும் பணமும்
தரிசித்துவிட முடியும் எங்கள் சாமிகளை
ஒரு கூரிய கல்லிலோ
கூடுகளாடர்ந்த ஒரு மரத்திலோ எங்களால்
எங்களைவிட எளிமையானவர்கள் எங்கள் சாமிகள்
போக ஒரே மொழிதான்
எங்களுக்கும் எங்கள் சாமிகளூக்கும்
ஊருக்குள் வந்தால் என் பேரனும் என் மகனோட பேரனும்
வேற மொழியில் பேச
தன் மொழி பேச ஆளற்று செத்துப் போகும் எங்கள் சாமிகள்
எங்கள் வியர்வையின் ஈரம் ஒற்றி
தங்களை சுத்தம் செய்துகொள்ளும் மேகங்கள்
எங்களைத் தழுவ மறுதலிக்கும்
இசையறிவோ எழுத்தறிவோ இல்லாத எங்களுக்கு
எங்கள் அருவிகளின் பாடல் பிடிபடும்
உங்கள் உடையில் உங்கள் மொழியில் நாங்கள் வந்தால்
மிறண்டு ஓடிவிடும் குருவிகளூம் மைனாக்களூம்
முயல்களூம் மான்களும்
தங்கள் வாய்களை மூடிக் கொள்ளூம் அருவிகள் எங்களுக்கு
ஜீவித்திருக்க முடியாது எங்களால் இவைகளற்ற ஒரு நரகத்தில்
எல்லாமறிந்த நீங்களறியீர்கள்
எங்கள் நாய்களின் குருவிகளின் மொழி
வேண்டாமெங்களுக்கு உங்களின் காரும் படிப்பும் பணாமும் பதவிசும்
விட்டு விடுங்கள் எங்கள் அருவிகளோடும்
மரங்களோடும் மான்கள் மயில்களோடும் எங்களை
உங்களூக்குத் தெரியும்
நகர மாட்டோம் நாங்களென்பது
உறுமுவீர்கள்
படைகளை ஏவுவீர்கள்
தெரியும்
பறவைகளல்ல
ஒரு வேட்டுச் சத்தத்திற்கே பறந்து போக
வேறல்ல
இந்தக் காடென்பதும் நாங்களென்பதும்
நன்றி ; செம்மலர்
விரல் பிடித்து விலை பேசியிருக்கிறீர்கள்
தாமிரமோ தங்கமோ எதையோ எடுக்க
எவனுக்கோ சத்தியம் செய்திருக்கிறீர்கள்
இந்தியிலோ, தமிழிலோ, ஆப்பிரிக்க மொழிகளில் ஏதோ ஒன்றிலோ
வேறு ஏதோ ஒரு மொழியிலோ
வனத்தை, மலைகளை யாருக்கோ தாரை வார்க்க
அப்புறப் படுத்த வேண்டுமெங்களை
நாக்கிலே தேன் தடவி எதையெதையோ சொல்கிறீர்கள் எங்களிடம்
வேண்டாம் துரைமார்களே உங்கள் ஊரும் சாமியும் படிப்பும் பணமும்
தரிசித்துவிட முடியும் எங்கள் சாமிகளை
ஒரு கூரிய கல்லிலோ
கூடுகளாடர்ந்த ஒரு மரத்திலோ எங்களால்
எங்களைவிட எளிமையானவர்கள் எங்கள் சாமிகள்
போக ஒரே மொழிதான்
எங்களுக்கும் எங்கள் சாமிகளூக்கும்
ஊருக்குள் வந்தால் என் பேரனும் என் மகனோட பேரனும்
வேற மொழியில் பேச
தன் மொழி பேச ஆளற்று செத்துப் போகும் எங்கள் சாமிகள்
எங்கள் வியர்வையின் ஈரம் ஒற்றி
தங்களை சுத்தம் செய்துகொள்ளும் மேகங்கள்
எங்களைத் தழுவ மறுதலிக்கும்
இசையறிவோ எழுத்தறிவோ இல்லாத எங்களுக்கு
எங்கள் அருவிகளின் பாடல் பிடிபடும்
உங்கள் உடையில் உங்கள் மொழியில் நாங்கள் வந்தால்
மிறண்டு ஓடிவிடும் குருவிகளூம் மைனாக்களூம்
முயல்களூம் மான்களும்
தங்கள் வாய்களை மூடிக் கொள்ளூம் அருவிகள் எங்களுக்கு
ஜீவித்திருக்க முடியாது எங்களால் இவைகளற்ற ஒரு நரகத்தில்
எல்லாமறிந்த நீங்களறியீர்கள்
எங்கள் நாய்களின் குருவிகளின் மொழி
வேண்டாமெங்களுக்கு உங்களின் காரும் படிப்பும் பணாமும் பதவிசும்
விட்டு விடுங்கள் எங்கள் அருவிகளோடும்
மரங்களோடும் மான்கள் மயில்களோடும் எங்களை
உங்களூக்குத் தெரியும்
நகர மாட்டோம் நாங்களென்பது
உறுமுவீர்கள்
படைகளை ஏவுவீர்கள்
தெரியும்
பறவைகளல்ல
ஒரு வேட்டுச் சத்தத்திற்கே பறந்து போக
வேறல்ல
இந்தக் காடென்பதும் நாங்களென்பதும்
நன்றி ; செம்மலர்
Tuesday, September 2, 2014
நிலைத் தகவல் 63
அநேகமா இது எனக்கு இப்படியான இருபதாவது அனுபவம்
இன்று ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்தார்.
“ வந்தால் பார்க்க முடியுமா எட்வின்?”
“ இல்லை தோழர். மதுரையில் ஒரு கூட்டம். நாளை பார்க்கலாம்”
“உங்களுக்கென்ன. ஓய்வு பெற்றாச்சு. ஜாலியா ஊர் சுத்தலாலாம் இன்னும் நாலு வருஷம் ஓட்டனும்.”
“ நான் இன்னும் எட்டரை வருஷம் ஓட்டனும் தோழர்”
“என்னது?”
“ஆமாம், 2022 மேதான் ஓய்வு”
ஆமாம், எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி ஆகுது.
Monday, September 1, 2014
அழைக்கிறேன்
மதுரை புத்தகக் கண்காட்சியில் சந்தியா பதிப்பகத்தில் ( கடை எண் 82 மற்றூம் 83 ) எனது
1 இவனுக்கு அப்போது மனு என்று பேர்
2 எப்படியும் சொல்லலாம்
ஆகிய நூல்களூம்
நியூ சென்ச்சுரி புத்தக ஸ்டால்களில்
1 என் கல்வி என் உரிமை
என்ற நூலும் கிடைக்கு
1 இவனுக்கு அப்போது மனு என்று பேர்
2 எப்படியும் சொல்லலாம்
ஆகிய நூல்களூம்
நியூ சென்ச்சுரி புத்தக ஸ்டால்களில்
1 என் கல்வி என் உரிமை
என்ற நூலும் கிடைக்கு
Sunday, August 31, 2014
கவிதை 16
மரத்தின் நிழலைக்
கடத்த முடியாத கோவத்தில்
வெள்ளமாய் பெருத்து வந்து
மரத்தைக் கடத்திப் போனது
நதி
கடத்த முடியாத கோவத்தில்
வெள்ளமாய் பெருத்து வந்து
மரத்தைக் கடத்திப் போனது
நதி
Saturday, August 30, 2014
குட்டிப் பதிவு 8
"அங்குலி மாலா " என்ற கன்னட திரைப்படத்தின் கதாசிரியர் பரகூர் ராமசந்திரப்பாவிற்கு 2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த கதாசிரியருக்கான விருதினை கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
ஆனால் அது தனது சொந்த கதை அல்லவென்றும் வரலாற்றை கொஞ்சம் புனைவு படுத்தியதைத் தவிர தாம் எதுவும் செய்யவில்லை என்றும் நிறைய நண்பர்களிடமிருந்து இதற்கான தரவுகளைப் பெற்றுள்ளதாகவும் எனவே எழுதாத கதைக்கு விருது வாங்குவது நியாயமல்ல என்பதால் அதை நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தாங்களே எல்லா செலவுகளையும் செய்து அடுத்தவர் தருவதுபோல் பிம்பத்தை ஏற்படுத்தி விருதுகளை வாங்குவோர் மத்தியில் இவர் பளிச்சென மாறுபடுகிறார்.
வணங்கி வாழ்த்துகிறேன் ராமசந்திரப்பா சார்.
Subscribe to:
Posts (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
அன்பின் ஸ்டாலின் சார், வணக்கம் நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற கொஞ்ச காலத்தில் “ஸ்டாலின் கலைஞர் ப்ளஸ்” என்று எழுதினேன் அதைப் படித்ததும் ...
-
ஜார் மன்னர் தன் குடும்பத்திற்கான சொத்துக்களை கொஞ்சமும் முறையற்ற வகையில் சேர்த்துக்கொண்டிருந்த நேரம். அவரது மனைவி ரியல் எஸ்டேட் வணிகத்தில் ...