Wednesday, August 12, 2015

18 நீயுமில்லை... நானுமில்லை...

 “கார் துடைப்போம்செருப்பு துடைப்போம்மிட்டாய் மற்றும்  பிஸ்கட்  விற்போம்இப்படி எதையாவதுசெய்தால்தானே எங்களால் ஒரு வேளையாவது சாப்பிட முடியும் ” என்று பத்து வயதுகூட நிரம்பாத சிறுவன்ஒருவன் சொல்வதை சன்நியூஸ் தொலைக்காட்சியிலே பார்த்தபோது ஈரக் குலையே கலங்கிப் போனேன்.  பிஸ்கட் பாக்கட் வாங்கித்தரச் சொல்லியோஅல்லது நல்ல ஷூ வாங்கித் தரச் சொல்லியோ பெற்றோரிடம் வம்புசெய்ய வேண்டிய ஒரு குழந்தை ஒருவேளை சாப்பாட்டிற்காக கார் துடைப்பேன்செருப்பு  துடைப்பேன் என்றுசொல்வதைக் கேட்டபோது செத்தே போய்விடலாம்போல் இருந்தது.


சொன்னக் குழந்தை ஒரு பொலீவியக் குழந்தை என்பதோ  நான் பொலீவியன் இல்லை என்பதோ என் கண்கள் ஈரப்படுவதை தடுக்க முடியவில்லை. கண்கள் உடைப்பெடுக்க இரண்டு பிள்ளைகளைப் பெற்றவன் என்பதே போதுமானதல்லவா?

சே சுற்றிச் சுழன்று போராடிய பூமியில் ஒரு பத்து வயதுக் குழந்தை இப்படிச் சொல்லுமளவிற்கு அப்படி என்னதான்ஆயிற்று?

இதைவிட அடுத்தத் தாக்குதல் கொடுமையாக இருந்தது.

குழந்தைத் தொழிலாளாளர் முறையை பொலீவியா சட்டபூர்வமாக்கியிருக்கிறது என்கிற தகவல் விரைவுச்செய்தியாக சன் நியூஸ் தொலைக் காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது.

எவன் தெளித்த சாபம் தோழன் சே பெரிதும் நேசித்து ஆசீர்வதித்த அந்தப் பூமியை இவ்வளவு நாசப் படுத்தியது

இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் தொழுவம் போன்ற ஒரு இடத்தில் சே கிடத்தப் பட்டிருக்கிறார். அவருக்கு உணவெடுத்துக் கொண்டு ஒருமனிதர் வருகிறார். அவர்களுக்குள் நடந்த உரையாடலை இங்கு தருவது அவசியம் என்று படுகிறது.

உணவோடு ஒரு மனிதர் உள்ளே வருகிறார். அந்த பலவீனமான நிலையிலும் மிகவும் சிரமத்தோடு குரலுயர்த்தி அந்த மனிதனைப் பார்த்து கேட்கிறார்,

“நீங்கள் யார்?”

“நான் ஜூலியா கோர்ட்ஸ். இந்தப் பள்ளியின் ஆசிரியர்.”

“என்னது, பள்ளிக்கூடமா? இவ்வளவு மோசமான இடத்திலா பாடம் நடத்துகிறீர்கள். இங்கே அமர்ந்தா பச்சிளங் குழந்தைகள் பாடம் படிக்கிறார்கள்?”

கால்களில் குண்டுகள் பாய்ந்த ரணங்கள்.இழுத்து வரப்பட்ட வலி. இதற்காகவெல்லாம் கலங்காத அந்த மனிதனின் கண்கள் இவ்வளவு மோசமான இடத்தில் குழந்தைகள் அமர்ந்து படிக்கிறார்களே என்பதற்காக கலங்குகின்றன.

சிறிது நேரம் கழித்து அவரே சொல்கிறார்,

“கவலைப் படாதீர்கள். ஒருக்கால் நான் பிழைத்திருந்து, புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால் நல்ல பள்ளிக்கூடங்களைக் கட்டித் தருகிறேன்.”

தொழுவம் போன்ற இடங்களில் குழந்தைகள் படிப்பதையே தாங்கப் பொறுக்காது நல்ல தரமான பள்ளியும் தரமான கல்வியும் வேண்டி போராடிய சே வாழ்ந்த பூமியில்,

கல்வி கற்க வேண்டிய குழந்தைகள் ஒருவேளை சாப்பாட்டிற்காய் செருப்பைத் துடைப்பதையும்காரைத்துடைப்பதையும் சட்டபூர்வமாக்கியிருக்கும் அந்த அரசும்அரசியல் கட்சிகளும்தலைவர்களும் பெற்றோர்களும்நாசமாய் போகட்டும் என்று சபிக்கவும் இயலவில்லை.

பாலஸ்தீனத்தின் மீது மிருக வெறித் தாக்குதலை நடத்துமிஸ்ரேலுடனான தூதரக் உறவை துண்டித்துக் கொள்வதாக அறிவித்த மனித நேயமிக்க பொலீவியா இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வருகிறது எனில் எப்படியொரு மனவேதனையோடு அதை செய்திருக்கும்.

எப்படியோ தங்கள் குழந்தைகள் உயிரோடு இருக்க வேண்டும் என்கிற ஒரு சூழல் அவர்களுக்கு வந்ததைவிட என்ன ஒரு சாபம் இருக்கப் போகிறது என்று மனதுழன்றுகொண்டே  வந்திருந்த “மக்கள் போராளியை” எடுத்துவிரித்தால் யுனெஸ்கோ சொல்லியிருந்த ஒரு தகவலை அதிலொரு கட்டுரை பேசியது.

இதுவரை குழந்தைத் தொழிலாளிகளை அதிக அளவில் வைத்திருக்கும் நாடு ஆப்பிரிக்காஅந்தச் சாதனையைதற்போது இந்தியா முறியடித்துவிட்டதாக யுனெஸ்கோ கூறியுள்ளது

ஆகஅதிக அளவிலான குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடு இந்தியா.

குழந்தைத் தொழிலாளர் முறையை கடுமையான சட்டங்கள் மூலம் தடை செய்துள்ள நாடு இந்தியா.குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பதும்அனுப்புவதும் மட்டுமல்லகுழந்தையை பள்ளிக்கு அனுப்பாதபெற்றோரை குற்றவாளிகள் என்றே சொல்கிறது இந்தியச் சட்டம்.

தமிழ் நாடு போன்ற இடங்களில் பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகள் வேலைக்கு சென்றாலோபள்ளிக்குசெல்லாமல் வீட்டிலியே இருந்தாலோ கூட அதை தொலைபேசியில் சொன்னால் போதும் காவலர்களே அந்தக்குழந்தைகளை மீட்டெடுத்து வந்து அருகமை பள்ளிகளில் சேர்த்து விடுவார்கள்.

தொண்டு நிறுவனங்கள் இது விஷயத்தில் கடுமையாக முடுக்கிவிடப் பட்டுள்ளனஅவர்களின் செயல்பாடுகளும்மெச்சிப் பாராட்டும் படியாகவே உள்ளன.

பணி நிரவலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மட்டுமல்ல, ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகவும்  ஆசிரியர்கள் மாணவர்களைத் தேடி அலைவதைப் பார்க்க முடிகிறதுஇந்தஆண்டுக் கோடையில் ஏறத்தாழ பதினைந்து நாட்கள் அருகில் உள்ள துவக்கப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முடித்தமாணவர்களின் பட்டியலையும்நடுநிலைப் பள்ளிகளில் இருந்து எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்களின்பட்டியலையும் எடுத்துக் கொண்டு அவர்களின் வீடு வீடாக சென்று பள்ளியில் சேர்க்குமாறு நாங்கள்கேட்டிருக்கிறோம்.

நாங்கள் இது மாதிரி வீடு வீடாய்ப் போகும்போது பக்கத்தில் உள்ள வேறு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிஆசிரியர்களும் இதே பணியின் நிமித்தம் அலைவதையும் பார்த்திருக்கிறோம்.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்  பள்ளி ஆசிரியகள் ஒரு துக்க வீட்டில் சந்தித்துக் கொண்டால்கூட மாணவர்சேர்க்கை பற்றியே பேசிக் கொண்டோம்.

இத்தனைக்குப் பிறகும் யுனெஸ்கோ அறிக்கையின்படி குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் இந்தியாமுதலிடத்தில் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன?

மண்டை காய மனதுழன்று கொண்டிருந்த வேலையில்தான் அன்றைய நீயா நானாவில் தனியார்பள்ளிஆசிரியர்களுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் இடையிலான விவாதம் நடப்பதாகவும் பார்த்து எழுதுமாறும்எங்களது காக்கை ஆசிரியர் முத்தையா சொல்லவே பார்த்தேன்.

அந்த நிகழ்ச்சி தனியார் பள்ளி ஆசிரியர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களும் சந்திக்கும் சில நுட்பமான சிக்கல்களைவெளியே கொண்டு வந்ததோடுகல்வி வணிகமானதால் விளைந்துள்ள சில நுட்பமான அவலங்களையும்அம்பலப் படுத்தியதுஅந்த வகையில் கோபிக்கும் ஆண்டனிக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்.

இத்தனை செயல்பாடுகளைத் தாண்டியும் குழந்தைத் தொழிலாளிகள் அதிகப் பட்டுள்ளமைக்கான காரணங்களுள்மிக முக்கியமானது அருகமைப் பள்ளிகளின் போதாமைஎல்லா மாணவர்களும் படித்தே ஆகவேண்டுமெனில்அருகாமைப் பள்ளிகள் அவசியம்மாணவர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை என்பதற்காகபள்ளிகளை மூடுவதென்பது நிச்சயமாக நிறுத்தப் பட வேண்டும்.

ஒரே ஒரு மனிதன் ஓட்டுப் போடுவதற்காக ஒரு வாக்குச் சாவடியை அமைத்து ஊழியர்களை நியமித்து தேர்தலைநடத்தியிருக்கிறோம்.

29.04.96 அன்று நடந்த தேர்தல்.

கோட்டயம் அடுத்துள்ள பம்பாடி என்ற இடத்தில் உள்ள “ சரங்காட்டு எஸ்டேட்” என்ற இடத்தில்தாசன் என்பவர்காவலாளியாக வேலை பார்க்கிறார்.அங்கு வேலை பார்த்துவந்த 350 பேரும் வேலைகளின் பொருட்டு வேறு வேறுஇடங்களுக்கு புலம் பெயர்ந்துவிட்ட நிலையில் இவர் மட்டுமே அங்கு தொடர்கிறார்.

போதுமான ஆட்கள் இல்லை என்பதால் “பெரம்பா” சட்டமன்ற தொகுதிக்காக அங்கு இருந்த வாக்குச் சாவடியை 15கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்த ஒரு வாக்குச் சாவடியோடு தேர்தல் ஆணையம் இணைக்கிறது.

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் தனக்கு வாக்குச் சாவடி வேண்டும் எனக்கேட்டு போராடுகிறார்.

ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடியை தேர்தல் ஆணையம் அமைத்தது என்ற செய்தியை 30.04.96நாளிட்ட தீக்கதிர் சொல்கிறது.

இது அவரது உரிமைஅவர் பக்கம் நியாயம் இருக்கிறதுஅருகாமை வாக்குச்சாவடி இல்லாமல் போனால் ஒருவாக்காளன் வாக்களிக்க இயாமல் போகும்அது தவறு என்பதற்காக ஒரு வாக்குச் சாவடியையே தேர்தல்ஆணையம் நியமிக்கும் போது மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்காக பள்ளிகளை மூடுவதும்,ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் வேறு இடங்களுக்கு மாறுதல் செய்வதும் நியாயம் இல்லை.

வாக்களிக்கும் உரிமையை ஒரு வாக்காளன் இழந்துவிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உணர்கிறபோதுஅதைவிட கொஞ்சமும் குறைந்தது அல்ல ஒரு மாணவனின் கல்வி பெறும் உரிமை என்பதை கல்வித்துறைஉணர வேண்டாமாஎன்பதை உணர்த்தத் தவறியது அன்றைய நீயா நானா?

நீயா நானா யார் சிறந்தவர் என்கிற ரீதியில் தனியார்பள்ளி ஆசிரியர்களும்அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஏறத்தாழசண்டையே போட்டுக் கொண்டதில் இன்றைக்கு கல்வி இப்படிப் போனதற்கான காரணிகளான தனியார் பள்ளித்தாளாளர்களும்தமிழை எங்கள் பள்ளியில் நடத்த மாட்டோம் உங்களால் இயன்றதைப் பார்த்துக் கொள்ளுங்கள்என்று அரசுக்கே சவால் விடுமளவற்கு அவர்களை வளர்த்தெடுத்துள்ள அரசு எந்திரமும் எளிதாகத் தப்பித்துக்கொண்டார்கள் என்பதை கோபி மற்றும் ஆண்டனி உணரவேண்டும் என்பதே நமது ஆசை.

கற்பிப்பதைத் தவிர்த்து ஆசிரியர்கள் என்ன என்ன வேலை பார்க்க வேண்டியுள்ளது என்பதையும் அவர்கள்அனுபவிக்கும் மன உளைச்சலையும் இந்த நிகழ்ச்சி வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என்கிறஉண்மையை யாராலும் மறுத்துவிட இயலாதுதான்.

100 விழுக்காடு தேர்ச்சி, 1190 மதிப்பெண்கள் என்கிற இலக்கில் தனியார் சுயநிதிப் பள்ளிகள் நடத்தும் அயோக்கியத்தனங்கள் பலவற்றை இந்த நிகழ்ச்சி வெளிக் கொணர்ந்தது.

குறிப்பாக பெரும்பான்மையான சுயநிதிப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புப் பாடங்களும், 9 ஆம்வகுப்புப் பாடங்களும்நடத்தப் படுவது இல்லை என்கிற உண்மை வெளியே வந்தது.

அண்ணா யுனிவர்சிட்டி நடத்திய தேர்வில் இஞ்சினியரிங் மேத்தமெடிக்ஸ் என்கிற பாடத்தில் பன்னிரண்டாம்வகுப்பில் கணிதத்தில் 200 கு 200 வாங்கிய மாணவர்களில் ஏறத்தாழ 80 விழுக்காடுபேர் தேர்ச்சி பெறவில்லை.அன்றைய துணை வேந்தர் மிகவும் நொந்து போனவராக மேல்நிலைக் கல்வியில் ஏதோ கோளாறு நடக்கிறதுஎன்பதாக சொன்னார்.

200 கு 200 வாங்கிய ஒரு குழந்தையால் எப்படி தேர்ச்சிபெற இயலாமல் போகும்?

அதே ஆண்டு அந்தத் தேர்வை எழுதிய கிஷோர் தேர்ச்சி பெறுகிறான். 200 வாங்கியவனே தேர்ச்சி பெறாத போதுஉதவி பெறும் தமிழ் வழிப் பள்ளியில் படித்த இவன் எப்படி  என்கிற எனது ஆச்சரியத்தை அவனே உடைக்கிறான்,

“ 11 ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் எல்லா சேப்டரையும் எங்க சார் நடத்தியிருக்கார் பாஅதுதான்என்கிறான்.

அரசுப் பள்ளிகளை கேவலமாக பேசிய தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கு ஒன்றைச் சொல்லவேண்டும்.

தனியார் பள்ளி என்பது ஒரு முதலாளிக்கு சொந்தமானதுஉங்களைப் பிடிக்கவில்லை என்றால் அடுத்த கணமேநீங்கள் வெளியேற்றப் படுவீர்கள்.எனக்குத் தெரிய ஒரு பள்ளியில் இந்த இரண்டு மாதங்களில் மட்டும் 7இயற்பியல் ஆசிரியர் மாற்றப் பட்டிருக்கிறார்.

இன்னொரு பள்ளியில் கோ ஆர்டினேட்டர் ஆங்கில ஆசிரியரை அழைத்து அந்த கெமிஸ்ட்ரி சார் மீது புகார் எதுவும்இல்லைதான் ஆனாலும் அவர் இங்கிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறதுஇன்று சாயந்திரம் ரிலீவ் ஆகச்சொல்லுங்கள் என்கிறார்அடுத்த நாளுக்கான வீட்டு வேலைகளைக் கொடுத்துவிட்டு நம்பிக்கையோடு மதியம்சாப்பிட வந்தவரிடம் இந்த தகவல் சொல்லப் பட்டதுஅவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?

வெள்ளிக் கிழமை நேர்காணல்நிறைய சோதிக்கிறார்கள்திங்கள் பணியில் சேரச் சொல்கிறார்கள்ஒருநிறுவனத்தில் கணக்கராக வேலை பார்த்து வந்தவர் பணியை ராஜினாமா செய்துவிட்டு வருகிறார்எந்தக்காரணமும் இல்லாமல் அன்று மாலையே அவர்பணிநீக்கம் செய்யப் படுகிறார்.

பணிப் பாதுகாப்பு சுத்தமாக இல்லாத இடங்கள் சுயநிதிப் பள்ளிகள்.

ஒருமுறை என்னோடு பன்னிரண்டாம் வகுப்பு தாள் திருத்த வந்த ஒரு இளைய ஆசிரியன் தாள் திருத்தும்மையத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு என் மடியில்தான் இறந்தான்.

அவனது ஈமச் சடங்குகளை செய்வதற்குக் கூட தாள் திருத்திய நாங்கள்தான் வசூலித்து கொடுத்தோம்எந்தப்பணமும் , உதவியும் அந்த நிர்வாகம் தராத நிலையில் தாள்திருத்திக் கொண்டிருந்த நாங்கள் வசூலித்துத் தந்த1,06,000 தான் அந்த ஏழைக் குடும்பத்திற்கான உதவியாக அமைந்தது.

அன்றைக்கு அம்பலப் பட்ட இன்னொன்று , 97 விழுக்காட்டிற்கும் அதிகமான அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களதுபிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் உண்மைநம்பிக்கையோடு நமது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் படிக்க வைப்போம்.

ஆகஎந்தத் தனியார் சுயநிதிப் பள்ளியும் உங்களது பள்ளியல்ல சுயநிதிப் பள்ளியில் பணியாற்றும் தோழனே,தோழியேஉங்களது உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் பணக்காரர்களின் சந்தை அவை.

தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்புநல்ல ஊதியம் போன்றவற்றிற்காக போராட வேண்டிய கடப்பாடுநமக்கிருக்கிறது.

அரசுப் பள்ளிதான் என் பள்ளிஉங்கள் பள்ளிநமது பள்ளிகல்வி இப்படி பாழ்பட்டு போனதற்கு நீயுமல்லநானுமல்ல காரணம்.

எல்லாப் பள்ளிகளும் அரசுப்பள்ளிகள். குழந்தைகள் பாதுகாப்பாய் நடந்து போய் வருகிற தூரத்தில் பள்ளிகள் என்று அரசிடம் கேட்டுப் போராட நமக்கு உரிமையிருக்கிறது.

கல்வி பொதுப் பட கரம் கோர்ப்போம். 

நன்றி : ‘ காக்கைச் சிறகினிலே’

தேர்ச்சி பெறாதவர் என யாரும் இல்லை....


 எல்லா மாணவர்களும் தேர்ச்சி பெறவேண்டும் என்பதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சமீப காலமாக மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.பள்ளிக் கல்வித்துறை செயலர் மாதா மாதம் உயரதிகாரிகளைக் கூட்டி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறும்படியாக கல்வித்துறையின் செயல்பாடுகளை முடுக்கி விடும்படி அறிவுறுத்துகிறார்கல்வித்துறை உயரதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை மாதத்திற்கு இரண்டு மூன்று கூட்டங்களை போட்டு முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்கல்வித்துறை அதிகாரிகள் வாரத்திற்கு இரண்டு மூன்று முறை தலைமை ஆசிரியர்களைக் கூட்டி முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்பல தலைமை ஆசிரியர்கள் தினந்தோறும் ஆசிரியர் கூட்டங்களைக் கூட்டி ஆசிரியர்களை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 இதில் பல கூட்டங்களில் மேலிருப்போர் தங்களுக்கு கீழிருப்போரை படு கேவலமாக நடத்துவதுதான் சோகம்அவரவர் அவரவர் மேலதிகாரியிடம் வாங்கி வரும் வசைகளை தங்களுக்கு கீழுள்ளோர்மீது இறக்கி வைப்பதில் சமர்த்தர்களாகவே இருக்கிறார்கள்ஆசிரியர்களால் மாணவர்கள் மீது இறக்கி வைக்க இயலாத நிலை என்பதால் ஆசிரியர்கள்தான் பரிதாபத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள்.

 ஆசிரியர்கள் மாணவர்களை முடுக்கிவிட்டபடியே இருக்கிறார்கள்வருடா வருடம் தேர்ச்சி விழுக்காடும் ஆச்சரியப் படுமளவிற்கு கூடிக் கொண்டேதான் வருகிறதுபோகிற போக்கைப் பார்த்தால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய குழந்தைகள் அனைவரும் தேர்ச்சி பெறும் காலம் அடுத்த அல்லது அதற்கு அடுத்த ஆண்டிற்குள் வந்துவிடும் என்றே தோன்றுகிறதுபன்னிரண்டாம் வகுப்பைப் பொறுத்தவரை இது சற்று தாமதமாகலாம் என்றாலும் நிச்சயமாக  நிகழவே நிகழும்.

 இதில் கல்வித் துறையின்உயரதிகாரிகளின்அதிகாரிகளின்தலைமை ஆசிரியர்களின்ஆசிரியர்களின்தனிப் பயிற்சி ஆசிரியர்களின்,பெற்ரோர்களின் ,மாணவர்களின் கடும் உழைப்பு இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாதுமேற்சொன்ன அனைவரது உழைப்பும் மெனக்கெடலும் இதில் நிச்சயம் இருக்கும்.

 நூறு சதவிகித தேர்ச்சி விழுக்காடு என்பதன் பொருள் என்ன?

 7,88,413 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 7,88,413 மாணவர்களும் தேர்ச்சியும் பெற்று விடுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்எனில்தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டார்கள்எனவே நூறு விழுக்காடு தேர்ச்சி என்பது மாதிரிதான் பதில் வருகிறதுஒரு வகையில் பார்த்தால் இது சரிபோலவும் படக் கூடும்ஆனால் அது எவ்வளவு ஆபத்தான மதிப்பீடு என்பது இன்னும் கொஞ்சம் ஆழமாக இதனுள் பயணித்தாலே பாமர மனிதனுக்கும் புரிந்துவிடும்.

 2015 மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய குழந்தைகள் அனைவரும் அநேகமாக 2005 ஜூன் மாதம் வாக்கில் முதல் வகுப்பில் சேர்ந்திருப்பார்கள். 2005 ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள் அனைவரும் 2015 ஆம் ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார்களா?

 நிச்சயமாக இருக்காதுஎவ்வளவு குறைவாகக் கணக்கிட்டாலும் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வருவதற்குள் குறைந்த பட்சம் ஐம்பதாயிரத்திலிருந்து எழுபத்தி ஐயாயிரம் வரைக்கும் எண்ணிக்கை குறைந்திருக்கும்ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணாவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்புவரை கல்வியைத் தொடர இயலாதபோது எப்படி இதனை நூறு விழுக்காடு தேர்ச்சி என்று கொண்டாடுவது?

 இப்படியாகத் தங்களது பள்ளிக் கல்வியைத் தொடர முடியாது இடையிடையே நின்றுவிடும் போக்கிற்கு “ இடை நிற்றல்” என்று பெயர்.

 இத்தகைய இடைநிற்றலில் மாணவர்களின் எண்ணிக்கையை விடவும் மாணவிகளின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளதுகூலி வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்குடிகாரத் தந்தையின் பொறுப்பில்லாதத் தனத்தால் போக முடியாமைதம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்பருவமடைதல்இது கடந்து படிக்கிற வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெறாமை போன்றவை இடை நிற்றலுக்கான சில வலுவான காரணங்கள்.
 இதுபோக அரசாங்கம் என்னதான் உத்திரவு போட்டாலும் சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற மாட்டான் என்று தாங்கள் சந்தேகிக்கிற மாணவர்களை ஒன்பதாம் வகுப்பிலேயே காடாத் துணி கட்டி வடிகட்டி விடுகிறார்கள்.

 சில பள்ளிகள் பெற்ரோர்களை வரவழைத்து தேனொழுக உபசரித்து ஏதோ பையனின் நலனுக்காக பேசுவதுபோல பேசுவார்கள்பையன் ஃபெயில் என்றும்ஆனால் பையனும் பெற்றோரும் பள்ளிக்கு மிகவும் வேண்டியவர்கள் என்பதால் “பாஸ்” போட்டு மாற்றுச் சான்றிதழைத் தருவதாகவும் முடியுமானால் வேறு ஏதேனும் பள்ளியில் படிப்பைத் தொடருமாறும் அல்லது ஏதேனும் தனிப் பயிற்சி நிலையங்களில் சேர்த்து பகுதி பகுதியாக தேர்ச்சிபெற முயற்சிக்குமாறும் விலையில்லா ஆலோசனைகளை வழங்குவார்கள்பள்ளியில் எனில் மொத்த பாடங்களையும் நடத்தவேண்டி இருக்கும் தனிப்பயிற்சி எனில் பரிட்சைக்கு தேவையானதை மட்டும் திரும்பத் திரும்ப எழுதி வாங்குவார்கள்சுலபமாக தேர்ச்சி பெற்றுவிடலாம்,அது மட்டும் இல்லாது அக்டோபரில் சில தாள்கள் மார்ச்சில் சில தாள்கள் என வருஷத்தை வீணடிக்காமல் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற பிரச்சாரத்தில் பெரும்பான்மை பெற்ரோர்கள் விழுந்து விடுவார்கள்.

 இன்னும் சில பள்ளிகளில் வேறு மாதிரி நடைமுறையைக் கடைபிடிப்பார்கள்அவர்கள் மாற்றுச் சான்றிதழைத் தந்து விடுவார்கள்ஆனால் மாணவனை வெளியே அனுப்ப மாட்டார்கள்அவன் தொடர்ந்து பள்ளிச் சீருடையோடு பள்ளிக்கு வரலாம்படிக்கலாம்ஆனால் தனித் தேர்வராகத்தான் தேர்வெழுத வேண்டும்வினோதம் என்னவெனில் இப்படி தேர்ச்சி பெறமாட்டான் என்றெண்ணி தனித்தேர்வராக அனுப்பப்பட்ட மாணவர்கள் பல நேரங்களில் தேர்ச்சி பெற்றுதேர்ச்சி பெறுவான் என்று நம்பிய குழந்தைகள் தேர்ச்சியடையாது போய்விடுவதுதான்.

 இத்தகைய வடிகட்டல்களுக்குப் பிறகு கிடைக்கும் இந்தத் தேர்வு விழுக்காட்டினை எப்படி நூறு விழுக்காடு என ஏற்றுக் கொண்டாட முடியும்?

 இதுமாதிரியான காரியங்களுக்கு எதிராகத்தான் சட்டங்களும் அரசின் செயல்பாடுகளும் இருக்கின்றனஆனாலும் இதுமாதிரி காரியங்களும் தொடர்ந்து தொடர்ந்துகொண்டுதான் உள்ளன.

 ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் யாரையும் நிறுத்திவிடக் கூடாது என்பதில் அரசும் பள்ளிக் கல்வித்துறையும் இவ்வளவு அக்கறை காட்டுவது குறைந்த பட்சம் அனைத்து மாணவர்களும் குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளாவது பள்ளிக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான்.
 காரணம் கல்வி என்பது தமிழ்ஆங்கிலம்கணிதம்அறிவியல்சமூக அறிவியல் என்ற பாடத்திட்டங்களோடு மட்டும் சுறுங்கிப் போகிற ஒன்று அல்லஇந்த ஐந்து பாடங்களை மட்டும் நெட்டுறு போட்டு தேர்ச்சி பெறுவதற்காக மட்டுமே குழந்தை பள்ளி வளாகத்திற்கு வருவதில்லைஅவன் கற்றுக் கொள்வதற்கு மேற்சொன்ன ஐந்து பாடங்களைத் தவிர ஏராளம் இருக்கிறது பள்ளி வளாகத்தில்சாதிகள் இல்லைசாதியின் பெயரால் ஏற்றத் தாழ்வுகளை அனுமதிக்க்க் கூடாது என்பதை சொல்லித் தரவேண்டிய இடம் பள்ளிவயதில் பெரியவர்களை பெற்றவர்களை மரியாதையோடு மதித்து நட்த்த வேண்டும் என்பதை கற்றுக் கொள்கிற இடம் பள்ளிஆணாதிக்கத்தை பெண்ணடிமைத் தனத்தைஅடியோடு வேரறுக்கச் சொல்லித்தருகிற இடமாகவும்தன்னபிக்கையை வளர்க்கிற இடமாகவும் பள்ளி இருக்க வேண்டும்மொழிப் பற்றைதனது மண்மீதான பற்றினையும் அவன் பெற்றுக் கொள்கிற இடமாகவும் பள்ளிகள் இருக்க வேண்டும்முடைநாற்றம் வீசும் மூடப் பழக்க வழக்கங்களின்மீது தாரள்ளிப் பூசுகிற தார்மீக தைரியத்தை மாணவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய இடம் பள்ளி.

 அதனால்தான் ஒவ்வொரு மாணவனும் குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளாவது பள்ளியில் இருக்க வேண்டும் என்று அரசும் பள்ளிக் கல்வித்துறையும் கருதுகின்றனஅதனால்தான் எட்டாம் வகுப்பு வரைக்கும் தேர்ச்சி தோல்வியே வேண்டாம் என்று சட்டத்தின் மூலமாகவும் ஒன்பதாம் வகுப்பிலும் வடிகட்டிவிட வேண்டாம் நடைமுறையிலும் அவை வலியுறுத்துகின்றன.

 இடையிலேயே பள்ளிக்குப் போவதை நிறுத்திவிடுவதற்கான பட்டியலில் உள்ள அனைத்துக் காரணங்களையும் இல்லை என்றாக்க அரசு செயலில் இறங்கியுள்ளது என்ற உண்மையை மறைப்பதற்கில்லை.

 அனைவருக்கும் கல்வித் திட்டம் வந்த பிறகு வட்டார வள மைய அலுவலகத்தில் உள்ள ஆசிரியப் பயிற்றுனர்களும் மேற்பார்வையாளர்களும் இடை நின்றவர்களின் பட்டியலைத் தயாரிப்பதில் கவனமாயிருக்கிறார்கள்தாரித்த பட்டியலை கையில் வைத்துக் கொண்டு முகவரி கண்டுபிடித்து பிள்ளைகளை அழைத்துப் போய் அவர்களுக்கு அருகில் இருக்கும் பள்ளிகளில் சேர்த்து விடுகிறார்கள்தொடர்ந்து அந்தந்தப் பள்ளிகளோடு தொடர்போடு இருக்கிறார்கள்அப்படி கொண்டு வந்து சேர்க்கப் பட்ட பிள்ளைகளில் யாரேனும் இடையில் நின்று விடுகிறார்களா என்பதையும் கண்டறிந்து  மீண்டும் மீண்டும் மாணவர்களை மீட்டெடுத்து வந்து பள்ளிகளில் விடுகிறார்கள்.  இது மாதிரியான பத்து மாணவர்களை ஒரு பள்ளியில் சேர்க்கிற பட்சத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவே ஒரு சிறப்பு ஆசிரியரை அனைவர்க்கும் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்கிறது.

 இரண்டாண்டுகளுக்கு முன்னால் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் இடையிலேயே பள்ளிக்கு வருவதை நிறுத்திக் கொண்டிருந்தான் என்று வைத்துக் கொள்வோம்இப்போது அவனை மீண்டும் ஆறாம் வகுப்பில் சேர்த்தால் அவனது மனநிலை மற்ற மாணவர்களோடு ஒத்துப் போகாதுஅது விரும்பத் தகாத விளைவுகளைக் கொண்டுவரும்எனவே அவனை வயதுக்கேற்ற வகுப்பு என்ற திட்டத்தின் கீழ் அவன் வயதை ஒத்த மாணவர்கள் படிக்கும் வகுப்பில் சேர்த்து விடுகிறார்கள். அதாவது ஆறாவது படிக்கும் போது இடை நின்றவனை இப்போது எட்டாம் வகுப்பில் சேர்த்து விடுகிறார்கள்.
 அப்படிப்பட்ட மாணவர்களுக்கு வீடுகளில் கல்விக்கான வாய்ப்பு இல்லை எனும் பட்சத்தில் அவர்களுக்கான “ உண்டு உறைவிடப் பள்ளிகளில்அவர்களை சேர்த்து கண்காணிக்கிறார்கள்
 உளவியல் ரீதியாக பார்க்கும் போது இது மிக உயரியதும் அவசியம் தேவையானதுமான ஒரு திட்டம்ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோரும்,கல்விமீது அக்கறை கொண்டோரும் அவசியம் வரவேற்க வேண்டியதொரு திட்டம்ஆனால் எட்டாம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களின் சிக்கலை யார் உணர்வதுஅதுதான் இதுமாதிரி மாணவர்களுக்காக ஒரு சிறப்பு ஆசிரியரை அனைவருக்கும் கல்வித் திட்டம் வழங்குகிறதே என்று கேட்கலாம்பத்து மாணவர்களை ஒரு பள்ளியில் சேர்த்தால்தான் இந்த வாய்ப்புஒன்பது மாணவர்கள்தான் எனில் அதுவும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 எல்லாமே நன்றாகத்தானே தெரிகிறதுஅப்புறம் ஏனிந்தப் புலம்பல்என்றும் சிலர் கேட்கலாம்இவை அத்தனை திட்டங்களையும் மகிழ்ந்து வரவேற்கவே செய்கிறோம்மிக உயரியதும் மிக நல்ல விளைவுகளைத் தர வல்லவையுமான திட்டங்களே இவைகள்
 ஆனால் இவற்றில் எந்த ஒரு திட்டத்தையும் மெட்ரிக் பள்ளிகளிலோதனியார் சுயநிதிப் பள்ளிகளிலோ அல்லது மிகப் பெரிய அரசு உதவிப் பெறும் பள்ளிகளிலோ நடைமுறைப் படுத்த இயலாதுஅவர்கள் சாக்குகளில் வடிகட்டிய மாணவர்களையே சேர்ப்பார்கள்ஒவ்வொரு ஆண்டும் அல்லது குறைந்த பட்சம் ஒன்பதாம் வகுப்பிலாவது காடாத் துணி கொண்டேனும் மாணவர்களை வடிகட்டுவார்கள்.

 இது மாதிரியான அரசின் முன்னோடித் தொலைநோக்குத் திட்டங்களை அரசுப் பள்ளிகளிலும் எளிய நிலையில் உள்ள உதவி பெறும் பள்ளிகளிலும் மட்டுமே நடைமுறைப் படுத்துவது என்பது சாத்தியம்.

 இரண்டு விதமான பள்ளிகளும் ஒரே விதமான தேர்ச்சி விழுக்காட்டைத் தரவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் மீதே நமது விமர்சனம் இருக்கிறது.

 தற்போதுள்ள தேர்வுமுறை சில அறிஞர்களைமருத்துவர்களைசில வல்லுனர்களை உருவாக்கலாம்ஆனால் சிறந்த குடிமகன்களை உருவாக்கித் தராது என்ற அய்யமே நம்மை கவலை கொள்ள வைக்கிறது.

 மாறாக எல்லாத் திறமைகளையும் சோதித்துப் பார்க்கிற ஒரு கல்வித் திட்டத்தையும் தேர்வு முறையையும் சோதித்துப் பார்த்தால் என்ன?

 தோழர்.ஜீவகுமார் அவர்களின் இந்தக் கவிதையை இதனோடு பொறுத்திப் பார்ப்பது சரியாக அமையும் என்று தோன்றுகிறது,

 நீ பாடங்களில் முதலிடம்
நீச்சலில் இல்லை
நான் நீச்சலில் முதலிடம்
ஓவியத்தில் இல்லை
அவன் ஓவியத்தில் முதலிடம்
கவிதையில் இல்லை
அவள் கவிதையில் முதலிடம்
நாட்டியத்தில் இல்லை
எல்லாத் திறமைகளுக்கும் தேர்வு இல்லை
இருந்தால் தேர்ச்சி பெறாதவர் என
யாரும் இல்லை

கடிதம் 02

அன்பின் தோழர்களே,
வணக்கம்.
நலமில்லை. நலமா?

தொடர்ந்து வலைப் பக்கம் வர இயலவில்லை. கடந்த சில காலமாகவே மிகுந்த அசதியும், சில நேரங்களில் மயக்கமும்  வருவதுமாக இருந்தாலும் அவற்றை அவ்வளவாக கவனத்தில் கொள்ளாமலும் கொஞ்சம் அசட்டையாகவும் இருந்து விட்டேன்.

கடந்த வெள்ளி இரவு தொடங்கி சனி மாலை வரை கடுமையான முதுகு வலி.

மருத்துவர் கோவத்தின் உச்சிக்கே போய்விட்டார்.

இதுவரை எப்படி மாரடைப்பு வரவில்லை என்பதே ஆச்சரியம் என்றும், ஒருக்கால் இதற்கு முன்னமே மைல்ட் அட்டாக் வந்திருந்தால் கூட அதை உணர்ந்துகொள்ள இயலாத நிலையில்தான் உடம்பு இருப்பதாகவும் கடிந்து கொண்டார். அப்படி எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை என்று சோதனைகள் உறுதிப் படுத்தி விட்டன.

அதனால் முழுமையான ஓய்வும் தூக்கமும் அவசியம் என்று சொல்லியிருக்கிறார். ஒருவாரமாக ஒழுங்காக இருக்கிறேன் என்பதை தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

வாசிப்பு குறைந்திருக்கிறது. ஏற்கனவே பள்ளியில் உள்ள வேலைப் பளுவால் குறைந்திருந்த வாசிப்பை இது இன்னும் நகர்த்தியிருக்கிறது.

தோழர்களின் எழுத்தை குறிப்பாக அண்னன் நிலவன், கறந்தை ஜெயக்குமார், கீதா, முனைவர் ஜம்புலிங்கம், தோழர் காஸ்யபன், திண்டுக்கல் தனபாலன், காயத்திரி, மலர் தரு, தளிர் சுரேஷ் இன்னும் பலரது எழுத்துக்களை வாசிக்க இயலாதது கவலைக்குரியது. ஆனாலும் சேர்த்து வைத்து வாசித்து விடுவேன்.

இன்னொன்று அவசியம் அனைவரும் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்

Sunday, August 9, 2015

65/66, காக்கைச் சிறகினிலே, ஆகஸ்ட் 2015



உன்னிடம்
அடகு வைக்கப்பட்ட
ஆயிரமாயிரம் காதுகள் இன்னும்
மீட்கப் படாமலே கிடக்கின்றன
என்று ஒருமுறை கவிஞர் வாலி அவர்கள் M.S. விஸ்வநாதன் அவர்களைப் பற்றி எழுதியது அப்படியொரு சத்தியம்.

ராகம், ஸ்ருதி, சங்கதி என்று இசையின் எந்தஒரு நுணுக்கமும் தெரியாது என்றாலும் இசையின் வலிமையும் ஆற்றலும் நமக்கு தெரியும்.

இன்றைக்கும் சூப்பர் சிங்கராக இருக்கட்டும் அல்லது சன் தொலைக்காட்சியில் கங்கை அமரன் நட்த்தும் சப்த ஸ்வரங்கள் ஆக இருக்கட்டும் பழைய பாடல்களைப் பாடும்போது பாடகர்கள் பெரும்பாலும் M.S. விஸ்வநாதன் அவர்களின் பாடல்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும் அதுமாதிரி பழைய பாடல்களை தேர்ந்தெடுக்கும் நேரங்களில் தொலைக் காட்சி நேயர்களின் எண்ணிக்கை சன்னமான அளவிற்கேனும் கூடுவதும் அவர்கள் அந்த இசையால் அப்படியே பறந்துபோகும் அனுபவமுமே இதற்கு சாட்சியாகும்.

மட்டுமல்ல, இசைக்குழுவினரும் பாடகர்களும் அந்தப் பாடல்களைப் பாடும்போது நூறு விழுக்காடு கிடைக்காமல் தடுமாறுவது என்பதுகூட அவர்களின் இயலாமையை அல்ல M.S.விஸ்வநாதன் என்கிற மிகப் பெரிய ஆளுமையின் அசைத்துப் பார்க்க முடியாத பிருமாண்டத்தையே நம்மால் தரிசிக்க முடிகிறது.

குழந்தை மாதிரியான என்றெல்லாம் சொல்லமுடியாது, ஒரு குழந்தையேதான் M.S.விஸ்வநாதன்.

வாழ்த்துவதிலும் வளர்த்து விடுவதிலும் அவருக்கு நிகர் அவரே என்கிறார்கள்.

முதல்முறை இசை அமைப்பதற்காக இளையராஜா அவர்கள் இசைக்கருவிகளை வாடகைக்கு விடும் கடைக்கு சென்று பத்து வயலின்கள் வாடகைக்கு வேண்டும் என்று கேட்கிறார். கடைக்காரரிடம் பத்து வயலின்கள் இல்லை. ஆனால் பத்து வயலின்களில் இளையராஜா பிடிவாதமாக நிற்கிறார். அப்போது கடைக்கார்ர் சொல்கிறார், “ பத்து வயலின் வேணுமாம். பெரிய M.S.V பாரு.” அந்தப் பொழுதில் அவருக்கு தன் எதிரே நின்றிருப்பவர் வருங்காலத்தில் உலகையே தன் இசையால் கட்டிப் போடப் போகிற மாமேதை என்பது தெரிந்திருக்க நியாயமில்லை.

அந்தக் காலத்தில் M.S.V அவர்கள்தான் மெல்லிசை உலகின் மாமேதை.

முதல்நாள் இசை அமைக்கப் போகிறார் இளையராஜா. பக்கத்து தியேட்டரில் இருந்த M.S.V அவர்களிடம் பக்கத்து தியேட்டரில் யாரோ புதுசா ஒரு பையன் இசை அமைக்க வந்திருப்பதாகத் தகவல் வருகிறது. உடனே எழுந்து பக்கத்து தியேட்டருக்கு ஓடி வருகிறார்இளையராஜா இசையைத் தொடங்கும் வேலை மின்சாரம் நின்று போகிறது. அபசகுனமாக நினைத்து நொந்துபோன இளையராஜாவை தோளணைத்துபெருசா வருவப்பாஎன்று உச்சி முகர்ந்து வாழ்த்துகிறார் M.S.V. இந்தப் பக்குவமும் பெருந்தன்மையும் திரைத்துறையில் அரிதினும் அரிது.

இவரும் கவியரசும் இணைந்து நிகழ்த்திய ஜாலங்கள் ஏராளமானவை.

ஒரு கடிதத்தைக் கூட இவரால் இசையாய் பாடலாய்த் தரமுடியும்,

நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச் சுடரேஎன்று உயிர்ப்போடு இவரிடமிருந்து கசியும்.

நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்என்கிற திருமணப் பத்திரிக்கையைக் கூட இவரால் பாடலாகத் தர முடிந்தது.

அந்த மாமேதை இன்று நம்மிடையே இல்லை என்கிற வலியை அவ்வளவு எளிதாக நம்மால் கடந்துவிட முடியாது.

M.S.V என்னும் மாபெரும் சமுத்திரத்தில் எங்கள் காதுகளை மூழ்கித் தொலைத்துவிடவே ஆசைப் படுகிறோம்.
*************************************************************************************************************** 

அவர்களும் நம்மைப் போலவே ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்கள்தான்.
மகனாகவோ, மகளாகவோ வீட்டிற்குள் வளைய வளைய வந்தவர்கள்தான்.
ஏதோ ஒரு புள்ளியில் தாம் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்பதை கண்டறிந்த நொடியில் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

வளர்த்த நாய்க்குட்டி காணாமல் போனாலே பதறிப் போய் தெரு தெருவாய் தேடுபவர்கள் காணாமல் போன தாங்கள் பெத்து வளர்த்த இவர்களைத் தேடுவதே இல்லை.

வீட்டை விட்டு வெளியேறும் அந்தக் கணத்தில் வாக்குரிமை உள்ளிட்ட சகல உரிமைகளும் இவர்களுக்கு இல்லாமல் போகிறது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சாசாதகமான ஒரு தீர்ப்பின் உதவியோடு ஏழாண்டு கால போராட்டத்தின் விளைவாக ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கிறார் அக்கய் பத்மஷாலி.

இந்த வகையில் ஓட்டுனர் உரிமம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெருகிறார்.

வாழ்த்துக்கள் அக்கய்.

எனக்கு ஒரு தம்பி ஒரு திருநங்கை என்று எந்த வித நெருடலுமின்றி சொல்லும் காலம் என் மரணத்திற்குமுன் வந்தால் மகிழ்வோடு சாவேன்
**************************************************************************
"செயல்படுத்தவே முடியாத கொள்கையை இத்தனை ஆண்டுகளாக அமெரிக்க கடைபிடித்து வந்திருக்கிறது" என்றிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள். கியூபா மீதான அமெரிக்காவின் மனிதாபிமானமேயற்ற நடவடிக்கைகள் குறித்துதான் அவர் இப்படி கூறியிருக்கிறார்.
உண்மையை சொன்னால் செயல்படுத்தவே முடியாத என்று சொல்வதைவிட செயல்படுத்தவே கூடாத கொள்கைகள் அவை என்பதே பொருத்தமானதாகும்.
அமெரிக்க ஆட்சியாளர்களைப் போல் அல்ல அமெரிக்க மக்கள். அவர்கள் கியூபாவையும் கியூப மக்களையும் நேசிக்கிறவர்கள்.
கியூப மக்களும் ஆட்சியாளர்களும் அமெரிக்க மக்களை அப்படியொரு அன்பு கொண்டு நேசிக்கிறவர்கள்.
உலகின் எந்த மூலையிலிருந்தும் மருத்துவத்திற்காக அமெரிக்காவை நோக்கித்தான் தலைவர்களும் செல்வந்தர்களும் பறக்கிறார்கள். அமெரிக்காவின் மருத்துவ வசதி அவ்வளவு பேர் பெற்றது. ஆனால் அங்குள்ள மருத்துவம் கோடீஸ்வர கனவான்களுக்கானது. உலகில் உள்ள எந்த கோடீஸ்வர கனவானுக்கும் எந்தவித பாகுபாடின்றி அங்கு உயர்தரமான மருத்துவம் கிடைக்கும். ஆனால் அமெரிக்கனே ஆனாலும் அவன் ஏழையாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு கண்புறைக்கான மருத்துவம்கூட கிடைக்காது என்பதுதான் கசந்தாலும் உண்மை. இந்தியாவில் கூட பணக்காரனுக்கு ஒருவகை வைத்தியம் நடுத்தரனுக்கு ஒருவகை வைத்தியம் என்று வகை வகையாக கிடைத்தாலும் ஏதுமற்ற ஏழைக்கும் இலவச கண்புறை சிகிச்சைக்கு வழியுண்டு. ஆனால் அமெரிக்காவில் கண்புறை அறுவை என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியே ஆகும்.
அத்தகைய ஏழை உழைக்கும் அமெரிக்க மக்களை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து கண்புரை அறுவை செய்து மீண்டும் கொண்டுபோய் விடும் நாடு நாடு கியூபா என்று படித்திருக்கிறேன்.
இன்றைய ஒபாமாவின் பேச்சு கியூப மக்களும் அமெரிக்க மக்களும் அன்போடு உறவாட வாய்ப்பு உருவாகலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது
வாழ்த்துக்கள் ஒபாமா..

********************************************************************* 

"இந்தியப் பொருளாதாரத்தோடு சேர்த்து இந்தியும் வளர்கிறது" என்று போன இடத்தில் வைத்து சொல்லியிருக்கிறார் பிரதமர்.
கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
எந்த ஒரு மொழி வளரும்போது மகிழவும் சமஸ்கிருதமே அழிவை நோக்கி நகர்ந்தாலும் அது குறித்து கவலைப் படவுமே கற்றுக் கொடுத்திருக்கிறது என் மண்ணின் பண்பாடு.
எங்கள் மண்ணில் எங்களிடமிருந்தே எங்கள் மொழியை அப்புறப்படுத்தித்தான் இதை நீங்கள் சாத்தியப் படுத்த முயற்சிப்பதைத்தான் நாங்கள் கவலையோடு கேள்வி கேட்கிறோம்.
தெரியுங்களா பிரதமர் அவர்களே,

இந்தி வளர்வதை பெருமிதத்தோடு நீங்கள் பதியும்போது மகிழும் எங்களுக்கு அழிவிலிருந்து எங்கள் மொழியை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பது.



இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...