Saturday, March 25, 2017

பேத்தி எனக்களித்த வானம்

வரைந்து கொண்டிருந்ததில் கொஞ்சமாய் கிழித்து எனக்குக் கொடுத்தாள்

"ஏம்பா படத்தை கிழித்த?"

"ஷ்... படமில்ல, வானம்"

"சரி, வானத்த ஏம்பா கிழிச்ச?"

"எல்லா வானமும் எனக்கு வேணாம். நீ கொஞ்சம் வச்சுக்க"

இரண்டாம் மடித்து பாக்கெட்டில் பத்திரப் படுத்திக் கொண்டேன் ஒரு பேத்தி எனக்களித்த ஒரு துண்டு வானத்தை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...