Monday, August 3, 2026
Thursday, July 30, 2026
தெரிந்துகொள்ள எத்தனை இருக்கு
இஸ்ரேலைக் குறிப்பிடாமல் ஈரானை எப்படி
Tuesday, July 28, 2026
எதேதோ பிழைக்கும் தமிழ் மண்ணில்
அநேகமாக அமைச்சரான கையோடு ஆளுநரே வேந்தர் என்று பொருள்பட பேசிய தமிழ்நாட்டின் விரோதி நீங்கள்.
அவர் இதைத்தானே செய்வார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவரே மனோன்மணியம்தான்.
எங்களுக்கு
நீங்களோ, விஜயோ, கவர்னரோ
எல்லோரும் ஒன்றென்றும் தெரியும்
இந்த புறக்கணிப்பு நடிப்பென்றும் தெரியும்.
எதேதோ பிழைக்கும் தமிழ் மண்ணில்
நீங்களும் பிழைத்துவிட்டுப் போங்கள்
28.07.2026
10 2026
வன்னியரசுவிற்கு இது தெரியும்.
எச்சிதுப்பி எச்சி காய்வதற்குண்டான நேர மெனக்கெடல்தான்
முதலில் தொடர்ச்சியாக பதினோறு இதழ்களைக் கொண்டு வருவதற்கு ஒரு பிடிவாதம் வேண்டும். அது நிறையை இருக்கிறது நண்பர்களிடம்.
அதற்காகவே ஒரு விழா எடுத்து இவர்களைக் கொண்டாட வேண்டும்.
ஒவ்வொரு இதழும் நச்சென்று வந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
வழக்கம்போலவே உள்ளட்டையின் கலைமணி அவர்களின் கவிதையோடு தொடங்குகிறது இதழ். கவிதையும் வைத்திருக்கிற விதமும் அழகு.
பூமணியின் ரீதி, தோப்பு, எதிர்கொண்டு ஆகிய சிறுகதைகள் குறித்த கலைமணியின் பதிவுகள்,
‘’அர்ச்சனா 31 நாட் அவுட்’’ என்ற மலையாளப் படம் குறித்த கலைமணியின் பதிவு
கணேஷ்ராமும் கலைமணியும் தொகுத்தளிக்கும் செய்தித் துளிகள் என்று இதழ் விரிகிறது.
ஆனால் இந்த இதழில் முத்தாய்ப்பாய் படுவது கணேஷ்ராம் எழுதியுள்ள, ’’உலகமயத்தின் மற்றுமொரு சமூக மாறுதல்’’ என்ற கட்டுரையும், ‘’அதனால் என்ன இப்போ?’’ என்ற புனைவு கலந்த அபுனைவும். இரண்டும் வேறு வேறு காரணங்களுக்காக முன் வந்து நிற்கின்றன.
E20 பெட்ரோல் குறித்த கட்டுரை அப்படிவொரு நச். நடையில் இருந்து இதையும் கணேஷ்ராம்தான் எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
எத்தனால் கலந்த பெட்ரோல்தான் மோடிக்கான அடுத்த தலைவலியாக எழுந்துள்ள சூழலில் இந்தக் கட்டுரை வைக்கும் தரவுகளும் தர்க்கங்களும் அப்படியொரு அழகு.
எத்தனால் குறித்த அரசின் விளக்கங்களை வைத்து அதைத் தகர்த்திருக்கிறது இந்தக் கட்டுரை.
எதையும் சொந்தமாக்காமல் அனைத்தையும் வாடகைக்கு நுகர்வதன் மூலம் நிறைய நுகரலாம் என்கிற தேன் தடவிய தாராளமயத்தின் நச்சுபிஸ்கட் ஏறத்தாழ எல்லோரையும் விழுங்கிக்கொண்டிருக்கிற ஆபத்தை உலகமயத்தின் மற்றுமொரு சமூக மாறுதல் புரிகிற மாதிரி பேசுகிறது. இங்கு புரிகிற மாதிரி என்பதை அழுத்தி அடிக்கோடு இட்டு வாசிக்கக் கேட்கிறேன்.
ஒரு கட்டத்தில் சந்தா முடிந்ததும் நம்மிடம் நாம் நுகர்ந்த ஏதும் இருக்காது. ரெஃபெரன்ஸ் இல்லாத சூழலில் கருத்துச் சண்டைக்கு வாய்ப்பே இருக்காது. அவன் சொல்வதுதான் எல்லாம். மறுக்கத் தரவற்றுப் போகும் அபாயத்தைக் குறித்து கவலைப்படும் கணேஷை சக ஊழியன், தோழன் என்பது தாண்டி பிடித்துக்கொள்ள வேண்டும்.
நான்
காதலென்னும்
கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
அந்தக்
கருணைக்கு நான்
பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே
என்ற பாடல் யாருக்குப் பிடிக்காது. என்னவொரு இசை. என்னவொரு ஃபீல். இப்படி விரசமில்லாம எவனால எழுத முடியும் என்பார் என் அப்பா.
கூர்ந்து பாருங்களேன், இதுதான் பெண்ணடிமைத்தனத்தின் உச்சம்.
நான் ஜெசி ராணியை அப்படிக் கொண்டாடுவதற்கு அவரிடம் இருக்கும் ஃப்ளோதான் காரணம்.
இதே ஃப்ளோல இதற்கு எதிராக ஜெசி எழுதும்போது, குறித்து வையுங்கள் அவர் பாபுலர் எழுத்தாளராகி விடுவார்.
எலான் மஸ்க் குறித்த, அதானி குறித்த எல்லாமும் அழகு.
போவோமா ஊர்வலம் எனக்குப் பிடித்தப் பகுதி. இன்னும் கொஞ்சம் மெனகெடுங்களேன் என்பது உரிமையோடான என் நேயர் விருப்பம். விஷயத்தில் பிரச்சினை இல்லை. டெலிவெரியில் சன்னமோ சன்னமாக மெனக்கெட்டால் பூம்புனலின் சிக்நேச்சர் இதுதான்.
ஒன்றைச் சொல்ல வேண்டும்.
கணேஷ்ராமிற்குள் ஆயிரம் கட்டுரைகள் ஊறிக்கிடக்கின்றன.
எச்சிதுப்பி எச்சி காய்வதற்குண்டான நேர மெனக்கெடல்தான், ப்ரொஃபஷனல் டச் முழுவீச்சில் மிளிரும்.
பூம்புனல் இல்லை எனில் நானே அவரிடம் கட்டுரை கேட்பேன். இருக்கு அவரிடம்.
படைப்புகள் வர ஆரம்பித்தால் வேற லெவல்தான்.
மெனக்கெடும் அனைவரையும் இறுகப் பற்றிக் கொள்கிறேன்.
அந்த ஏழைகளுக்கு நிலம் கிடைக்கும்வரை மகிழ்ச்சியோடு அடி வாங்குவோம்
இந்தப் படத்தை தம்பி Senthil Vel பக்கத்திலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் படத்தோடு,
போராடும் தோழமைக் கட்சிகளுக்கே பாதுகாப்பில்லை. மக்களுக்கெங்கே பாதுகாப்பிருக்கப் போகிறது என்று சொல்லியிருந்தார்.
உண்மைதான். என்ன, போராடுவது யாரெனினும் எந்த ஆட்சியிலும் பாதுகாப்பில்லை என்பதுதான் கள எதார்த்தம்.
அவிநாசிக்கு அருகேயுள்ள ஈட்டி வீராம்பாளையத்திலுள்ள அறிவொளி நகரில் வீட்டு நிலமற்ற மக்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது.
இது நடந்தது 1994 இல்.
ஆனால் அந்த நிலங்களை அளந்து பயனாளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை.
இது தொடங்கியபோது ஜெயலலிதா முதல்வர்
பிறகு 1996 முதல் கலைஞர் முதல்வர்
2011 முதல் மீண்டும் ஜெயலலிதா முதல்வர்
பிறகு பன்னீர் செல்வம் முதல்வர்
பிறகு பழனிசாமி முதல்வர்
அதன்பிறகு என் ஆயுளின் சிறந்த முதல்வர் என்று நான் கருதும் ஸ்டாலின் முதல்வர்
இப்போது விஜய்
எல்லோரது காலத்திலும் போராடியாயிற்று
எல்லோரிமும் அடிவாங்கியாயிற்று
இப்போதும் 15 நாட்களுக்குள் அளந்து தருவதாகக் கூறியிருக்கிறார்கள்.
இல்லையென்றால் 17.08.2026 அன்று மீண்டும் வருவோம்
அடிவாங்குவோம்
அந்த ஏழைகளுக்கு நிலம் கிடைக்கும்வரை மகிழ்ச்சியோடு அடி வாங்குவோம்
அவ்வளவுதான் செந்தில்
காணாமல் போனவர்கள் யாரேனும் உள்ளனரா
Tuesday, June 2, 2026
ஹெப்சிபா 100
பில்டர் காபியும் ஹிந்து பேப்பருமாக இருந்த எழுத்துலகில் அக்கானி இனிப்பாக பனைமணம் கமழ எழுதியவர் ஹெப்சிபா.
Monday, May 11, 2026
கலைஞர் + நீங்கள், ஸ்டாலின் சார்
தாலாட்டை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி தூங்குவது?
அறிவுரையை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி கேட்பது?
பாடத்தை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி படிப்பது?
எல்லாவற்றையும் நிறுத்துங்கள்
என் பசிக்கு
பதில் சொல்லுங்கள்”
ஆனாலும் விடாது வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இதுகுறித்து பேசுகிறோம்.
ன்ன செய்வது, எங்களது நன்றி அப்படிப்பட்டது ஸ்டாலின் சார்.
எனக்கு வயது 63 ஆகிறது சார். எனக்கு விவரம் தெரிந்து ஏழு முதல்வர்களைப் பார்த்திருக்கிறேன். பெருந்தலைவர், அண்ணா இவர்கள் ஆண்ட காலத்தில் நான் இருந்தேன் என்றாலும் விவரம் தெரியாது.
இரா.எட்வின்.
Tuesday, April 28, 2026
09 2026
பூரிப்பைத் தரும் பொங்கும் பூம்புனல்
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்...
-
“ சாதி ஒடுக்குமுறை உள்ள அல்லது சமத்துவமற்ற எதனோடும், அது தமிழ்த் தேசியமாகவே இருப்பினும் அதனோடு எனக்கு சம்மதம் இல்லை” சென்னை இக்ஷா அரங்கத...