Wednesday, January 24, 2024

அந்தப் பேராலயத்தின் திறப்பு எத்தனை நிறைவைத் தந்திருக்க வேண்டும்

21.01.2024 அன்று நண்பர் ஒருவரின் மகளது திருமணத்திற்குப் போயிருந்தோம்

காரில் இருந்து (வாடகைக் கார்தான்) இறங்குகிறோம்
கண்ணில் படுபவர்கள் எல்லாம் புன்னகைக்கிறார்கள்
தலையை அசைத்து “வாங்க” சொல்கிறார்கள்
இன்னும் சிலர் கையெடுத்து வணங்கி வரவேற்கிறார்கள்
யாரென்றே தெரியாது
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும்போது “சாப்டீங்களா” கேட்கிறார்கள்
நண்பரின் நெருங்கிய தோழர்கள் 75 பேர் யூனிஃபார்மில் சுழல்கிறார்கள்
கொஞ்ச நேரத்தில் எங்களை அறியாமலே நாங்களும்
“வாங்க” சொல்கிறோம்
“சாப்டீங்களா” கேட்கிறோம்
Kalai Mani நான்கைந்து பேரை ”வாங்க சாப்பிடலாம்” என்று டைனிங் ஹாலுக்கு அழைத்துப் போகிறாள்
யாரென்று அவளுக்கும் தெரியாது
அவள் யாரென்று அவர்களுக்கும் தெரியாது
பாப்பாவின் அம்மாவைப் பார்த்து
“ஏம்மா, கல்யாணம் அவளுக்கா? உனக்கும் உங்க வீட்டுக்காரருக்குமா. சும்மா மெதக்கறீங்க” என்று கேட்கிறேன்
வெட்கப் படுகிறார்
அது ஒரு எளிய திருமணம்
சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமல்ல
கலந்து கொண்ட எல்லோரது கண்களிலும் “அன்பு” தென்பட்டது
எல்லோரிடத்தும் மகிழ்ச்சி
பேரனந்தம்
அப்படி ஒரு நிறைவை எல்லோரிடத்தும் காணமுடிந்தது
இவை அத்தனையும் எங்களையும் அப்பிக் கொண்டது
அப்பிக்கொண்ட அந்த அந்த அன்பும் சமாதானமும் இந்த வார்த்தையை தட்டச்சு செய்கிறவரை இருக்கிறது
இன்னும் கொஞ்ச காலத்திற்கு இருக்கும்
காரோட்டிய பிள்ளைக்கு அழைப்பு
மகிழ்ந்து பேசுகிறான். அப்படி கவனிச்சாங்கப்பா, சந்தோசம்னா சந்தோசம், வந்து சொல்கிறேன் என்கிறான்
ஒரு எளிய திருமணம்
போதாமை இருக்கும்
கடன் இருக்கும்
எல்லாம் கடந்து
அந்த அன்பு, புன்னகை, மகிழ்ச்சி
நிறைவு
அன்பிற்குரிய என் நண்பர்களே
அவ்வளவு பெரிய ஆலயத் திறப்பு
எவ்வளவு அதிகமான அன்பைத் தந்திருக்க வேண்டும்
எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்
எவ்வளவு ஆழமான சமாதானத்தைத் தந்திருக்க வேண்டும்
ஆண்டவன் வீடு என்கிறீர்களே
எனில்,
அந்தப் பேராலயத்தின் திறப்பு எத்தனை நிறைவைத் தந்திருக்க வேண்டும்

ஏன் இவை எல்லாம் விளையவில்லை?

ஏன் மண்ணெங்கும் வெறுப்பு?
இப்போதும் சொல்கிறோம்
ஆண்டவன் இல்லை
ஆனால் உண்டு என்று நம்பும் உங்கள் நம்பிக்கையை ஏற்கிறோம்
உங்கள் தவறைச் சுட்டினால் ராமனை குற்றம் சொல்கிறோம் என்று தயவு செய்து திசை திருப்பாதீர்கள்
அந்த ஆலயத்தின் மீது எங்களுக்கு புகார் இல்லை
கட்டப்பட்ட இடம் மீதுதான்
இப்போதாவது யோசியுங்கள்
தவறு புரியும்
எல்லோரையும் அரவணைத்து எதிர்காலத்தை அணுகுங்கள்
”யாரொடும் பகை கொள்ளலன்” என்பது நீங்கள் கொண்டாடும் கம்பன் சொன்னது
அன்பு
அன்பு மட்டுமே இந்தியாவைக் கட்டும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...