Sunday, September 2, 2018

இளைப்பாறிவிடாதே மகளே....





இளைப்பாறிவிடாதே மகளே
அதற்குள்
இருக்கின்றன கணக்குகள் நிறைய
அரசியல் செய்கிறோம் உன் மரணத்தை வைத்தென்றார்கள்
இதுதானா படிப்பதற்கு 
இல்லவே இல்லையா வேறெதுவும் 
என்றார்கள்
ஆயிரத்து நூற்றி எழுபத்தாறு எடுத்தவளால்
நீட் தேற முடியாதெனில் 
பாடத்தில் கோளாறென்றார்கள்
நீட்டைத் தேறியவனால் 
ஆயிரத்தி நூற்றி எழுபத்தியாறு எடுக்க முடியாதெனில்?
சாய்சில் விடுகிறார்கள் இதை 
எதையும் விடாது படித்து 
கரைகண்ட கனவான்கள்
தெரியுமா மகளே
நீட் எழுத உன் தம்பிகளும் தங்கைகளும்
தேசம் முழுக்க அலைந்த கதை?
கேள்விகள் தவறாம்
ஆனால் இழப்பீடு கிடையாதாம்
கண்டடைந்து விட்டார்கள் 
நம்மை ஒழிப்பதற்கான ஆயுதம் 
ஒன்றை
முளைக்கும் இனி
தவறான கேள்விகளுக்கான
பயிற்சி நிலையங்கள்
முடித்துவிடவில்லை எதையும் நாங்கள்
உன்னை இறுதியாய்க் குளிப்பாட்டியபிறகு
கருப்பும்
சிவப்பும்
நீலமும்
உன் பெயரால் களத்திலேனும் 
கரம் கோர்ப்போம்
அந்த அரசியலை 
நாங்கள்
செய்து முடிக்கும் வரை
மகளே
அருள்கூர்ந்து
இளைப்பாறி விடாதே

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...