Thursday, July 26, 2018

16.07.18

வண்ணக்கதிரில் வந்திருந்த கவிதையை வாசித்துவிட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செல்லத்துரை அழைத்தபோதுதான் விழித்தேன். கவிதையை அவரால் முடிந்தமட்டும் கொண்டாடித் தீர்த்தார். அந்தக் கவிதை இதுதான்,
”துப்பிவிட்டுக் கடக்கின்றனர்
அன்பிற்காக யாசித்தபடி நீளும்
என் காலி கோப்பையில்
அவரவரவரும்
தம்மீதான யாரோ யாரோவின் அன்பாலும்
யாரோ யாரோவின் மீதான தமது அன்பாலும்
நுரைத்துப் பொங்குகிறது
யாரோ யாருக்கான யாரோ யாரின்
அன்பு
பருக முடிகிறது என்னால்
யாரோ யாருக்கான யாரோ யாருடைய
அன்பையும்
பருகுகிறேன்
அநிச்சையாக நீள்கிறதென் காலிக்கோப்பை
யாரேனும் ஒருவர் துப்பாமலா போவார்கள்
எனக்கே எனக்கான
ஒரு சொட்டு அன்பை”
முடித்ததும் இன்று தமுஎச கூட்டம் இருக்குபோல என்றார். நான் ஏற்கனவே வேறு ஒரு கூட்டத்திற்கு நாள் கொடுத்த விவரத்தை சொல்லி வர இயலாமையை விளக்கினேன்.
சரி சரி ஆதவனிடம் பேசுங்கள் என்றார்.
***********
அடுத்து தோழர் Aadhavan Dheetchanya அவர்களோடு வர இயலாமை குறித்து விளக்கிவிட்டு, “சொல்லுங்க தோழா செய்யறேன்” என்றேன்.
அதன் பொருள் அதுதான். இப்பவும் சொல்கிறேன்<
“சொல்லுங்க ஆதவன், செய்கிறேன்”
*************************
பிறகு சிறுவாச்சூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த பெருந்தலைவர் பிறந்த தின விழாவிற்கு புறப்பட்டு போனேன்.
பொதுவாகவே வாட்ஸப் க்ரூப் என்றால் ஒருவிதமான அலுப்பே தோன்றுவது பொது புத்தியாகிப் போன காலத்தில் “நம்ம ஊரு நல்ல ஊரு” என்ற வாட்ஸப் க்ரூப் பிள்ளைகள் தமது ஊரின் ஊஒது பள்ளியை தத்தெடுத்து கோடை முழுக்க அந்தப் பள்ளி ஆசிரியைகளோடு இணைந்து வீடு வீடாகப் போய் பிரச்சாரம் செய்து ஒன்றாம் வகுப்பில் 17 குழந்தைகளை சேர்த்துள்ளனர்.
சென்ற ஆண்டு முதல் வகுப்பு சேர்க்கை 13 என்பதை சேர்த்துப் பார்த்தால் இதன் வலிமை புரியும். சென்ற ஆண்டைவிட பெரும்பாண்மை பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்க்கை குறைவு என்ற உண்மை இந்த அமைப்பின் பிள்ளைகளையும் அந்தப் பள்ளியின் ஆசிரியைகளையும் கை எடுத்து கும்பிட வைக்கிறது.
இளைஞர்களும் பெற்றோர்களும் என்று ஒரு நூறுபேர் திரண்டிருந்தனர். அனைத்துவகையான கல்வித்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.
எப்படி பாரதியின் கனவை காமராசர் நிறைவேற்றினார் என்று பேசிவிட்டு பொதுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய அவசியத்தை சொல்லிவிட்டு வந்தேன்.
யுவான் சுவாங் மேல்படிப்பிற்காகாக நாளந்தாவில் இருந்து காஞ்சி வந்தார் என்ற ஒரு தகவல் இருப்பதை சொல்லி அது உண்மை எனில் அதை வரலாறாக்க வேண்டும் என்றும் சொல்லி வந்தேன்.
கிராம மக்கள் கல்வி அரசியலை மிக நுட்பமாக உள் வாங்குகிறார்கள்.
அந்தப் பள்ளியை கொண்டுபோக வேண்டும் என்ற வெறி வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கு இருக்கிறது.
போக எவ்வளவு மறுத்தும் கவர் கொடுத்தார்கள். 2000 இருந்தது. அவர்களில் நால்வருக்கான இரண்டாண்டு சந்தாவாக அதை Kaakkai Cirakinile கு அனுப்பிவிட்டேன்
வாழ்த்துவோம்
*************************************
இன்று தம்பி க. மூர்த்தி யின் பிறந்த நாள். காலையில் வாழ்த்து சொல்ல அழைத்திருந்தேன். எடுக்கவில்லை. இரவு அழைத்து வாழ்த்தைப் பெற்றுக் கொண்டார்.
நீண்டு பேசினோம். நிறைய கிடைத்தது. நம்பிக்கை துளிர்த்தது.
60 கிலோவும் கங்காக இருக்கிறார். ஊதிப் பெரிதாக்குவோம். தேசத்தின் அல்லனவற்றை, குறிப்பாக சாதியை பொசுக்கட்டும்
***************
#சாமங்கவிந்து ஆறு நிமிடங்கழித்து
16.07.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...